பொதுவா இந்த அவசர உலகத்துல எதையுமே நிறுத்தி நிதானமா பார்க்கிறதுக்கு நேரமிருக்குறதில்ல. இந்த லட்சணத்துல நிதானமா செயல் படுறதுக்கா நேரமிருக்கப்போவுது?
அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்கள்/பொருட்கள்... (கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொறுமை தேவை)
கொஞ்சம் அடிதடி, குத்து, டமால், டுமீல்!
இது கலை!
இது? பாவப்பட்ட மட்டைப்பந்து ஆட்ட வெறியர்களுக்காக..
டிஸ்கி: அல்லா வீடியோலயும் சவுண்ட் வரும். தலயோடத தவிர.
231. K.I.S(low).S!
225. வந்தாடியே! வந்த வழி போயிடு ஓடியே!
மும்பையில் நடந்துகொண்டிருக்கும் கூத்தப்பத்தி, அதான்பா அமிதாப் பச்சன் அண்ட் உத்தர பிரதேசம் vs தி ஸ்டேட் ஆப் மஹாராஷ்ட்ரா (c/o இராஜ் தாக்குடே) பத்தி பதிவெழுதுலாம்னு நினச்சுகிட்டிருந்தேன்.
அப்போ பிரத்யட்ச தெய்வம் கனவுல வந்து 'என்னையப் பத்தி ஒரு தொடர் போடறேனு சொல்லிட்டு இப்படி ஜகா வாங்குறியே, இது உனக்கே நல்லா இருக்கா'னு கேட்டாரு. சரினு தலகிட்ட 'உம்ம மேட்டர் கெடக்குது. இந்த மும்பைல உபிக்காரவுகல்லாம் வந்து அட்டூழியம் செய்யறாங்களாம். இந்த நார்த்தீ கும்பலால மராட்டியர்களுக்கு வேலைபோச்சாம், மானம் போச்சாம் மருவாதை போச்சாம். அப்படியே அமைதிப்பூங்காவான மும்பைல இவனுக வந்ததுலேர்ந்து எல்லா கிரிமினல் ஆக்டிவிடிஸும் ஜாஸ்தியாயிருச்சாம். அதுனால அவங்களையெல்லாம் வெளியேத்தணும்னு தாக்குடே அண்ணாச்சி சொல்றாருனு' சொன்னேன்.
அதுக்கு தல ‘இதெல்லாம் காலங்காலமா எல்லா ஊர்லயும் நடக்குற மேட்டர் தானப்பா.. இதுல என்ன புதுசா கண்டுட்ட? ஹிட்லர் போல்பாட் தொடங்கி ஒரு பெரிய க்ரூப்பே இப்படித்தானே வெறியத்தூண்டி வெளாண்டாங்க? இப்ப நம்ம கதையவே எடுத்துக்கயேன். இந்த வருச 2008 விம்பிள்டன்ல இதே மாதிரி நடக்கப்போகுது'. உலகவலைப்பதிவுகள்ல முதல்முறையாக வருங்காலத்துல வரத நீ இப்பவே போட்டு நியுஸ மக்களுக்குச் சொல்லிடு'னு சொன்னாரு.
தல சொன்னத குறள்வாக்கா எடுத்துகிட்டு ஒரு வார்த்தை கூட என்சேர்க்கை இல்லாம போட்டுட்டேன்! வேறு எவர்கூடயோ எது கூடயோ லின்க்கெல்லாம் பண்ணி என்னய்யவும் புலம்பவச்சிருதாதீங்கப்பூ!
---------------
Photos from Menstennisforums
224. ஆதிக்க சக்தியும் அடங்கிடா தோழரும்!
ஆதிக்க சக்திகள் எப்பொழுதும் தங்களின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகள் செய்துகொண்டேதான் இருக்கும். அப்படி தக்கவைத்துக்கொள்வதற்காக அதன் முக்கிய ஆயுதம்: மற்றவரை அடக்கியாள்வதற்கு அவர்களிடம் பயத்தைத் தூண்டிக்கொண்டேயிருக்கவேண்டும். எந்த ஒரு நொடியில் அந்த சக்தியிடம் பயமற்று ஒரு இளைஞன் விழிப்படைகிறானோ, பீடத்தில் இருக்கும் பீடைகளின் வீழ்ச்சிக்கான புரட்சி துவங்கிவிட்டதாகவே நாம் கருத வேண்டும் என்று புரட்சியியல் தத்துவ நிபுணர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
தன் தொழிலில், தான் இயங்கும் சமூகத்தில் தான் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு அத்தனை புகழும் தனக்கு மட்டுமே என்று சுரண்டும் பாசிஸ்ட்கள் இனி கனவில்தான் அவ்வாதிக்கத்தை காணவேண்டும் என்று நம்மைப் போன்ற சாதாரணர்களையும் பெருமைப்படவைக்கும் -empowering the people வகையறா - மாபெரும் புரட்சிகரமான சரித்திர நிகழ்வுகள் நம் வாழ்நாளில் நடப்பது மிகவும் அரிது. மற்றவர்களுக்கு கிடைக்கும் நியாயமான அந்தஸ்தையும் தன் பேராசையால் தட்டிப்பறித்தால் வேகமும் கோபமும் உள்ள இளைஞர்கள் பொறுமையாக இருக்கமுடியுமா?
