வயிரவன் கோயில் எறும்புகள் vs. நான் - படங்கள் : மீள்பதிவு

வயிரவன் கோயில் என்னும் ஊர் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது. கோயில் குருக்கள் வர தாமதமானதால் கோயிலின் எதிரில் உள்ள ஒற்றையடி பாதையில் கொஞ்சம் தூரம் சென்ற போது அகப்பட்டன (காமெராவில் தான்) இந்த எறும்புகள்.

எளிதில் கண்ணுக்கு புலப்படாத வகையில் ஒரு இலையை ரெண்டாக அழகாக மடித்து ஒட்டுப்போட்டு, வீடு மாதிரி அதனுள்ளே இருந்தன.கொஞ்சம் கிட்டே சென்ற போதுதான் வித்தியாசமான அனுபவம். டிஸ்கவரி சானலில் மட்டுமே பார்த்திருக்கின்ற எறும்புகளின் defense system பார்க்க கிடைத்தது. இலையின் மேல் கூட்டமாக சுற்றி கொண்டிருந்தவைகள், காமிராவின் லென்ஸ் barrel அருகே சென்றவுடன் ஒரு எறும்பை தவிர மற்ற எல்லாம் உள்ளே ஓடிவிட்டன. அந்த sentinel எறும்பு கொஞ்சம் கூட பயமின்றி, பின்புறத்தை காமிரா பக்கம் திருப்பி ஏதோ ஒரு strange ritual செய்தது. பயமுறுத்த நினைத்ததோ என்னவோ. எறும்புகள் பின்புறத்திலுள்ள sting மூலமாகத்தான் கடிக்கின்றன என்று ஊகிக்கிறேன். ஒரு 30 செகண்ட் இப்படி அங்கேயும் இங்கேயும் இலை மேல் குட்டி கரணமெல்லாம் அடித்து தலைகீழாய் நின்று என்னை பயப்படுத்த செய்த முயற்சி தோல்வியடையவே, கிடுகிடுவென்று உள்ளே ஒடிச்சென்று தன் எறும்பு சேனையை வெளியே அழைத்து வந்தது. அதில் சில தன் கூட்டின் அருகிலேயே காமிராவைப் பார்த்தபடியே சுற்றிச்சுற்றி வந்தன. மற்றவை அக்கம்பக்க இலைகளிலெல்லாம் தாவி என்னை கடிக்க முற்பட்டன.

1. sentinel எறும்பு




2. sentinel எறும்பின் சாகசங்கள்: தலைகீழாய் பகீரதன் போல் தவம்






3. sentinel எறும்பின் வீரத்திருமுகம்






4. Attack of the Clones














ஹூம். நகமெல்லாம் கடிச்சு முடிச்சாச்சா? இப்போ கிளைமாக்ஸ்: இதெல்லாம் நடந்து முடியறதுக்குள்ளே கோயில் குருக்கள் வந்து கூப்பிட்டதால், போர்க்களத்திலிருந்து கஷ்டப்பட்டு தப்பித்து புறமுதுகிட்டு ஓடிவந்து விட்டேன் :-)

கொஞ்சம் கோயிலைப் பற்றி: சுவாமிமலையில் உபதேசம் பெற சிவபெருமான் வந்த போது, முருகப்பெருமான் சிவன் தனியாகத்தான் வரவேண்டும் என்று கட்டளையிட தன் பரிவாரங்களான சந்திரன், பைரவன், சக்தி, நந்தி, கங்கை எல்லோரையும் விட்டு தனியாய்ச் சென்றதாக சொல்கிறார்கள். அந்த வகையில் காலபைரவரை இந்த ஊரில் விட்டுவிட்டார் என்பது கதை. இவ்வூருக்கு அருகில் ஈச்சாங்குடி (ஈசன் குடி) என்ற ஊரில் தான் சிவன் தங்கி பின்னர் சுவாமிமலை சென்றதாக சொல்கிறார்கள். வழக்கமாக சிவன் கோயிலின் அங்கமாக இருக்கும் பைரவருக்கு இங்கே தனியே கோயிலே இருப்பது சிறப்பானதாம். காசியை அடுத்து காலபைரவருக்கென்று விசேஷமான கோயில் இதுவென்று சொன்னார்கள்.. இந்த வைரவன் கோயில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திங்களூருக்கு திரும்பும் சாலைசந்திப்புக்கும் கணபதி அக்ரஹாரத்திற்கும் இடையில் மெயின் ரோட்டிலேயே உள்ளது.

பிகு: ப்ளாக்கர் சரியாக படங்களை ஏற்றாததால் மீள்பதிவு இட வேண்டியதாகிவிட்டது! :(

6 Comments:

  1. rv said...

    test


  2. Anand V said...

    Oh. Oh. Nice close ups :)


  3. துளசி கோபால் said...

    இந்த எறும்புங்க கடிச்சா அவ்வளவுதான். தீ சுட்டதுபோல எரியும்!

    நல்ல போட்டோக்கள்!!!!

    என்றும் அன்புடன்,
    அக்கா


  4. Thangamani said...

    இந்த எறும்புகள் எலுமிச்சை மரத்திலும் இருப்பன. இவை வாயால் கடிக்கும் என்றே நினைக்கிறேன். கொடுக்குகள் இல்லாததால் கொட்டாது போல. வீரத்திருமுகம் அருமை.


  5. rv said...

    anand, thulasiakka and thangamani

    thanks a lot.

    yeah, these were slightly bigger than the regular sigapperumbu. We call it "katterumbu" around here.


  6. தருமி said...

    ungkaLukkum, ungkaL kaamiravukkum vaazhththukaL.


 

வார்ப்புரு | தமிழாக்கம்