சோம்பல் ஒழிய மந்திரம்!

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

- மகாகவி பாரதியார்

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. எப்போதெல்லாம் சோம்பலாயிருக்கிறதோ, வேலை செய்வதற்கு அலுக்கிறதோ, இதை ஒருமுறை படித்தால் ஒரு புது உத்வேகம் தோன்றும்.

இதை ஒரு காகிதத்தில் எழுதி உங்கள் worktable-ல் அருகினில் ஒட்டி வைத்து நீங்களும் ட்ரை செய்து பாருங்களேன்.

1 Comments:

  1. Anonymous said...

    I Already done this. thanks


 

வார்ப்புரு | தமிழாக்கம்