2006 க்கு ஒரு நொடி பொறுமை காக்கவும்!

முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த வருடம் பூமியின் புண்ணியத்தால் மாஜிக் போல நமக்கு ஒரு leap second கிடைத்திருக்கிறது. அதாவது நேரத்தின் வேகம் குறைந்து, இன்றைக்கு ஒரு நொடி நீளப்போகிறது.

காரணம் நிலவின் புவியீர்ப்பு சக்தியால் பூமியின் சுழற்சியின் வேகம் குறைகிறது. பதறத்தேவையில்லை. உடனே பூமி நின்றுவிட்டால் நம் கதி என்னவென்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல மில்லியன் வருடங்கள் கழித்துத்தான் இருபத்துநான்கு மணிநேரம் இருபத்தைந்து மணி நேரங்களாகும்.

இந்த ஒரு நொடி சரியாக இன்று இரவு GMT 0000க்கு கூட்டப்படும். அதாவது 2359லிருந்து 0000க்கு மாற வழக்கத்திற்கு மாறாய் பூமியின் புண்ணியத்தில் 61 நொடிகள் இருக்கும். நம்பிக்கையில்லையென்றால் சோதித்துப்பார்த்துவிட்டு அந்த லீப் நொடியை உருப்படியாய் செலவு செய்த்தாக பிறகு பெருமையும் பட்டுக்கொள்ளலாம்.

மீண்டும் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


Slowing planet affords us an extra second

ரஷ்யாவின் துருப்புச்சீட்டு: 1 - Gazprom

Gazprom என்பது ரஷ்ய அரசினால் (க்ரெம்ளின் தலைகளால் என்று படிக்கவும்) நடத்தப்படும் நிறுவனம். ரஷ்யாவின் மிகப்பெரியது என்பதுடன் உலகிலேயே இயற்கை எரிவாயுவில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம். உலகின் 25 சதவிகித இயற்கை எரிவாயு கிணறுகளை தன்வசம் கொண்டுள்ளது. க்ரெம்ளினின் பல பெரும் தலைகள் காஸ்ப்ரோமின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள். அதனால் க்ரெம்ளினை எதிர்க்கும் எந்தக் குட்டி கம்பெனியையும் ஸ்வாஹாஹா பண்ண காஸ்ப்ரோமின் பணபலம் பயன்பட்டுவந்தது.

சிறந்த உதாரணம் தன் வியாபாரத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத NTV தொலைக்காட்சி ஐ அதன் எதிர்க்கட்சி சார்பிற்காக forceful ஆக க்ரெம்ளினின் ஆணையின்பேரில் கைப்பற்றியது சில வருடங்களுக்கு முன்னர் உலக அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. பயனொன்றும் தான் இல்லை. இன்றைக்கு NTV அரசின் புகழ்பாடும் பல்வேறு ஊடகங்களில் ஒன்றாகிவிட்டது.

சோவியத் யூனியன் காலத்திலிருந்து அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளுக்கு மிகக்குறைந்த விலையில் எரிவாயுவை விற்றுக்கொண்டிருந்தது காஸ்ப்ரோம். அந்த நாடுகளில் உக்ரைனும் அடக்கம். இப்போது புதிய பிரச்சனை வெடித்து காஸ்ப்ரோமின் பக்கமும் க்ரெம்ளின் ஆளுமையின் பக்கமும் சர்வதேச ஆர்வத்தை திருப்பியிருக்கிறது. பிரச்சனை இதுதான். இதுவரை ஆயிரம் சதுரமீட்டர் எரிவாயுவிற்கு ஐம்பது அமெரிக்க டாலர்கள் என்று இருந்த விலையை திடுமென இருநூற்றிமுப்பது அமெரிக்க டாலர்கள் என்று தடாலடியாக ஏற்றியிருக்கிறது. உலக எரிவாயு விலைகளுக்கு சமமாக விலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தில்தான் விலையுயர்த்தப்பட்டது என்பது காஸ்ப்ரோமின் கருத்து. இந்த விலையுயர்வும் பொதுவானதாய் இல்லாமல் நாடுகளுக்கு தக்கவாறு arbitraryஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஆர்மேனியா, ஜியார்ஜியா போன்ற நாடுகளுக்கு நூறிலிருந்து நூற்றைம்பது டாலர்கள் வரை விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மிகவும் நட்புநாடான பெலாரஸுக்கு நாற்பத்தியேழு டாலர்கள் என்ற தற்போதைய விலையிலேயே விற்கப்படும் என்று காஸ்ப்ரோம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு மட்டுமே அதிகபட்சமாக இருநூற்றிமுப்பது டாலர்கள். உக்ரைன் இந்த விலையை அளிக்கவேண்டும் இல்லை ஐரோப்பாவிற்கு உக்ரைன் வழியாகச் செல்லும் எரிவாயுக்குழாய்களில் பங்குகளோ அல்லது மொத்தமாகவோ உக்ரைன் காஸ்ப்ரோமிற்கு தருமானால் விலை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் காஸ்ப்ரோம் கூறியிருக்கிறது. பெலாரஸுக்கு அளிக்கப்படும் சலுகைக்கு குழாய்கள் மீதான் உரிமையை அந்த நாடு விட்டுக்கொடுத்ததால் மலிவான விலையென்றும் சொல்லப்படுகிறது.