ஆதிக்க சக்திக்கு குரல்வளையை நெறிக்கும் அத்தகைய ஆதிக்கத்தை செலுத்துமளவுக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி தேவையற்றது. ஆதிக்கம் செலுத்தும் குழுவிற்கு அத்தகைய தகுதியே இருந்தாலும் - அந்த திறமையை மட்டுமே கொண்டு ஒரு சமூகத்தையே தன் பாதத்தினடியில் போட்டு மிதித்தல் எனும் கொடுமை நடந்துகொண்டிருக்கும் வேளையிலே, ஒரு சக்தியின் வெற்றியில் மற்றவர்களின் தோல்வி இருக்கிறது என்பதும் அதனூடாக மற்றவர் அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்ற கோணத்தை முற்றிலும் மறந்துவிட்டு, மனசாட்சியில்லா ஊடகங்கள் அடிக்கும் ஜல்லியில் - வென்றவனின் ‘திறமையை' மட்டுமே பறைசாற்றி; சாதாரண மக்களுக்கு அவை இழைக்கும் கொடுமையின் அளவை நாம் கணக்கிட எண்ணுமுன் இத்தகைய 'திறமை' என்ற தம்பட்டத்தின் காதைகிழிக்கும் ஒலியில் மக்களை இருட்டிலேயே வைத்திருப்பதன் அவசியத்தை ஊடகங்களும் உணர்ந்துள்ளன என்பதையும் அதனோடு கூட முக்கியமாக தங்களின் மொத்த வீரியமும் அத்தகைய இருட்டிலேயே அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துவைத்துள்ள ஆதிக்க சக்திகளைப்பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
புரட்சியின் விதை விதைக்கப்படுவதற்கு முக்கிய காரணி மற்றவர்களுக்கு வாய்ப்பும் வாழ்வும் மறுக்கப்படுவதினால் மட்டுமே என்பதை ஆதிக்கசக்திகள் உணர்வதில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் பண்பும் பொறுமையும் இருந்தால் ஆதிக்கசக்திகள் உருவாகாமலேயே போயிருக்கும் என்பதுடன் அப்படி ஒரு சக்தி உருவாயின் தனக்கே எல்லாம் என்று பேராசையாவது பட்டிருக்காது என்பது வெள்ளிடைமலை.
தன் சமுதாயத்துக்கு நேர்ந்த கொடுமைகளால் ஒரு புரட்சியாளன் தன் இரத்தத்தால், உழைப்பால், வீரத்தால், வீரியத்தால், கோபத்தால் எடுக்கும் ஆயுதம் அது வெறும் புல்லானாலும் அவன் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் அவன் மக்களின் வாழ்வை மறுக்கும் சக்திக்கு அது சம்மட்டி அடியாகவே விழும். ஏன் அடி, இடியாகவே விழும்.
இப்படி நடக்கும் ஒரு உரிமைப்போரில் நாம் எவர் பக்கம் என்று யோசிக்க வேண்டிய தேவை இருக்காது. ஏன், அப்படி யோசிக்க முயலும் 'அறிவாளி முகமூடிகளை வெட்கமில்லாமல் அணிந்துகொண்டு அம்மணமாக அலையும்' பரதேசிகள் நமக்கு தேவையுமில்லை. அவர்கள் நம் பக்கம் இல்லையென்று எதிரிப்பக்கம் போனாலும்கூட, அத்தகைய பாசிஸ்ட் சிந்தனையாளர்கள் இல்லாமல் போனது நம் பேறு என்று பெருமைபட்டுக்கொண்டு தொடர்ந்து புரட்சியாளனுக்கு ஊக்கமும் உந்துதலும் அளிக்க வேண்டியது நம் கடமை என்று உணருதல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------
நிற்க.
