224. ஆதிக்க சக்தியும் அடங்கிடா தோழரும்!

ஆதிக்க சக்திகள் எப்பொழுதும் தங்களின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகள் செய்துகொண்டேதான் இருக்கும். அப்படி தக்கவைத்துக்கொள்வதற்காக அதன் முக்கிய ஆயுதம்: மற்றவரை அடக்கியாள்வதற்கு அவர்களிடம் பயத்தைத் தூண்டிக்கொண்டேயிருக்கவேண்டும். எந்த ஒரு நொடியில் அந்த சக்தியிடம் பயமற்று ஒரு இளைஞன் விழிப்படைகிறானோ, பீடத்தில் இருக்கும் பீடைகளின் வீழ்ச்சிக்கான புரட்சி துவங்கிவிட்டதாகவே நாம் கருத வேண்டும் என்று புரட்சியியல் தத்துவ நிபுணர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

தன் தொழிலில், தான் இயங்கும் சமூகத்தில் தான் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு அத்தனை புகழும் தனக்கு மட்டுமே என்று சுரண்டும் பாசிஸ்ட்கள் இனி கனவில்தான் அவ்வாதிக்கத்தை காணவேண்டும் என்று நம்மைப் போன்ற சாதாரணர்களையும் பெருமைப்படவைக்கும் -empowering the people வகையறா - மாபெரும் புரட்சிகரமான சரித்திர நிகழ்வுகள் நம் வாழ்நாளில் நடப்பது மிகவும் அரிது. மற்றவர்களுக்கு கிடைக்கும் நியாயமான அந்தஸ்தையும் தன் பேராசையால் தட்டிப்பறித்தால் வேகமும் கோபமும் உள்ள இளைஞர்கள் பொறுமையாக இருக்கமுடியுமா?

ஆதிக்க சக்திக்கு குரல்வளையை நெறிக்கும் அத்தகைய ஆதிக்கத்தை செலுத்துமளவுக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி தேவையற்றது. ஆதிக்கம் செலுத்தும் குழுவிற்கு அத்தகைய தகுதியே இருந்தாலும் - அந்த திறமையை மட்டுமே கொண்டு ஒரு சமூகத்தையே தன் பாதத்தினடியில் போட்டு மிதித்தல் எனும் கொடுமை நடந்துகொண்டிருக்கும் வேளையிலே, ஒரு சக்தியின் வெற்றியில் மற்றவர்களின் தோல்வி இருக்கிறது என்பதும் அதனூடாக மற்றவர் அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்ற கோணத்தை முற்றிலும் மறந்துவிட்டு, மனசாட்சியில்லா ஊடகங்கள் அடிக்கும் ஜல்லியில் - வென்றவனின் ‘திறமையை' மட்டுமே பறைசாற்றி; சாதாரண மக்களுக்கு அவை இழைக்கும் கொடுமையின் அளவை நாம் கணக்கிட எண்ணுமுன் இத்தகைய 'திறமை' என்ற தம்பட்டத்தின் காதைகிழிக்கும் ஒலியில் மக்களை இருட்டிலேயே வைத்திருப்பதன் அவசியத்தை ஊடகங்களும் உணர்ந்துள்ளன என்பதையும் அதனோடு கூட முக்கியமாக தங்களின் மொத்த வீரியமும் அத்தகைய இருட்டிலேயே அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துவைத்துள்ள ஆதிக்க சக்திகளைப்பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியின் விதை விதைக்கப்படுவதற்கு முக்கிய காரணி மற்றவர்களுக்கு வாய்ப்பும் வாழ்வும் மறுக்கப்படுவதினால் மட்டுமே என்பதை ஆதிக்கசக்திகள் உணர்வதில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் பண்பும் பொறுமையும் இருந்தால் ஆதிக்கசக்திகள் உருவாகாமலேயே போயிருக்கும் என்பதுடன் அப்படி ஒரு சக்தி உருவாயின் தனக்கே எல்லாம் என்று பேராசையாவது பட்டிருக்காது என்பது வெள்ளிடைமலை.

