தீவிரவாதமும், அதற்கு பதிலும்?


தீவிரவாதம் என்பது - "the unlawful use of force against persons or property to intimidate or coerce a government, the civilian population or any segment thereof, in the furtherance of political or social objectives". This definition includes three elements: (1) Terrorist activities are illegal and involve the use of force. (2) The actions are intended to intimidate or coerce. (3) The actions are committed in support of political or social objectives. இது FBI-யின் விளக்கம்.

இதில் தீவிரவாதத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆள்பவர்களோ, சேனைகளோ மிக குறைவு. பெரும்பாலும், அப்பாவி பொதுமக்களே அல்லலுக்கு உள்ளாகின்றனர். Art Blakey-in quote-ஐ கொஞ்சம் மாற்றியமைத்தால் "Causes are like assholes... everyone's got one."

யாருக்குத்தான் வாழ்க்கையில் cause இல்லை? அதே போல் எல்லா தீவிரவாத அமைப்பினருக்கும் ஒரு cause இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எக்காரணத்தைக் கொண்டும் வன்முறையில் ஈடுபடுவோர், தங்கள் செயள்களினால் அப்பாவி மக்களை கொல்ல ஆரம்பிப்பின், அவர்கள் மனிதர்கள் என்கிற தகுதியை இழந்து விடுகின்றனர். அவர்களுடைய நோக்கம் எவ்வளவு உயர்வாகினும் இதே கதியே. இதில் உசாமாவாகட்டும், அராபத்தாகட்டும், பிரபாகரனாகட்டும், ஜெர்ரி ஆடம்ஸ்-ஆகட்டும். எல்லொரும் ஒர் நிலையே. (அரசுகள் போர்களின் மூலம் கொல்கின்றனர். ஆனால் அவ்விவாதம் இக்கட்டுரையின் scope-க்கு வெளியே உள்ளது. தனிமனிதர்களையும், renegade அமைப்புகளைப் பற்றி மட்டுமே நான் சொல்கிறேன்.)

தீவிரவாததிற்கு பதில் தாக்குதலே சரியென்று ஒரு சாரார் கூறுகின்றனர். இல்லை பேச்சுவார்த்தையே சிறந்த வழி என்பர் ஏனையர்.

வன்முறையே சரி என்பவர்கள் முதலில் எடுத்துக்காட்டுவது அமெரிக்காவை. பின்னர் ரஷ்யா மற்றும் இஸ்ரேல். அவர்களின் கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது. 9/11 க்கு அப்புறம் அமெரிக்கா தன்னிச்சையாக முடிவெடுத்து, ஐ. நா சபை பற்றி துளியும் கவலையில்லாமல், 'என் வழி தனி வழி' என்கிற போக்கில் இரு போர்கள் தொடுத்தது. அப்போரினால் அந்நாடுகளில் என்ன பாதிப்பு எற்பட்டது என்பதைச் சொல்வது என் நோக்கல்ல. ஆனால், அப்போரினால் அமெரிக்காவில் தற்பொழுது அமைதியே இருக்கிறது. சில அமெரிக்க உயிர்களையும், பல லட்சம் பிறநாட்டு உயிர்களையும் குடித்தாலும், அவர்களுக்கு இப்போது வரையில் வெற்றியே கிட்டியுள்ளது. அது போரினால் மட்டுந்தான் என்றும் சொல்வதற்கில்லை. பூகோள அமைப்பும் ஓர் காரணம் என்பது என் கருத்து. உசாமா அவர் பாட்டுக்கு தேவா மாதிரி தினமும் ஒரு காஸெட் ரிலீஸ் பண்ணி விடுகிறாரெயொழிய எதுவும் செய்ய முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இன்னமும்
பெரும் threat இருப்பது போல் மாயை உருவாக்க படுகின்றது என்பது பல பார்வையாளர்களின் கருத்து. அதில் எனக்கும் உடன்பாடே.

ரஷ்யர்களுக்கு பேச்சுவார்த்தை என்பது அகராதியில் கிடையாது. சமீபத்தில் கொல்லப்பட்ட செசனிய தீவிரவாதி அஸ்லான் மஷ்காடொவ் விவகாரம் கூட திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையே. இதில் சாதரண ரஷ்யர்களும் சில உயிரழப்புகளை சகித்து கொள்ள தயாராகத்தான் உள்ளனர். மாஸ்கோவில் சென்ற வருடம் ஒவ்வொரு மாதமும் எதாவதோர் தீவிரவாத attack நடந்து வந்தேயிருக்கின்றது. இதில், பெஸ்லான் பள்ளி மற்றும் மாஸ்கோ பாலே தியேட்டரிலும் நடந்த தாக்குதல்களுக்கு ரஷ்யாவின் பதிலிலேயே விடை இருக்கிறது. தமது மக்கள் சிலர் மடிந்தாலும் திவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை என்பதே இல்லை என்பதே அவர்கள் கொள்கை.