மேலும் உக்ரைன் இந்த விலையுயர்வுக்கு உடன்படாவிட்டால் ஜனவரி ஒன்றாம் தேதி காலை பத்துமணிக்கு உக்ரைனுக்கு அளிக்கப்படும் எரிவாயு நிறுத்தப்படும் என்று காஸ்ப்ரோம் அறிக்கைவிட்டது. அதன்பின்னர் இரண்டு புறங்களும் மாறி மாறி அறிக்கைகளில் அடித்துக்கொண்டனர். உக்ரைன் தன் பங்குக்கு Black Sea இல் இருக்கும் செவாஸ்தப்போல் என்னும் துறைமுகத்தில்தான் ரஷ்ய கடற்படையின் Southern Fleet இருக்கிறது. இதற்கான வாடகையை உயர்த்தும் எண்ணத்தில் உக்ரைன் இருப்பதாய் அறிக்கைவிட்டது. அதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. அதுவே மேலும், ஐரோப்பாவிற்கு காஸ்ப்ரோம் வழங்கும் எரிவாய் உக்ரைனின் குழாய்கள் வழியேதான் செல்கிறது. அவ்வாறு காஸ்ப்ரோம் அனுப்பும் எரிவாயுவில் பதினைந்து சதவிகிதம் வரை தனக்கென எடுத்துக்கொள்ள குழாய் உரிமையாளர் என்ற வகையில் உரிமை இருப்பதாக அறிவித்தது. அப்படி செய்வது திருட்டு என்று காஸ்ப்ரோம் பதிலறிக்கை விட்டது. மேலும் இந்தவகையில் உக்ரைன் திருடினால் Arbitration Institute of the Stockholm Chamber of Commerce க்கு இப்பிரச்சனையை எடுத்துச்செல்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லையென்றும் எச்சரித்தது.

இதற்கு நடுவில் இதுவரை மௌனம் காத்துவந்த ரஷ்ய அதிபர் பூடின் நேற்று உக்ரைனுக்கு இந்த விலையேற்றத்தை சமாளிக்க ரஷ்யா மூன்றரை பில்லியன் டாலர்கள் வரை கடனாய் வழங்கத் தயாராக இருப்பதாய் அறிவித்தார். மேலும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயத்தை உலகச்சந்தியில் சிரிக்கவைத்துவிட்டதாய் இரண்டு தரப்புகளையும் கடிந்தும் கொண்டார். ஆனால் அவரின் கடன் தேவையில்லை என்று உக்ரைன் நிராகரித்துவிட்டது.

இந்த வருடத்திய குளிர்காலத்தை ஓட்டிவிடும் அளவிற்கு உக்ரைனிடம் கைவசம் எரிவாயு இருக்கிறதெனினும் காஸ்ப்ரோம் சொன்னவாறு எரிவாயுவை நிறுத்திவிட்டால் பிரச்சனை வராமலிருக்க, கவனமாய் உபயோகப்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டியிருக்கிறார் உக்ரைனிய அதிபர் யூஷென்கோ. பிரச்சனையின் குறியே அவர் தான் என்பதுதான் இதில் காமெடி. மிகவும் நீண்டுவிட்டதால் இதற்கு பின்னாலிருக்கும் அரசியலை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(தொடரும்)

28/12 - நான்கு பிரிவுகள்

நான்கு பிரிவுகளில் உங்களுடையதும் இருக்கலாம். சமூகத்தில் மிகுந்த அவமானமும் மன அழுத்தமும் என்றென்றைக்கும் கொடுக்கவல்லன இவை. இவ்வளவு சின்ன சமாச்சாரம் என்று புறந்தள்ள முடியாது. ஏனெனில் இவற்றால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பல்வேறு விதமான பிரச்சனைகள் கண்டிப்பாய் ஏற்படும். பெரும்பாலான சமயங்களில் உங்களின் social interaction குறைந்துபோக இவைகளில் ஒன்றே காரணியாக இருக்கும். இன்னும் தீவிரமான சூழ்நிலைகளில் வேலைவாய்ப்புக்கே கூட வேட்டு வைக்கும் சக்தி பெற்றன இவை. மிகவும் முற்றிப்போனால் கண்டிப்பாய் நிபுணரிடம் ஆலோசனைக்கு செல்ல வேண்டும். ஜோக்காக எடுத்துக் கொண்டுவிடாதீர்கள்.