தன் சமுதாயத்துக்கு நேர்ந்த கொடுமைகளால் ஒரு புரட்சியாளன் தன் இரத்தத்தால், உழைப்பால், வீரத்தால், வீரியத்தால், கோபத்தால் எடுக்கும் ஆயுதம் அது வெறும் புல்லானாலும் அவன் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் அவன் மக்களின் வாழ்வை மறுக்கும் சக்திக்கு அது சம்மட்டி அடியாகவே விழும். ஏன் அடி, இடியாகவே விழும்.

இப்படி நடக்கும் ஒரு உரிமைப்போரில் நாம் எவர் பக்கம் என்று யோசிக்க வேண்டிய தேவை இருக்காது. ஏன், அப்படி யோசிக்க முயலும் 'அறிவாளி முகமூடிகளை வெட்கமில்லாமல் அணிந்துகொண்டு அம்மணமாக அலையும்' பரதேசிகள் நமக்கு தேவையுமில்லை. அவர்கள் நம் பக்கம் இல்லையென்று எதிரிப்பக்கம் போனாலும்கூட, அத்தகைய பாசிஸ்ட் சிந்தனையாளர்கள் இல்லாமல் போனது நம் பேறு என்று பெருமைபட்டுக்கொண்டு தொடர்ந்து புரட்சியாளனுக்கு ஊக்கமும் உந்துதலும் அளிக்க வேண்டியது நம் கடமை என்று உணருதல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------
நிற்க.

டெபனிஷன் போடாமல் பரந்துபட்ட பிரபஞ்சத்தில் அட்டாக்கத்தி சுற்றுவது எதற்கு என்று குழப்பமுறும் துர்பாக்கிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுமுன்... ஒரு ரசிகன் என்ற இழிநிலையிலிருந்து சற்றே சுயமுன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தேடுதலை என்னுள் தந்தவருக்கு காணிக்கையாக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒண்ணுமில்லை ஐயாக்களா.. நம்ம தலை பெடரர ட்ஜோக்கோவிச் தோக்கடிச்சுட்டாரு. நேர் செட்கணக்கில் வேற. அதோடு விடாம 'The King (Roger Federer) is dead. Long live the (new) King! (Djokovic)” னு ட்ஜோக்கரோட அம்மா பேட்டி வேற கொடுத்தாங்க. பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும். இப்படி எடுத்தேன் கவுத்தேனெல்லாம் அறிக்கை விடக்கூடாது, அதுவும் பெடரரைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி கண்டிப்பா யோசிக்கணும்னு சொல்லப்போனேன். ஆனா அதெப்படி நீ சொல்லலாச்சுனு சில பேரு கிளம்பிட்டாங்க. அப்புறம் யோசிச்சு பார்த்ததுல நான் வெறும் ரசிகன் என்ற நுனிப்புல் கண்ணோட்டத்தில் பாத்துகிட்டிருக்கேங்றது எனக்கே புரிஞ்சுது.

நமக்குதான் ஜெயிக்கறவன கண்டா ஆகாதே...அப்படி ஜெயிச்சவனைப் பார்த்து பிடிக்குதுனா நம் வளர்ப்புல ஏதோ குறையிருக்குங்கறதுதான் உண்மை. underdog என்னவேணா சொல்வாரு.. இதையும் சொல்வாரு இதுக்கு மேலயும் சொல்வாருன்னு சொல்லி, அதான் ஆதிக்கசக்தி ஒழிஞ்சிச்சே... அத தகர்த்த புரட்சியாளன எத்தனை தடைகளையும் அவதூறுகளையும் தாண்டி இத்தகைய சமூக புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறான். அவனை அனாலைஸ் செய்ய நீ யாரு. பொத்திகிட்டு போடானு அடுத்தவனை கேட்காம அவர் சொல்வதை தவறு, அவையடக்கம், நாவடக்கம் வேண்டுமென்றெல்லாம் சொல்ல நான் யார்? அதான் செய்தவமா இந்தப்பதிவு.

ஆதிக்க சக்தியான பெடரர் ஒழிக!

புரட்சித்தளபதி உரிமைப்போராளி நோவாக் வாழ்க வாழ்க!

ஏன் ஆதிக்க சக்தியா?

இதப் பாருங்க.. இல்லாட்டி இதையாவது பாருங்க.

