கருப்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ!

ஒரு நல்ல விஷயத்தோட ஆரம்பிக்கலாமா?


கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்ப்வளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருபொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

உன்னோடுடனே யொருகடலில் வார்வாரை
இன்னா ரினையரென் றெனண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே!

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!

பதினாறு மாயிருவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டார்போல் மாதவன்றன் வாயமுதம்
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெருஞ்சங்கே!

- நாச்சியார் திருமொழி

0 Comments:

 

வார்ப்புரு | தமிழாக்கம்