கீழேயுள்ள சுட்டியிலுள்ள பத்தியின் முதல் சிலவரிகளின் மொழிபெயர்ப்பைத் தந்துள்ளேன்.

மேலதிக விபரங்களுக்கு
சுட்டி

தத்து(பி)த்துவம் - 3: Extinction - R

முதல்ல ஒரு புது பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்கு பத்தி. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இந்தோனேசியாவில் இருக்கும் போர்னியோ பகுதில பூனை சைஸுக்கு இருக்கும் இந்த புதுவகை மிருகம் காமிராவில மாட்டியிருக்கு. இருக்கறது ரெண்டே ரெண்டு போட்டோதான். லீமர் (Lemur) என்று அழைக்கப்படும் வகை தான் இது என்றும் இல்லை கீரிப்பிள்ளைப் போன்றது என்றும் சொல்வோர் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இது புது வகை மிருகம் தான் நம்பறாங்க. இதுவரைக்கும் உயிரோட பிடிக்க முடியவில்லை. அதுக்கப்புறந்தான் சந்தேகம் நிரந்தரமாத் தீரும். முழுசா பிடிக்கணும்னு கூட இல்லை. அதோட முடியோ, கழிவுகளோ கிடைச்சா கூட போதும். டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் என்ன வகைன்னு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இப்ப வரைக்கும் இது மாமிசபட்சினியாக இருக்கும்னும், prehensile tail இருப்பதால் arboreal ஆக இருக்கலாம்னும் யூகிக்கறாங்க. Stephan Wulffraat கறவர் தான் WWF சார்பா இந்த குழுவை வழிநடத்துகிறார். எதுக்கு இவ்வளவு முக்கியமா இதுபத்தி பதிவுன்னு கேக்கறீங்களா? கடைசியா இவ்வளவு பெரிய புது விலங்கினம் கண்டுபிடிச்சு நூறு வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது!
Al-Jazeera

உலகிலேயே மொத்தமா 5000 பாலூட்டி ஸ்பிஸீஸ்கள் தான் இருக்கின்றன. ஆனா, இதப் பத்தி உண்மை தெரியாமலேயே கூட போய்விடலாம். ஏன்னா, இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட காடுகளை அழித்து உலகின் மிகப் பெரிய பனை எண்ணெய் தோப்பை உருவாக்க இந்தோனேஷிய அரசு முயன்று வருகிறது. 1.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் (தமிழ்நாட்டின் பரப்பளவில் 15%!). தவிரவும் வருடாவருடம் முறையற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் மட்டுமே 2.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் காடுகள் அழிக்கப்படுகின்றன (தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் 20% வருடாவருடம்!). இவற்றை எதிர்த்து WWF ம் மற்றும் பல தன்னார்வ நிறுவனங்களும் போராடி வருகின்றன. இதுவரை விடியலில்லை. இதுவெறும் இந்தோனேஷியாவில் மட்டுமல்ல தென்னமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டம், இந்தியத்துணைக்கண்டம்னு எல்லா பகுதிகளிலும் 15million ஹெக்டேர்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் கேடு மற்றும் ஆயிரக்கணக்கான வகை உயிரினங்களை விரைவில் ஜூக்களில் மட்டுமே நம் பிள்ளைகள் பார்க்கமுடியுமென்ற நிலைக்கு அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.

கடந்த நானூறு ஆண்டுகளில் மட்டும் 89 பாலூட்டி விலங்கினங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 169 பாலூட்டி இனங்களை Critically Endangered என்று வகைப்படுத்தி அவற்றையும் சீக்கிரமே பரமபதம் அனுப்பவும் முயன்றுகொண்டிருக்கிறோம். எல்லாவகை உயிரினங்கள் என்று கணக்கிலெடுத்தால் (நுண்கிருமிகள், காளான்கள் முதல் திமிங்கிலங்கள் வரை) ஆண்டுதோறும் 27,000 வகை உயிரினங்கள் அழிந்துவருவதாய் பயமுறுத்துகிறார்கள். 27,000. ஓவ்வொரு ஆண்டும்! அதாவது சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு விலங்கு வகை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. கடைசி வரியை திரும்ப படித்துப்பாருங்கள். பார்த்துவிட்டு படிப்பதை நிறுத்தி ஒரு நிமிடம் யோசியுங்கள். பிரச்சனையின் தீவிரம் எளிதாகப் புரியும். இதே விகிதத்தில் சென்றால் இன்னும் நூறே ஆண்டுகளில் இப்போதுள்ள உயிரினங்களில் சரிபாதி அழிந்திருக்குமென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