இத்தனை ஆண்டுகளாக டென்னிஸை தன் கைப்பிடியில் இறுக்கிப்பிடித்து மற்ற வீரர்களை ஜெயிக்க விடாமல் அடாவடி செய்த அரக்கனுக்கு கொடுமைக்காரனுக்கு குடைபிடிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? இவனை ஓட ஓட விரட்டிய ட்ஜோக்கருக்கு பிடிக்கவேண்டியதுதானே ஒவ்வொரு மானமுள்ள மனிதனும் செய்யவேண்டிய கடமை?

என்னைப்போல வெறும் ரசிகர் மன்ற விசிலடிச்சான்குஞ்சாக - தட்டையான சிந்தனையுடன் ஒற்றை பரிமாணத்தில் உழலாமல் - அரசியல், சமூகம், மொழி, மனிதவுணர்வு என சிறிதேனும் படித்துத் தெளிந்து அனைவரும் ஆதிக்க சக்தியழிந்ததை குறிப்பதாய், இனி ஜனவரித்திங்கள் 27ஆம் தேதியை அனைவரும் நோவாக் தினமாக அனுசரித்து அவர் புகழ் பரப்பவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

என்னை இப்பதிவிட வைத்தவருக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

223. மாட்டிக்கொள்ளாமல் ப்ளாக்கர்பேஷன் செய்வது எப்படி?

ஓண்ணுமில்ல நிறைய பதிவர்கள் புதுசா கிடைச்ச வலையுலக சுதந்திரத்த வெங்கலக்கடையில் யானை புகுந்த கதையா பயன்படுத்தறாங்க. ஒரு சின்ன ரியாலிடி செக் அவ்ளோதான். உங்களுக்கும் அவங்களுக்கும் பயனுள்ள தகவல்களா இருக்கும்னு நம்பறேன். நன்னி!
----------------------------
What is Defamation?

It is a law created to protect individuals or organisations from unwarranted, mistaken or untruthful attacks on their reputation. This means the publication of any statement which:

* Exposes them to hatred, ridicule or contempt
* Causes them to be shunned or avoided
* Discredits them in their trade, business or profession
* Generally lowers them in the eyes of right thinking members of society

Posting a defamatory statement on an Internet message board or community area is the same as publishing it in a newspaper or magazine and can result in a court case if a formal complaint is made. Both the publisher, (in this case the blogspot.com), and the author, (you), risk being sued for making a defamatory statement. And there is no Legal Aid for defamation.


How to avoid it?

Get your facts right. In Indian law, as in most countries around the world and its likely that the country you live in, if its democratic - follows similar laws, YOU have to prove that what you write is true, rather than the person you've targeted having to prove that you're wrong. And proving things in court can be a very difficult and costly process.

Don't make these common mistakes...

* Repeating others...

If you repeat defamatory remarks about people or organisations made by other people, you will be just as liable to be sued as they are.

-- படிச்சுப்ப்பாக்காம 'ரிப்பீட்டேய்', 'சூப்பர் பதிவு', ‘நன்னாச் சொன்னேள் போங்கோ' போடாதீங்க


* Jumping to conclusions...
If Mr X is seen going into a hotel room with a call-girl, this does not necessarily mean he enjoyed a 'night of passion', and will certainly not prove that he did.
-- இவன் எழுதுறது எனக்குப்பிடிக்கலை = இவன் பேரு பாப்பாரப்பேராட்டம் இருக்கு = இவன் ஒரு பாப்பான் = இவன் ஒரு பாசிஸ்ட் = இவன் ஒரு பன்னாடை = இவனோட அம்மா ஒரு... இப்படினெல்லாம் ஈக்வேஷன் போட்டுகினே போகக்கூடாது.


* Exaggeration...
Be very careful about the words you use. A factory may release chemicals into the air, but describing it as 'poisoning the atmosphere' could well be defamatory.
-- பண்ணாடை, பரதேசின்னு எல்லாம் யாரையும் எக்காரணத்தைக்கொண்டும் பொது இடத்துல திட்டக்கூடாது. பொது இடம் என்பது இந்த வலையுலகமும் சேர்ந்ததுதான். அப்பா அம்மா சொல்லிக்கொடுத்திருப்பாங்களே சின்ன வயசுல?