டெபனிஷன் போடாமல் பரந்துபட்ட பிரபஞ்சத்தில் அட்டாக்கத்தி சுற்றுவது எதற்கு என்று குழப்பமுறும் துர்பாக்கிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுமுன்... ஒரு ரசிகன் என்ற இழிநிலையிலிருந்து சற்றே சுயமுன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தேடுதலை என்னுள் தந்தவருக்கு காணிக்கையாக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒண்ணுமில்லை ஐயாக்களா.. நம்ம தலை பெடரர ட்ஜோக்கோவிச் தோக்கடிச்சுட்டாரு. நேர் செட்கணக்கில் வேற. அதோடு விடாம 'The King (Roger Federer) is dead. Long live the (new) King! (Djokovic)” னு ட்ஜோக்கரோட அம்மா பேட்டி வேற கொடுத்தாங்க. பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும். இப்படி எடுத்தேன் கவுத்தேனெல்லாம் அறிக்கை விடக்கூடாது, அதுவும் பெடரரைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி கண்டிப்பா யோசிக்கணும்னு சொல்லப்போனேன். ஆனா அதெப்படி நீ சொல்லலாச்சுனு சில பேரு கிளம்பிட்டாங்க. அப்புறம் யோசிச்சு பார்த்ததுல நான் வெறும் ரசிகன் என்ற நுனிப்புல் கண்ணோட்டத்தில் பாத்துகிட்டிருக்கேங்றது எனக்கே புரிஞ்சுது.
நமக்குதான் ஜெயிக்கறவன கண்டா ஆகாதே...அப்படி ஜெயிச்சவனைப் பார்த்து பிடிக்குதுனா நம் வளர்ப்புல ஏதோ குறையிருக்குங்கறதுதான் உண்மை. underdog என்னவேணா சொல்வாரு.. இதையும் சொல்வாரு இதுக்கு மேலயும் சொல்வாருன்னு சொல்லி, அதான் ஆதிக்கசக்தி ஒழிஞ்சிச்சே... அத தகர்த்த புரட்சியாளன எத்தனை தடைகளையும் அவதூறுகளையும் தாண்டி இத்தகைய சமூக புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறான். அவனை அனாலைஸ் செய்ய நீ யாரு. பொத்திகிட்டு போடானு அடுத்தவனை கேட்காம அவர் சொல்வதை தவறு, அவையடக்கம், நாவடக்கம் வேண்டுமென்றெல்லாம் சொல்ல நான் யார்? அதான் செய்தவமா இந்தப்பதிவு.
ஆதிக்க சக்தியான பெடரர் ஒழிக!
புரட்சித்தளபதி உரிமைப்போராளி நோவாக் வாழ்க வாழ்க!
ஏன் ஆதிக்க சக்தியா?
இதப் பாருங்க.. இல்லாட்டி இதையாவது பாருங்க.
இத்தனை ஆண்டுகளாக டென்னிஸை தன் கைப்பிடியில் இறுக்கிப்பிடித்து மற்ற வீரர்களை ஜெயிக்க விடாமல் அடாவடி செய்த அரக்கனுக்கு கொடுமைக்காரனுக்கு குடைபிடிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? இவனை ஓட ஓட விரட்டிய ட்ஜோக்கருக்கு பிடிக்கவேண்டியதுதானே ஒவ்வொரு மானமுள்ள மனிதனும் செய்யவேண்டிய கடமை?
என்னைப்போல வெறும் ரசிகர் மன்ற விசிலடிச்சான்குஞ்சாக - தட்டையான சிந்தனையுடன் ஒற்றை பரிமாணத்தில் உழலாமல் - அரசியல், சமூகம், மொழி, மனிதவுணர்வு என சிறிதேனும் படித்துத் தெளிந்து அனைவரும் ஆதிக்க சக்தியழிந்ததை குறிப்பதாய், இனி ஜனவரித்திங்கள் 27ஆம் தேதியை அனைவரும் நோவாக் தினமாக அனுசரித்து அவர் புகழ் பரப்பவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.
என்னை இப்பதிவிட வைத்தவருக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
222. Shaken, Not Stirred!
The Joker has arrived... incredulous as it may seem, Thrashed the G.O.A.T and took his crown.
5-7 3-6 6-7
ஸ்ட்ரெயிட் செட்ஸ்.... ஹூம்...
அடுத்து பிரான்ஸ்.. :((((((((
Wir verloren eine Schlacht! Nicht der Krieg! Bedauerlich, aber nichts katastrophalen nach zehn aufeinander folgenden Grand Slam Finale!
Allez Roger!
UPDATE
The Gentleman: gives no excuses for his loss... and praises Djoker...