extinct ஆவது ஒன்றும் இயற்கைக்கு மாறானதல்ல. உலகம் தோன்றியதிலிருந்து 99.9% உயிரினங்கள் அழிந்து மீண்டும் புதிய இனங்களாக உருவெடுத்துத்தான் வந்திருக்கின்றன. ஆனால் விகிதமே பிரச்சனை. ஒரு இனம் அழிந்து அதற்கு ஈடாக புதிய இனம் மூலம் replenish ஆவதற்கு 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் வரை பிடிக்கும். 200,000 மனித தலைமுறைகள்! இதுதான் பிரச்சனையே. பொருளாதார, அறிவியல், மருத்துவ வளர்ச்சியால் குறைந்தபட்ச ஆயுள் நீடிக்கிறது. இதனால் ஒரு vicious cycle ஆக மக்கட்தொகை விண்ணை நோக்கி பாய்கிறது.

பெருகப்பெருக நகரங்களில் இடமின்றி, resources காகவும், இருக்க இடத்திற்காகவு சகட்டுமேனிக்கு காடுகள் அழிப்பது அதிவேகமாய் நடந்துவருகிறது. இந்த 5,700 கோடி மக்கள்தொகைக்கே இவ்வளவு என்றால், இன்னும் நாற்பத்திமூன்றே ஆண்டுகளில் 10,000 கோடியாகிவிடும் என்கிறது ஒரு கணிப்பு. அதுவரை எத்தனை இனங்கள் தாக்குப்பிடிக்குமோ என்று தெரியவில்லை.

நம் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இயற்கை சூழலான சுந்தர்பன்களில் பெங்கால் புலிகளின் மொத்த எண்ணிக்கை 800-ஐ தாண்டாது என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த பேரழிவை சீக்கிரம் தடுத்து நிறுத்தாவிட்டால் காடுகளும், அதனோடு கூடவே பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் கூண்டோடு கைலாசம் போகவேண்டியதுதான். அடுத்த செய்தியில் உள்ள உயிரினம் இதற்கு ஒரு எச்சரிக்கை மணி. மனிதனின் அழிக்கும் சக்திக்கு ஒரு அருமையான உதாரணம்.

மோரீஷியஸின் டோடோ (போர்த்துகீஸ் மொழியில் முட்டாள் என்று அர்த்தம்) (Raphus cucullatus) பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சுமார் 20 கிலோ வரை எடையும், மனிதர்களை கண்டால் பயப்படாத தன்மையும், பறக்கமுடியாதவையாகவும் இருந்தன. பறக்கமுடியாததால் எளிதில் உணவாகின. மனிதர்களுக்கல்ல. காலனியாளர்கள் கொண்டு வந்த மற்ற மிருகங்களினாலும், தமது காடுகள் அழிக்கப் பட்டதாலும். மோரிஷியஸில் பல மில்லியன் ஆண்டுகள் எந்த இன்னலுமின்றி வாழ்ந்து வந்த டோடோக்கள் (natural predators இல்லாததால்; மோரிஷியஸ் காலனியாளர்களுக்கு முன் uninhabited ஆக இருந்தது) 1600 -களில் முதல் டச்சுக்கள் வந்து எண்பதே ஆண்டுகளில் மொத்த டோடோ இனத்திற்கும் பரலோக டிக்கெட் கொடுத்துவிட்டனர். வெறும் 80 ஆண்டுகள்.

மேலும் விவரங்களுக்கு,
Red List
Bagheera

---
சரி நம்ம தத்து(பி)த்துவத்துக்கு வருவோமா? என்னுதில்ல. எங்க படிச்சதுன்னு நினைவில் இல்லை.

மனிதனே இவ்வுலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகளிலும் most adaptible, most sentient, most intellectual இனமா? அதாவது நாமே மற்ற்அ ஜீவராசிகளைவிட முதன்மையானவர்களா?