* Representing all sides...
Presenting both sides of an argument is often good practice, but not a defence against defamation.
-- தமிழ்ப்படத்துல வர மக்கள் கருத்தாட்டம் 9 பேரு ஹீரோ நல்லவன்னு சொல்லவச்சி, ஒருத்தனை மட்டும் அவனைக் கெட்டவன்னு சொல்றதெல்லாம் வேலைக்காவாது மாமோய்!


* Innuendo...
To say Mrs Y doesn't recycle her waste paper may sound harmless. But to people who know that Mrs Y is a Green Party activist, the implication is that she is hypocritical in her politics.
-- அதாவது தமிழே சொல்லித்தராத ஹிந்தி பள்ளிக்கூடத்துல தமிழினத்தலைவர் ஒருவரின் (Mr. X) பிள்ளைகள் படிக்கிறாங்கங்கறது உண்மையான செய்தியாக இல்லாத பட்சத்தில் சொல்பவர் மீது இச்சட்டம் பாயும்.


* Inference...
If somebody was guilty of fraud once, calling him a fraudster in a way which might suggest he's still doing the same can be seen as defamation.
-- அத்தை விடுங்க, இங்க நாம என்ன பண்றோம்? யாரோ தாத்தா பண்ண தப்புக்கு பேரனை பண்ணாடை பரதேசின்னு சொல்லறோமே!


* 'Allegedly'...
In spite of its use in a popular current affairs panel game, adding the word 'allegedly' to a statement you cannot prove does not stop it being defamation.
--வீரப்பன் நிஜமாவே மரம் வெட்டினானோ என்னமோ! கன்னடப்பிரசாத் ஒருவேளை ஒழுக்கமானவனாக இருக்கலாம், இருள்நீக்கி சுப்புணி வீச்சருவாளால ராதாகிருஷ்ணனை போட்டுத்தள்ளிட்டு சொர்ண்மால்யா கூட என்னவோ செஞ்சான் -- இப்படினெல்லாம் குருட்டாம்போக்குல அடிச்சு விடாம யோசிச்சு எழுதணும்னு சொல்றாங்க போல!


Defending a statement


In the event that you are accused of defamation, there are several defences...

1. Truth.

நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதை பயன்படுத்தலாம்.


2. Fair comment: The defendant is allowed to comment on facts truly stated, as long as the comment is fair and the defendant is not motivated by actual malice.
-- உதாரணத்துக்கு பதிவர் 'D' ஒரு பன்னாடை, நாய். அவன் சாதியைத் தூக்கிப்பிடிக்கிறான். அந்த சாதித்திமிர் ஒழிய வேண்டும் என்று சொன்னாலும்...
பொதுநலம், சமூகப் பொறுப்பு போன்ற பிரதிவாதங்கள் தனிமனித அல்லது இனவெறியைத்தூண்டும் கருத்துகள் அதே பயனரின் பெயரில் இடம்பெற்றிருந்தால் defamation என்றே கருதப்படும்.

3. Privilege: On certain occasions, the courts have held that policy and convenience require that a person should be free from responsibility for the publication of defamatory words. These occasions constitute privileges. Privilege may be absolute, such as statements in the House of Commons or the Courts. It may be qualified, in that it may be lost if the publication is unnecessarily wide or made with malice.

4. Innocent dissemination: This last defence is potentially very important in cyber libel. If a defendant proves that his statements were true and in public interest, then his conduct is regarded as lawful. In addition, if the defendant can show that he had no intention to defame (the plaintiff), then he could avoid liability.
ஹி ஹி... சொல்லிக்கலாமே.. நான் சொல்வதெல்லாமே உண்மை.. என்னைத்தவிர உண்மையானவன் இல்லை... and so forth..