Post Match Interview
216. பிறவிக்குணம், மூளை கழண்ட கேஸு
பிறந்த பிறவியினாலேயே வரும் குணங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே என்று நாம் இங்கே விவாதம் நடத்தி கிட்டத்தட்ட ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில், சன் ரீவியில் என்ன காரணத்தாலோ ஒளிபரப்பத் துவங்கப்பட்டு பாதியிலேயே நின்று போன அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் தன் பேச்சிலே குறிப்பிட்டு சொன்ன ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்ததனாலும் அதை வலையுலகில் யாரும் இதுவரை பதிவு செய்யாததன் காரணமாகவும் இதோ அதன் சாராம்சம். (quote unquote அல்ல. ஆனா அது மாதிரி இது...)
ஆட்சியில் இருக்கும் போதோ இல்லாத போதோ; ஆட்சிச்சக்கரம் சுழலும் போதோ சுழலாத போதோ; தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டியது என் பிறவியிலேயே வந்த கடமை என்ற உணர்வு இருப்பதாலேயே இந்த வயதிலும்.....
இப்படி அவர் பேசி முடித்ததும் சன் டிவி என்ன காரணத்தாலோ திடுதிப்பென்று நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். நமீதா Uவாக இடுப்பில் அணிந்திருந்த ஆடை சற்றே நழுவி A ஆக அவையில் அனைத்து அகவையிலும் இருந்த கலையுலகத் தொடர்புடையவர்கள் மட்டுமே கண்டு களித்த அந்த வரலாற்று நிகழ்வை இருட்டடிப்பு செய்த சன் டிவிக்கு - இது வேண்டுகோள் வைக்கக்கூடிய இடமா என்று தெரியாததால்- கடுமையான கண்டனத்தையும் மறைக்காமல் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என்று ஒரு சாதா தமிழனாக இருப்பதால் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனிவே அடுத்த மேட்டர் - அதுல் சொந்தி
பார்த்தவுடனேயே இரத்தம் கொதித்தது எனக்கு. இப்படிப்பட்ட ஒரு காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாதியே இல்லையே என்று உள்ளம் கலங்கும்வேளையில் நானாவது நமது பண்பாட்டின்படி எதிர்க்க வேண்டும் என்று துணிந்து இப்படி எழுதக்கூடியவன் ஒரு (குடிகாரன், எனக்கும் அவனுக்கும் ஜென்மப்பகையல்ல, அதுல் என்ற பெயருக்கு நான் எதிர்ப்பாளனுமல்ல, சொந்தி என்ற பெயரை படித்தவுடன் அவன் தொந்தி எப்படி என்று ஆராயும் முட்டாளுமல்ல) மூளை கழண்ட கேஸு - இவன் மூ.க.கேவாக இருக்கலாம் என்று விக்கிபீடியா கட்டுரை எழுதியவரே சொல்லியிருக்கிறார். நான் சொல்லவில்லை. விக்கிபீடியா சொல்கிறது. நான் சொன்னால் படிக்கும் உங்களுக்கு சந்தேகம் வராது என்று தெரிந்தாலும் சந்தேகமிருப்போரின் வீடுகள் அருகில் இல்லாத காரணத்தால் இதோ சுட்டி தருகிறேன். படித்துத் தெளிவுறலாம்.
ஷா ருக் என்று பிரபலமாக இந்திப்படவுலகில் அறியப்படும் நடிகரின் அல்லக்கைதான் இந்த சொந்தி. உண்மையில் சொல்லப்போனால் ஆடு/குரங்கு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஷா ருக் 'அசத்தப்போவது யாரு'வில் வந்தால் நிரந்தர சாம்பியனாகியிருப்பார். உலகெங்குமுள்ள தமிழர்களின் உள்ளங்களில் ஒளிவிளக்கேற்றும் பேரன்புமிக்க இயக்குநர் திலகம் ஆண்ட்ரூ இவரை ஷோ வில் சேர்க்க ஆவன செய்தால், தமிழன் டிவி பார்த்து சிரித்தே சிரித்தே தன் சோகமனைத்தையும் மறந்துவிடுவான். உடனே போய் நேச்சர் பவர் பார் சோப்பும் வாங்குவான்.