ஒரு பாக்டீரியாவை எடுத்துக்கொள்ளுவோம். ஒரே செல் உயிரினம். எல்லா இனங்களும் இருப்பது இனப்பெருக்கத்திற்காகத்தானே உயிரியல் படி பார்த்தால். தங்களின் ஜீன்கள் அடுத்த தலைமுறைக்கு அளித்துவிட்டால் பயலாஜிக்கலாக நம் கடமை முடிந்துவிடுகிறது. அடுத்த தலைமுறைக்கு வாழ்வில் ஒரு headstart கொடுக்கலாம். அதுவும் எல்லா உயிரினங்களும் செய்வதில்லை. 'இருப்பது (live)' 'இனப்பெருக்கம்' இந்த ரெண்டுத்தையும் ஒரு ஒரே செல் உயிரினம் நம்மைவிட பலமடங்கு அருமையாக செய்து கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்து எங்கும் வியாபித்திருக்கின்றன. நமக்குள்ளும் வெளியும் என பாக்டிரியாக்கள் இல்லாத இடத்தை இந்த உலகில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமான வேலை. ஆனால், இதே பயாலாஜிக்கல் கடமைக்கு நமக்கு பில்லியன்கள் கணக்கில் செல்கள் தேவைப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பொருட்களின் எவல்யுஷ்னைப் பார்த்தால் உண்மை எளிதில் விளங்கும். ஒரு அறை சைஸில் இருந்த கணினிகள் இன்று கையடக்கமாகிவிட்டன. ஆக, போகப்போக பொருட்களின் அளவு குறைகின்றது. ஆனால் திறன் அதிகரிக்கிறது. ஆகவே, பாக்டிரியாக்கள் மனித இனத்தை விட மேன்மையானவை.

இது எப்டி இருக்கு?

Merry Christmas!

தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி

பிஸியாலஜி என்பது என்னன்னு உங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நம் உடலிலுள்ள உறுப்புகளின் செயற்பாடுகளை பற்றிய படிப்பாகும். (science of the normal functions of the body, its organs, systems : physios - nature; logos - study). ரொம்ப ரொம்ப சுருக்கமா கண்/பார்வை பற்றி. கொஞ்சம் ஆங்கிலத்திற்கு தாவலாமா? தங்கிலீஷுல எழுதறத விட இது மேல்னு நினைக்கிறேன். புரியறதுக்கு கஷ்டமா இருந்தா ரொம்ப வருத்தப்படாதீங்க. எவ்வளவு சிக்கலானது, எத்தனை நிலைகளுக்கு பின்னர் நாம் 'பார்க்கிறோம்' என்பதை காட்டவே பின்வருவது.

1. Retinal Photoreceptor layer

a. rods
i. absorb light
ii. do not differentiate color (only shades of greys)
iii. sensitive to low light levels
iv. more present in peripheral areas of retina (outside central fovea)

b. cones
i. absorb light of particular wavelengths (red, green, or blue)
ii. less sensitive in low light levels
iii. concentrated in central fovea

2. "Dark current" in photoreceptors

a. Na+ (sodium) stay open in photoreceptor when NO LIGHT is being absorbed
b. constant current of Na+ into cell keeps photoreceptor MOST ACTIVE IN DARKNESS
c. active photoreceptor (in dark) continually releases inhibitory neurotransmitters onto neuronal cells in retina

3. Light reactions

a. light photon absorbed by retinal
b. opsin releases "energetic" retinal ("bleaching")
c. opsin then activates transducin molecule
d. active transducin activates phosphodiesterase enzymes
e. active phosphodiesterase enzymes cause Na+ CLOSURE
f. Na+ channel closure reduces "dark current"
g. photoreceptor releases less of the inhibitory neurotransmitters onto neuronal retinal cells
h. neuronal retinal cells fire action potentials, carried by optic nerve to brain...

இது தான் 'பார்ப்பது'



இனி என்னென்ன பாகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்று பார்ப்போமா..
After passing through cornea, lens and finally Retina, the information is transmitted to the optic disc and onto the optic nerve. The Optic Nerves from both eyes are then criss-crossed and straightened out at a point called Optic Chiasma. From there, passes on to a part of brain called Thalamus. The thalamus then passes the information to visual cortex (occipital lobe: rear brain). Then midbrain also receives information from where reflexes are regulated.

என்ன, போரடிச்சுடுச்சா? இது ஒரு பெரிய கடலில் ஒரு சாம்பிள். இந்த மாதிரி உணர்வுகள், உணவு, மூச்சு, இதயம், ரத்தஓட்டம், வளர்ச்சி என்று ஏகப்பட்டவை இருக்கின்றன. இதெல்லாம் எதுக்கு இப்போ? தம்பட்டமா? இல்லை. இல்லை.. நம்ம தத்து(பி)த்துவத்துக்கு அடிப்படையே இதுதான். இத வச்சு பிஸியாலஜி பேராசிரியரை கலாய்ச்சதுண்டு.

அதாவது, பரிட்சையில் கேள்வி வருதுன்னு வச்சுக்குங்க. நாம எப்படி பார்க்கிறோம்-கறதுன்னு? அப்ப பதில் சொல்லத் தெரியலேன்னு வச்சுக்குங்க. ஆனாலும் அவங்க ஒங்களுக்கு 100/100 போட்டுத்தான் ஆகணும். எப்படின்னு யோசிச்சா அதுல தத்துவமே இருக்குது. மேலே சொன்ன பார்வை விஷயத்த பத்தி உங்களின் அறிவு 0. ரெட்டினான்னா என்ன ரொட்டியோட கஸினா, தாலமாஸ்னா பொடிமாஸ் மாதிரியா அப்படின்னு கேக்கற அளவு நம்ம அறிவுன்னு வச்சுக்குங்க. இருந்தாலும், 'பார்க்கிறோமா' இல்லியா? மேலே சொன்ன ஒரு விஷயமும் உங்களுக்கு சொல்லத்தெரியாட்டியும், உங்க மூளைக்கு என்ன செய்தா பாக்க முடியும்னு தெரியுமா தெரியாதா?