*************
The global nature of the Internet also raises some interesting procedural questions for the libel lawyer. In traditional libel law there are three different types of defamatory statements:

i) The first is a statement that is defamatory on its face and which is obviously defamatory.

ii) The second is a statement, which contains false innuendo. False innuendo is a defamatory statement that has an inferential meaning, therefore only persons with the necessary contextual knowledge appreciate that the statement is defamatory. Since statements on the internet are published globally, their inferential meanings may vary depending on the geographic or cultural location of the reader or the newsgroups or the Usenet group involved.
-- முதுகுல நெளியுது, கொண்டை தெரியுது போன்ற வலைப்பூவுலகத்தினருக்கு மட்டுமே புரிந்த பொன்மொழிகள் இதுல வரும்னு நினைக்கிறேன்.

iii) The third category is legal innuendo. While not defamatory on their face, these statements are defamatory when viewed together with extrinsic circumstances. Once again, contextual knowledge may render a statement defamatory in one jurisdiction but not in another.
**************


Indian Penal Code on Defamation:
Chapter XXI of the IPC exclusively talks of defamation. Section 499 prescribes the offence:

Whoever, by words either spoken or intended to be read, or by signs or by visible representations, makes or publishes any imputation concerning any person intending to harm, or knowing or having reason to believe that such imputation will harm, the reputation of such person, is said . . . to defame that person.

Explanation 2. - It may amount to defamation to make an imputation concerning a company or an association or collection of persons as such.

Section 500 prescribes the punishment in such cases:

Whoever defames another shall be punished with simple imprisonment for a term, which may extend to two years, or with fine, or with both.

Employer's liability
A company can be held liable for the conduct of its employees. If an employee, during working hours, e-mails a defamatory remark about a competitor company to a colleague, the firm could be held liable for defamation even if the employee's actions were not authorised or expressly prohibited.

-------------------------------------------------------------
அனானிமைஸர், torproject என்று பலவழிகள் உங்களை அனானிகளாக மாற்றுவதற்கு இருந்தாலும் - உங்களின் உண்மையான இருப்பிடத்தையும் அதன்மூலம் பெயர், ஜாதகம் போன்றவற்றை பாதிக்கப்பட்டவர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் பெறமுடியும். யாருமே நூறு சதம் அனானி கிடையாது.



Disclaimer: The information provided on this site is intended as a guide only. It does not constitute legal advice. Text Abstracts © BBC and LegalServicesIndia.


நன்றிகளும் சுட்டிகளும்

http://www.legalservicesindia.com/articles/defcy.htm
http://www.vakilbabu.com/Laws/Classify/Classify17.htm
http://www.vakilbabu.com/Laws/Classify/Classify18.htm


---------------------------------------------------------------
கடைசியாக ஒரு வீடியோ: ப்ளாக்கிங் பற்றி.
தமிழ் வலைப்பூக்களுக்குனே வீடியோ எடுத்தா மாதிரி இருக்கு.
ஆனால் Adult Content. So You have been warned!

222. Shaken, Not Stirred!

The Joker has arrived... incredulous as it may seem, Thrashed the G.O.A.T and took his crown.

5-7 3-6 6-7

ஸ்ட்ரெயிட் செட்ஸ்.... ஹூம்...

அடுத்து பிரான்ஸ்.. :((((((((


Wir verloren eine Schlacht! Nicht der Krieg! Bedauerlich, aber nichts katastrophalen nach zehn aufeinander folgenden Grand Slam Finale!

Allez Roger!




Image Courtesy © Jura

UPDATE
The Gentleman: gives no excuses for his loss... and praises Djoker...
Post Match Interview

221. சத்தமில்லாமல் ஒரு சாதனை!

தமிழ்நாட்டுல எல்லாரும் என்னமோ திமுக, அதிமுகலாம் ,அவங்கவங்க நிலைப்பாட்டுக்கு தகுந்தாற்போல, சாதனையோ சோதனையோ செஞ்சதா மாத்தி மாத்தி பேசிக்கிறோம். ஆனா பாருங்க.. நம்மாளுங்க பேசத்தான் லாயக்கு!

அங்க என்னடான்னா வட இந்தியால சத்தமில்லாம ஒரு சாதனைய செஞ்சு காட்டிருக்காங்க உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி. உத்திர பிரதேசத்திற்கு முதல்வர் ஆகுறது ஒரு சாதனைனாலும் இந்த வருஷத்துல அவங்க செஞ்சிருக்கிறது மெய் சிலிர்க்க வைக்கிறது. பில்டர் நிறைய் கொடுக்க வேண்டிருக்கு. காரணம் சாதனை அந்தா மாதிரி.