இஸ்ரேலியர்களும் சளைத்தவர்கள் அல்ல. "அடிக்கு அடி, உதைக்கு உதை" என்கிற நம் சூப்பர் ஸ்டாரின் தத்துவத்தையே தாரக மந்திரமாக கொண்டவர்கள் (திருமாக்கள் கவனிக்க!). சொல்லப்போனால் அவர்களின் வழியைத்தான் அமெரிக்காவும் ரஷ்யாவும் தற்போது செயல்படுத்தி வருகின்றன. வன்முறையும் பயன்படுகிறது இருப்பினும் தமது மக்களின் உயிர் சேதம் தவிர்க்கமுடியாததொன்றாகிறது.

ஆனால் இவ்வன்முறையால் மட்டுமே தீவிரவாதத்தை தடுக்க முடியுமா என்றால் அதற்கு அமெரிக்கா மட்டுமே (அதுவும் இப்போதைக்கு) எ.கா வாகும். அப்பாவி ரஷ்யர்களும், இஸ்ரேலியர்களும் மடிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாடுகளின் பதில் வன்முறை அதிகரிக்க அதிகரிக்க தீவிரவாதச் செயல்களும் வளர்ந்து கொண்டேதான் போகின்றன. இதற்கு ஒர் எல்லை என்பதே கண்ணில் தெரியவில்லை. அமெரிக்காவின் வெற்றிக்கு ஏனைய காரணங்களும் உண்டு முன்பு சொன்னது போல.

இப்போது பேச்சுவார்த்தை முறைக்கு வருவோம். பெரிய எடுத்துக்காட்டுகள் இந்தியாவும், அயர்லாந்தும். அயர்லாந்தை பொறுத்தவரை ஓரளவிற்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்தியாவின் நிலையில் சிறிதாவது முன்னேற்றம் உண்டு என்று சொல்வதற்கில்லை. நாமும் பாகிஸ்தானும், தீவிரவதிகளும் பசினோம். பேசிக்கொண்டிருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம். இதற்கும் முடிவேயில்லாமல் 50 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனெனில், எது சரியான வழி என்பது தெளிவாகவே இல்லை. இரு வழிகளிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படுவதாக தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் வெளிச்சத்துக்கு வருகின்றது. தீவிரவாதத்திற்கு வித்திடுவோர், பிரச்சனை
தீர்ந்திடுமெனில் வேலையில்லாதோர் ஆகிவிடுவர். ஆகவே பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடிப்பதில் அவர்களின் சுயநலமும் அடங்கியுள்ளது. யாசர் அராபத் ஆனாலும் பிரபாகரன் ஆனாலும் இதே நிலைதான். அவர்களுக்கு போட்டியாக சுயநல அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். கடைசியில் பாதிக்கபடுபவர்கள் அப்பாவி மக்கள் மட்டுமே.

2 Comments:

  1. Anonymous said...

    அன்பரே,

    உமது எழுத்தார்வம் வரவேற்கத் தக்கதே! ஆயினும் தீவிரவாதமும் விடுதலைப் போர்களும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறுபட்டவை என்பதனை நீர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை போலும். எனினும் அவைகள் இரண்டுமே தோன்றுவதற்குக் காரணம் அரச பயங்கர வாதமே என்ற விடயத்தினை நீர் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. எவ் விடயத்தினைப் பற்றியும் நாம் பிரஸ்த்தாபிக்கும் முன் அதனைப் பற்றி பூரணமான புரிந்துணர்வினைப் பெற்ற பின்னரே பிரஸ்தாபிக்க வேண்டும்!


  2. Anonymous said...

    அன்பரே,

    உமது எழுத்தார்வம் வரவேற்கத் தக்கதே! ஆயினும் தீவிரவாதமும் விடுதலைப் போர்களும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறுபட்டவை என்பதனை நீர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை போலும். எனினும் அவைகள் இரண்டுமே தோன்றுவதற்குக் காரணம் அரச பயங்கர வாதமே என்ற விடயத்தினை நீர் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. எவ் விடயத்தினைப் பற்றியும் நாம் பிரஸ்த்தாபிக்கும் முன் அதனைப் பற்றி பூரணமான புரிந்துணர்வினைப் பெற்ற பின்னரே பிரஸ்தாபிக்க வேண்டும்!

    அமைதி நாடும் நண்பன்


 

வார்ப்புரு | தமிழாக்கம்