இன்னொரு உதாரணத்திற்கு இரத்த அழுத்தம் அதிகமாச்சுன்னு வச்சுக்கோங்க. அத எந்த பேரோமீட்டர் வச்சு அளக்கனும், எது நார்மல் அளவு, இவ்வளவுக்கு மேலே போனா எந்தெந்த ஸ்விட்ச தட்டிவிடனும், அதனால எப்படியெல்லாம் திரும்பவும் நார்மலுக்கு கொண்டுவரணும் எல்லாம் மூளைக்கு தெரியும்தானே?

படிக்கிறது எதுக்கு? மண்டையில ஏறறதுக்கு? ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்த திரும்ப படிக்க வேண்டிய அவசியமில்லேல்லியா? தெரிஞ்சிருக்கிற விஷயத்த வெளியில் எப்படி சொல்லணும்னு தெரியல அவ்ளோதான். அதுதானே பிரச்சனை? வெறும் communication gap மட்டுந்தானே? அதனால பிஸியாலஜி படிக்க தேவையில்ல. என்ன, லாடுலபக்கு சாயல் வருதா? :))

Owning Mahowny

போன வருடம் வந்த படம். Bowling for Columbineஉடன் காம்போவில் திருட்டு டிவிடி கிடைத்தது! BFC பத்தி சொல்லவேண்டாம். மைக்கேல் மூரின் மற்றுமொரு ஜெம். தனிப்பதிவு போடுவது மட்டுமே will do justice. அது பின்னர். இந்த Owning Mahowny பற்றி ஒன்றுமே தெரியாதபோதும், Philip Seymour Hoffman நடிப்பதால் மோசமாய் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வாங்கியாகிவிட்டது. என்ன பெரிசா.. 2.5$. இருந்தாலும், கலெக்ஷன்னு வரப்போ பாத்து வாங்கனுமில்லியா?

ஒரு gambling addict ஆன வங்கிப் பணியாளர் பற்றியது கதை. இது உண்மைக்கதை. Brian Molony என்ற கனடியர் மஹோனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மின்னி ட்ரைவர் அவரின் கேர்ள்பிரெண்ட்.

பதவியுயர்வு பெற்றாலும் டப்பா காரில் உலா வரும் ம்ஹோனிக்கு ஒரே வீக் பாயிண்ட். சூதாட்டம். சின்ன அளவில் $10 ஆயிரத்தில் ஆரம்பிக்கும் அவரின் கையாடல், 10.2 மில்லியன் டாலர்களுக்கு உயர்கிறது. அதுவரை வங்கியோ, மற்றோரோ அவரை சந்தேகப்படாதது வியப்பளிக்கிறது. Atlantic Cityயில் ஒரு காஸினோவின் வி.ஐ.பி ஆகிறார். லாஸ்வேகாஸிற்கும் பரவுகிறது அவரின் அடிக்ஷன் நோய்.

ஹாஃப்மான் மிக நிதானமாக non-confrontationalஆக வாழ்ந்திருக்கிறார். அதிர்ந்து பேசாத, அமைதியான கேரக்டர். அவருக்குள் இத்தனை கொடுரமான சூதாட்ட அடிக்ஷன் இருக்குமென்பது நினைக்கவும் முடியாது. "He wins so he can lose more". "the only lady he believes in is Lady Luck" என்பது போன்ற நச் வசனங்கள். நமக்கு கதாநாயகன் மேல் ஒருவித சிம்பதி வரும்படி மிக அருமையான நடிப்பு. மின்னி டிரைவர் சராசரி கேர்ள்பிரண்ட்.