இந்த வருடத்தில் இந்தியாவிலேயே அதிகம் வருமான வரி கட்டப்போகும் அரசியல் தலைவர் மாயாவதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாசத்துலேர்ந்து டிசம்பர் வரைக்கும் அவங்க கட்டிருக்கிற வருமான முன்வரி ரு. பதினைந்து கோடி. வரும் மார்ச் மாதம் வருடமுடிவில் மேலும் ரூ. ஐந்து கோடி கட்டுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆகக்கூடி அவரின் வருடத்திய வருமானவரி ரூ. இருபது கோடியைத் தொட்டால், அவரின் சொந்த வருமானம் க்டந்த ஆண்டில் ரூ. அறுபது கோடிக்கும் அதிகமாய் இருந்திருக்கலாம் என்று பிஸினஸ் ஸ்டாண்டர்ட் ஊகிக்கிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக வருமானவரி கட்டும் தரப்பட்டியலில் முதல் 25க்குள் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் என் வருத்தமெல்லாம் கோலிவுட் பாதுசா 'கிங் காங்க்' கான் இந்த வருஷம் ரூ. இருபத்தியேழு கோடி முன்வரி கட்டும்போது ஒரு முதல்வர் அவரை விட ஏழு கோடி கம்மியாக கட்டுவதா? அதுவும் உத்திரப்பிரதேசத்தை இன்னும் பிரித்தால் இந்த சாதனை செய்ய முடியுமா? இதனை உணர்ந்தே, பிரிக்குமுன்னே சாதனையை முறியடிக்கவேண்டும் என்று செல்வி மாயாவதியின் முயற்சிக்கு எடுத்துக்காட்டு: போன வருடம் அவர் முழுவதுமாக கட்டிய மொத்த வருமான வரி ரூ. 12.5 கோடி. இந்த ஆண்டு அதை இரட்டிப்பாக்கி காட்டியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியதன்றோ? எர்லி பர்ட் பல்கலைக்கழகங்கள் அவருக்கு ஹானரரி டாக்டரேட், எம்.பி.ஏ கொடுக்க உடனே அவரை தொடர்புகொள்ளலாம்.

அவரின் முக்கிய வருமானம் தொண்டர்கள் கொடுக்கும் பரிசுகளே! வருமான வரித்துறை 'கமிஷன்'ர்கள் சாதாரணர்களை மிரட்டுவது போல கேட்டு இவரை மிரட்டி கேஸ் போடமுடியாதாம். காரணம் அவர் பொதுச்சேவையில் இருக்கிறாராம். அதனால் சி.பி.ஐ, அது நினைத்தால்(அதாவது மத்திய அரசுக்கு மாயாவதியை பிடிக்கவில்லையென்றால்) மட்டுமே, கேஸ் போட்டு அவரைக் கேள்வி கேட்க முடியுமாம். யார் சொன்னது? தனிமனித சுதந்திரம் இந்தியாவில் இல்லையென்று?

அதேசமயம்... மாயாவதி பாவம் ஒரு பெண். அரசியல் அனுபவம் பத்தாது. அதான் சொத்தெல்லாம் கணக்கில் காட்டுகிறார் என்றும் சொல்லலாம். இதுவே இந்தியாவில் எந்த ஒரு வருமான வரித்துறை ஆளுக்காவது எங்கள் தமிழினத்தலைவரையோ, கோல்(ட்)மாலுக்கே பெஞ்ச்மார்க்காய் திகழும் தங்கத்தாரகையையோ, மக்கள் பிரதிநிதி மருத்துவரையோ கேள்வி கேட்க தெகிரியம் இருக்கா? கேட்டாலும் மழுப்பியே கட்டம் கட்டிற மாட்டோம்? அப்படி வச்சிருக்கோமில்ல.. அங்கதான் நிக்கிறோம் நாம!

----------------------------------------------

நான் 2007 வருஷம் போட்டதுல ஒண்ணு கூட தேறாதுன்னு தெரிஞ்சே அண்ணா பினாத்தலார் இன்னுமொரு தொடருக்கு கூப்பிட்டிருந்தாரு.

