பங்களாதேஷ் - "குண்டு ஒண்ணு வெச்சுருக்கே!"

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலும் மற்றும் 63 மாநிலங்களிலும் தொடர்ச்சியாக 400 குண்டுகள் வெடித்தன. தற்போது எல்லைப் பாதுகாப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்த தில்லி வந்த பங்களாதேஷின் Bangaladesh Rifles இன் Director General ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி கூட்டுபத்திரிகையாளர் சந்திப்பில் "தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அருகில் உள்ள ஒரு பெரிய நாடுதான் காரணம்" என்றார். அது எந்த நாடென கேட்ட இந்தியப் பத்திரிகையாளருக்கு "It is you!" என்று பதிலளித்துள்ளார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. உடனே மத்திய அரசும் மறுத்தும் கண்டித்தும்

"This is a baseless and scurrilous allegation and is all the more shocking because it has been made against a friendly country and particularly after the two countries have had useful and constructive talks between the BDR and BSF." என்று பதிலளித்துள்ளது.

நட்பு நாடான இந்தியாவிடம் சரிவர நடந்து கொள்ளத் தெரியவில்லையே.
முதலில், இந்தியாவிற்கு விருந்தினராக பேச்சுவார்த்தை நடத்த வந்துவிட்டு இப்படியொரு செய்தியை உண்மையோ பொய்யோ பத்திரிகையாளர்களிடம் சொல்ல வேண்டிய தேவையென்ன? இப்படிச் சொல்லிவிட்டு வாருங்கள் பேசலாம் என்றால் எந்த நாடாவது ஒத்துதான் வருமா? இந்தச்செய்திக்கு ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு பேசியிருந்தால் மதிப்பாவது கிடைத்திருக்கும். குருட்டாம்போக்காக இப்படியொரு அபாண்டமான பழியை சுமத்த என்ன தேவை? பங்களாதேஷின் அடிப்படைவாத எதிர்க்கட்சிகளின் ஆதரவோ இல்லை ஷேக் ஹஸினாவின் அரசு ஆதரவோயில்லாமல் இப்படி ஒரு செய்தி கொடுக்க முடியாது. பாகிஸ்தானிடம் "cross border terrorism" பத்தி சந்திகிழிய பேசுகிறவர்கள் இந்தியர்கள். ஆனால் இந்தியா எங்கள் நாட்டிலே தீவிரவாதம் செய்கிறது என்று திசைதிருப்பி அரசியல் பண்ணும் வேலைதானே இது?

நாம் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம் என்ற காரணத்திற்க்காக அடிமை சாசனம் எழுதித்தர சொல்லவில்லை. நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்று கேட்பது தவறா? கங்கையைக் குறித்து நடந்த தகராறு, எல்லைத் தகராறு, BSF-ஐ அச்சுறுத்துவது, சட்டத்துக்கு புறம்பாக immigrants-ஐ தடுக்காதது என்று ஏகப்பட்டது செய்கிறீர்கள். இத்தனை இருந்தும் புழுவாக நினைத்து தன்னிச்சைப்படி நடந்து நசுக்காமல் மரியாதையுடன் நட்பு பாராட்டும் இந்தியாவிற்கு தரும் பதில் மரியாதை இதுதானா?

கொசுறு: இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களில் ஒரே ஒருவர் தான் of indian origin. கியாஸுதின். ஆனால் அவரும் 17 வருடங்களாக பங்களாதேஷிலேயே வசிப்பவர்.

The Hindu
NDTV

3 Comments:

  1. Ganesh Gopalasubramanian said...

    பெரிய குண்டா வச்சுட்டீங்க..... ஆனாலும் உண்மையாகவே படுகிறது


  2. rv said...

    கணேஷ்,
    //ஆனாலும் உண்மையாகவே படுகிறது //

    புரியலையே... நாம் தான் வெச்சோம்னு சொல்றீங்களா?


  3. rv said...

    Statesman News Service
    NEW DELHI, Oct. 29. — Bangladesh today clarified that it did not suspect any Indian involvement in the 100-odd bomb blasts in the country in August and agreed that both countries would “provide consular access to insurgents and criminals arrested by them”.

    ---

    இத்தன நாள் ஆகியிருக்கு. ஏதோ, இப்பவாவது தப்புன்னு ஒத்துக்கிட்டாங்களே.

    சுட்டி


 

வார்ப்புரு | தமிழாக்கம்