இந்த படம் சூதாட்டம் என்பதல்லாமல், என்ன வகை அடிக்ஷன் ஆக இருந்தாலும், சோபித்திருக்கும். மது, போதைமருந்து போன்ற எதுவானாலும். காரணம், ஜெயிப்பதோ தோற்பதோ அடிக்டின் goalஅல்ல. மாறாக, playing-ஏ. அதுவே எல்லா அடிக்ஷன்களுக்கும் அடிப்படை. ஒரு dealஉக்கு 10 ஆயிரம் டாலர்கள் வைத்து விளையாடும் விபரீத விளையாட்டு ஆடுகிறார். அவரிடம் அவ்வளவு பணம் கிடையாது. பணம் வர வழி. வங்கியில் கையாடல் தான். ஹாஃப்மேனின் நடிப்பிற்காகவே பார்க்கவேண்டிய படம்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இம்மாதிரி சிக்கல்களில் மாட்டியிருக்கிறோம். அது போதை, சூதாட்டம் என்று இருக்க தேவையில்லை. ஆனால், சில விஷயங்களுக்காக எந்த காரியமும் செய்யத் துணிந்திருக்கிறோம். அதனால் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வருமாயினும், சில நொடி இன்பத்திற்காக வாழ்க்கையையே பணயம் வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். நமக்கு அவ்வகை எண்ணங்கள் வரும்போது நம்முடைய reasoning நம்மை தடுத்தாட்கொண்டிருக்கிறது. அவ்வாறு ரீசனிங் செய்ய முடியாத ஒருவரின் கதை. கண்டிப்பாக பாருங்கள்.

---
கூடவே பார்த்த படங்கள்
HP & Goblet of Fire - நல்லா இருந்தது. ஆனா அஸ்காபான் அளவுக்கு பிடிக்கவில்லை

Batman Begins - மஷினிஸ்டில் நடித்த க்ரிஸ்டியன் பேலா? அட்டகாசம்.

Manchurian Candidate - பரவாயில்லை.

The Shining - Jesus. Must Watch! Jack Nicholson. Period!

15/12 - கணக்குப் புலிகளா நீங்க?

இந்தவாரம் தத்து(பி)த்துவ வாரம் போலிருக்கு. என் பங்குக்கு.

சரி, 1=2 அப்டின்னு நிருபிக்க முடியுமாங்கறது கேள்வி.

முதல்ல,
a=b

அப்புறம் a ஆல் பெருக்குவோம்.
a*a=b*a

அத இப்படியும் எழுதலாமில்லியா?
a^2=ab


b^2 ஐ ரெண்டு பக்கத்திலேர்ந்தும் கழிப்போம்.
a^2-b^2=ab-b^2

a^2-b^2 பார்முலா பல யுகங்களுக்கு முன்னாடி படிச்சது நினைவுக்கு வருதா? அப்படியே வலப்பக்கத்திலேர்ந்து b ய வெளியில எடுப்போம். அப்ப,
(a+b)(a-b)=b(a-b)

ரெண்டு பக்கமும் இருக்கற (a-b) அடிச்சிட்டா,
(a+b)(a-b) = b(a-b)

a+b=b

இதையே மாத்தினா
b+b=b
2b=b

இப்போ என்ன வருது???
2=1


என்ன.. கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாத்தானே வருது?:))

ஸ்கூல் படிக்கும்போது என் நண்பன் ஒருவன் சொன்னது. அவன் தான் கண்டுபிடிச்சானானு தெரியாது. ஆனா, சுவாரசியமா இருந்தது. இப்பவும். ஏன்னா, நமக்கும் கணக்குக்கும் அவ்ளோ தூரம். என்ன மாதிரி எத்தன கணக்குப்புலிகள் இருக்குன்னு தெரிஞ்சிக்க வேணுமில்ல? அதனால உடனே விடைய போட்டு உடச்சிடாதீங்க. :)

கொம்பா முளைச்சிருக்கு? ver 2.0!

இது சுஹாசினி பற்றிய பதிவல்ல. பின்னூட்டங்களில் சிலரின் கருத்துகளை (குறிப்பாய் ஷ்ரேயா) பார்த்தபின் முழுக்க ஆராயாமல் இந்த கொம்பா முளைச்சிருக்கு பதிவை இட்டிருப்பேனோ என்று சந்தேகம் வந்ததால் மீள்பதிவு. பதிவில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. பின்னூட்ட கருத்துகளை பற்றி இன்னும் சிலரின் கருத்துகளை அறியும் ஆவலால் மீள்பதிவு செய்கிறேன். நன்றி.

---------

ஆஸ்திரேலிய-சிங்கப்பூர் பிரச்சனை. ஆஸ்திரேலிய குடிமகனான (வியட்நாம் அகதி வழி) ங்யென் வான் டூவான் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். பல வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கில், கடந்த மூன்று வாரங்களில் நடந்தது சரியான காமெடி.

இந்தத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும், இவரை ஆஸ்திரேலியாவிற்கு extradite செய்யவேண்டும், சிங்கப்பூரின் காட்டுமிராண்டித்தனம், சிங்கப்பூரை புறக்கணி, sanctions போடு என்றெல்லாம் கடந்த வாரங்களாக ஒலித்துக்கொண்டிருந்த ஆஸியின் பிரதமரின் உட்பட குரல்களை சற்றும் சிங்கப்பூர் சட்டை செய்யாததால், நேற்றைக்கு புது காமெடி நடந்திருக்கிறது. அதாவது இவர் இறக்கும் நேரத்தில் இவரின் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிட நாடுதோறும் அமைதி காக்கப்போகிறார்களாம். இது இன்று நடந்ததா இல்லையா என்று இன்னும் செய்திகள் கிடைக்கவில்லை. ஆஸியில் உள்ளவர்கள் தான் சொல்லவேண்டும்.