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக (கண்டெண்டில் இல்லை. கணக்கில் மட்டுமே) வெறும் நாற்பது பதிவுகளையே இட்டு, அதுவும் பெரும்பாலும் knee-jerk ரியாக்‌ஷன் அல்லது ஒருவருக்கும் புரியாத 'ஞானபீட'(TM) அவார்ட் பெற முழுத்தகுதியினைப் பெற்ற பதிவுகளாய்ப் போனதில் இன்னொருமுறை உங்க நேரத்த செலவழிச்சு உப்புமாவ படிக்கச் சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் வலையுலகில் சுயசொறிதல் அடிப்படை உரிமை/திறமை என்பதை கணக்கில் கொண்டு இதோ:
கொத்தனாருக்கென்று டெடிகேட் செஞ்சாலும் சென்சிடிவான மேட்டரில் மக்கள் குழப்பதுலதான் இன்னும் இருக்காங்கங்க்றதுக்கு இது.

பயணத்தொடர் எழுதி நாளாச்சுன்னு ஆரமிச்சு ரெண்டுலயே குறைப்பிரசவம் ஆனது செட்டிக்கோட்டை சீரீஸ். அதுக்கப்புறம் தமிழர்களுக்கு விடுதி பிடிக்குமா வீடு பிடிக்குமானு ரொம்ப பீடிகையோட கொத்தனாரின் சாபத்தால் ப்ளாப் ஆனது இந்தப்பதிவு.

நமக்கெல்லாம் பதிவுக்கு ரிசர்ச் என்பதெல்லாம் ஆக்ஸிமோரான் ஆச்சே. அதுனால போட்டு வாங்கிக்கட்டிக்கிறது பழக்கமான ஒண்ணு. இது ஏதோ கொஞ்சம் விதிவிலக்கா போச்சு.

இருநூத்தியிருபதுல இப்பதானே பத்துப்பதிவு பத்திச் சொல்லிருக்கேன்? இன்னும் நிறைய இருக்கு. கோவைப்பக்கம் நான் பொண்ணு பார்க்கப்போனதாய் கிளப்பப்பட்ட பொய் வதந்திகளையும் மீறி இது. அப்துல் கலாம் பத்தி பதிவு போடாதவங்க இருப்பாங்களா? ஆனா அப்துல்கலாமே ஆனாலும் வயிற்றிக்கு சிறிது ஈயப்படவில்லையென்றால் கஷ்டம் என்பதை நிருபிக்க இதுவும் இதுவும்.

போறும். எனக்கே தற்பெருமை தாங்கலை. 2005னு பெனாத்தலார் சொன்னது நான் எழுதின பயணக்கட்டுரைகளாதான் இருக்கும்னு நினைக்கிறேன். மருதைக்கு போலாமாவும் குத்தாலம் போன கதையும் தான் நான் இதுவரைக்கும் குப்பை கொட்டினதுலேயே எனக்கே ரொம்ப பிடிச்சது.

முடிவாக நான் ஆரமிச்ச டேக் வெளையாட்டு ஒண்ணு. பாவப்பட்டு ரெண்டு பேரு போட்டாங்க. மிச்சவங்க போடறேன்னு ஆசைக்காட்டினதோட சரி.

ஆட்டத்துக்கு கூப்பிடறது?
1. ஜிரா
2. குமரன்
3. புலி (இன்னும் போட்டோவே போடலை.. அதுக்குள்ள அடுத்தது.. இதுவாவது போடறாரான்னு பார்க்கலாம்.)

220. தொடரில் தனியாய்...

புதுசா ஏதோ புகைப்படத் தொடராமே... அதுக்கு நம்ம கொத்ஸு நான் படம் போடணும்னு சொல்லிருந்தாரு. நமக்கு நாமே சான்ஸ் கிடச்சா விடற கோஷ்டியா நாம?

அதுக்கு முன்னாடி ரூல்ஸ்:
<$quote:baba$>
அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.
<$/unquote:baba$>

கைவசம் இருக்கும் படத்தில் இதுதான் தேறிச்சுனு நான் சொன்னாக்க... எப்படியும் உங்கள்ல ஒரு நாலு பேராவது பாவம், இன்னும் நல்லா எடுத்திருக்கான் போலிருக்கு பையன் ஆனா துரதிருஷ்டம் கைவசம் இல்லியேனு பாவப்படுவீங்கன்னு அந்த பிட்டையும் போட்டுக்கறேன்.