இந்த சொந்தி ஒரு எளுத்தாளனே அல்ல என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இவனுடைய 'படைப்புகள்' காலச்சுவட்டிலோ, தீராநதியிலோ ஒருதடவை கூட பிரசுரிக்கப்பட்டதில்லை. சிற்றிலக்கிய சம்மேளனத்தின் R&D பிரிவான ஞாநியின் பூணூல் என்ற நுண்ணாராய்ச்சியில் இவன் பங்கெடுத்ததில்லை. சல்மாவிடம் கில்மா பண்ணியதில்லை. பா.ராவையோ எஸ்.றாவையோ இவன் வைததில்லை. சிவாஜிக்கு பின் (பா.) விஜயாவது தெரியுமா இவனுக்கு? நவீன இதிகாசகர்த்தா கவிப்பேரரசுவைத் தெரியுமா? குறைந்தபட்சம் வெளிக்கிட்டிருக்கும் மார்பகங்களும் கீறப்பட்ட யோனிகளும் என்று ஒரு கவிதையாவது எழுதியிருந்தானெண்டால் இவன் பெண்ணீயவாதி என்றாவது ஒத்துக்கொண்டிருக்கலாம். அதற்கு வழியில்லை. இதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது. பேரறிஞர்கள் சொல்கிறார்கள். நான் வழிமொழிகிறேன் அவ்வளவே.
ஆகமொத்தம் எளுத்தாளனல்லாத ஒரு வெத்துவேட்டு ப்ளாக்கர்.காம்/ஐ.பி.என் தளம் இலவசமாக எழுதத்தருகின்றதே என்ற -ஓசியில் கொடுத்தால் எதையும் நக்கிப்பார்க்கும் அறிவிலிகளின் வழியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்து இவன் எழுதிக்கிழிப்பதையும் எழுத்து/படைப்பு/ஆக்கம் என்ற போலிப்போர்வையில் படிப்பவரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
இந்த சொந்தி சொல்கிறான். ஷாருக் கான் இந்திய சினிமாவின் ரோஜர் பெடரராம். @#@$^#&*@*(&^@)(*__(_*(*@^#@%%$@!
நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா? குடிபோதையில் இருப்பவர்கள் எழுதியதையெல்லாம் பிரசுரிக்கும் ஐ.பி.என் ஏனிப்படி ஷாருக்கிற்கு அல்லக்கையாக இருக்கிறது? ஒரு கமல்ஹாசனோடு ரோஜரை ஒப்பிட்டாலும்கூட பொறுத்திருந்திருப்பேன். போயும் போயும் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டோட கம்பேர் செய்ய என்ன துணிச்சல்? நீ எந்தக் கடையில் சாராயம் வாங்குகிறாய்?
உனக்கு ஷா ருக்கை அப்படி பிடிக்குமென்றால் பால் அபிஷேகம் செய், கட் அவுட் வை, அலகு குத்தி காவடி எடு. எப்படி என்று சொல்லிக்கொடுக்க எங்கள் சூப்பர் ஸ்டார்/தளபதி/அஞ்சா நெஞ்சனின் தொண்டர்கள் வரிசையில் நின்று காத்திருக்கிறார்கள். ஆனா அடக்கம் என்ற சொல்லிற்கும், திறமை என்ற சொல்லிற்கும் நவீன விளையாட்டுலக அகராதியில் இலக்கணமாக திகழும் ரோஜரை தயவு செய்து உன்னோட குப்பைத்தொட்டிற்குள் இழுக்காதே. விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
203. பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல....
நிரந்தர சூப்பர் ஸ்டார் இவரு மட்டுந்தான். அதுவும் ரெண்டு வருஷம் தள்ளிப் போயிகிட்டேயிருந்த கனவு. நடுவுல புது வில்லனும் வந்து ஜெயிச்சுப்புட்டான்.... இந்த தடவையாவது நம்ம தலைவரு வருவாரா? ஜெயிப்பாரா? எல்லார் மனதிலும் இருக்கும் கேள்விகள் இதுதான் இப்போதைக்கு.
இந்த வருஷம் புதுக்களம்... என்றும் இளமையான நாயகன். இதுவரைக்கும் வந்த லுச்சா பசங்களையெல்லாம் தூக்கி பந்தாடி சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தன் தானு நிருபிச்சாச்சு! பாதிக்கிணறு தாண்டியாச்சு.. ஆனா இனிமே ஆரமிக்கறது அடுத்த கட்ட ஆட்டம். வில்லனும் லேசுபட்டவன் இல்ல...
ஆனா ஆட்டதோட ட்ரெயிலர் பாத்தவரைக்கும் எந்த பச்சாவும் வாலாட்ட முடியாதுன்னு சொல்லி அடிக்கிறாப் போலவே இருக்கு...
வாடா வாடா வாங்கிப்போடா... வாய்ல பீடா போட்டுக்கடா...
போடா போடா பொழச்சுப்போடா.... நடாலு.... வாடா வாடா வாங்கிப்போடா....
ஆஆஅமா... பேரக் கேட்டோனச் சும்மா.. அதிருதில்ல...
ரோஜர் பெடரர்!