சரி, அப்படியென்ன இவர் சத்தியாகிரக தியாகம் செய்து இந்தத்தண்டனை பெற்றார் என்று இன்றுதான் விழித்துக்கொண்டோருக்காக: ஆஸிக்கு வரும் வழியில் ட்ரான்ஸிட்டில் சிங்கப்பூர் விமானநிலையத்தில் போதை மருந்துகள் வைத்திருந்தற்காக பிடிபட்டார். இருபத்தி ஆறாயிரம் ஊசிகளுக்கு போதுமான அளவு போதை மருந்துகள் இருந்தது தெரியவந்தது. சிங்கப்பூரில் போதைபொருட்களை கடத்துவோருக்கு தூக்குதண்டனை என்பது தெரிந்தே தான் இந்த புண்ணியாத்மா செய்துள்ளார். அப்படி இருக்க என்ன கரிசனம்? பாலி பாம்பர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வலியுறுத்தியது இதே ஜான் ஹோவர்ட் அரசுதானே? இப்போதுமட்டும் தூக்குத்தண்டனை கசக்கிறது.

ஆஸ்திரேலியாவின் தன் குடிமகன்களை வெளிநாடுகள் தண்டிக்கவே கூடாது, ஆனால் தங்கள் நாட்டில் வேண்டியதை செய்துகொள்வோம் என்ற பாலிஸி நெடுநாளாகவே நாற்றமடிக்கிறது. இந்தோனேஷியாவில் ஆஸி முஸ்லிம் மாடல், அதற்கு முன்னர் இன்னொரு போதை கடத்திய பெண் என்று எல்லோரும் என்னவோ நாட்டுக்காக உயிரைக்கொடுத்தவர் ரேஞ்சுக்கு ஏற்றிவிட்டு பொறுப்பில்லாமல் ஆஸி மீடியாவும், அரசும் அலட்டிக்கொள்கின்றன.

தூக்குத்தண்டனைக்கு நான் ஆதரவாளனல்ல. அதற்கு பதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் உள்ளதைப் போல ஒரு 200 ஆண்டுகளுக்கு உள்ளே போட்டுவிடுவது இல்லை இன்னும் கொடுமையான குற்றங்களுக்கு இஸ்ரேலில் உள்ளதைப் போல solitary confinement போன்றவை பயன்படுத்தலாம். இதெல்லாம் வாதத்திற்கு ஒத்துவந்தாலும், சிங்கப்பூர் என்னும் sovereign நாட்டின் சட்டவிதிகளை விமர்சிக்க ஆஸ்திரேலியாவிற்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன், ஆயிரமாவது தூக்குதண்டனை நிறைவேற்றப்போகும் அமெரிக்காவை கண்டிக்கவேண்டியதுதானே? செய்யாது. இதில் பல ஆஸி குரல்கள் வேடிக்கையானவை. சிங்கப்பூர் காட்டுமிராண்டி ஊராம். ஆஸியில் இவர்கள் எப்படி குடியேறினார்கள் என்று அதற்குள்ளா மறந்துபோய்விட்டது. அடுத்த ஊரில் உள்ள தண்டனையை தெரிந்தே அந்த ஊரில் தவறு செய்தபின், ஆஸிக்காரனை நீ எப்படி தண்டிக்கலாம் என்ற வெட்டிப்பேச்சு எதற்கு?

இதில் ஒருபுறம், இதுவே வெள்ளை ஆஸியாயிருந்தால், அவரை இந்த அரசு எப்படியாவது மீட்டிருக்கும் என்று சந்தர்ப்பவாத குரல்வேறு.

----
ஆனால் இந்த குழப்பத்தில் ஒரு ஆறுதலான விஷயம். நேர்மையான நீதிபதிகளுக்கு உதாரணமாய் ஒருவர்.

அண்ணனின் கடன் பிரச்சனையே தீர்க்கவே வான் டுவான் போதைப்பொருள் கடத்தி மாட்டி தூக்குத்தண்டனையும் பெற்றாகிவிட்டார். ஆனால், அண்ணனின் மேலுள்ள 1998 பழைய வழக்கு ஒன்றை இன்று தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி. படிக்க வேண்டிய சுட்டிஇது



The Age

IHT

Advertiser News

--
'மழை' ஷ்ரேயாவின் பதிவு

 

வார்ப்புரு | தமிழாக்கம்