இது எடுத்த இடம்: Pavlovsk அப்படிங்கற ஊர். மன்னர்களோட கிராமம்னு ஒரு போஸ்ட் போட்டேனே அந்த ஊர் பக்கத்துல இருக்கறது இது. அரண்மனையெல்லாம் ஜோரா இருந்தாலும், அதோட இருக்குற இந்த காடு தான் (காடுனு சொன்னா பொருள் மாறறா போல இருக்கு. இது பார்க்). நாங்க போன அன்னிக்கு நல்ல மேகமூட்டம் லேசான தூறல்னு நாள் புல்லா சூரியன் வராம டகால்டி கொடுத்திகிட்டிருந்தாரு. ஜில்லுனு நீராகாரத்தோட சுடச்சுட பார்பக்யூ ஐட்டங்கள ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே அந்த நாள் பூரா காலாற நடந்த சுகம் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது. அப்படியொரு அமைதி.





மேலதிக விவரம்:விக்கிபீடியா
படிக்காம படம் மட்டும் பார்க்க இங்க போங்க.
------------------------------------------------------------------------------------
ஒரே படத்தோட முடிச்சா உப்புமா சாப்பிட வந்த உங்களுக்கு நான் பண்ணும் துரோகமில்லியா?

அதுனால அடுத்த படம்.



பார்க்க அழகா இருந்தாலும் இதப்போட வேண்டிய அவசியமென்னனு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி முன்கதை சுருக்கம்.

இந்த பிள்ளையார் கோயில் generic தெப்பக்குளத்துல நானும் நண்பர்களும் கல்லெல்லாம் எறிஞ்சு விளையாடிகிட்டிருந்தோம். அப்ப அந்தப் பக்கம் வந்த பெரியவர் தம்பிகளா இது என்ன குளம் தெரியுமான்னார். நாமதான் வரலாறுல புலிகளாச்சே... அவரே எங்க வழிசல பார்த்து பாவப்பட்டு் என்ன குளம்னு சொன்னோன எங்களுக்கெல்லாம் ஒருமாதிரி போச்சு.

இது இருக்குற ஊரு திருவையாறு. ஐயாறப்பன் கோயிலுக்கு பின் சந்தில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோயில் வாசலில் இருக்கு. திருநாவுக்கரசர் இமயமலையை நோக்கி போன போது உடல் தளர்ந்து வழியில் விழுந்தார். அப்போ அந்தப் பக்கமா வந்த ஒரு பெரியவர் இவரப்பார்த்து பரிதாபப்பட்டு ‘நீங்க இமயமலைக்கெல்லாம் இந்த வயசுல போகமுடியாது. அதுக்கு பதிலா பக்கத்தில் இருந்த குளத்தில் முங்கி எழுந்திருங்க'னு சொன்ன உபாயத்தால் அருகிலிருந்த குளத்தில் அப்பர் குதிக்க, அடுத்த நொடி அங்கேயிருந்து நேரா திருவையாத்துல இந்தக்குளத்துல தான் எழுந்தார் அப்பர். அதோட முடிஞ்சா பரவால்லியே...

எழுந்த அப்பருக்கு உமையாளோடு சிவபெருமான் காட்சி கொடுத்த திருக்குளம் இதுதான்.

அப்பேர்ப்பட்ட புண்ணியத்தீர்த்தத்திற்கு என் கைங்கர்யமாக கல் எறிந்தது ... என்ன சொல்றது.. இதெல்லாம் சகஜமப்பானு நினச்சு விட்றவேண்டியதுதானில்ல?

எழுந்து பாடின பதிகம் ஒண்ணும், சம்பந்தமான வீடியோ ஓண்ணும்... என்சாய்..

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே நவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!

- திருநாவுக்கரசர்


-----------------------
அடுத்து ஆட்டத்துக்கு யாரக்கூப்பிடறது?
1. ஸ்காட்லாந்து போய் காய்ச்சினவரு

2. செப்புப்பட்டயத்துல விளாசுறவரு

3. A Tiger in Africa? :))

 

வார்ப்புரு | தமிழாக்கம்