28/12 - நான்கு பிரிவுகள்

நான்கு பிரிவுகளில் உங்களுடையதும் இருக்கலாம். சமூகத்தில் மிகுந்த அவமானமும் மன அழுத்தமும் என்றென்றைக்கும் கொடுக்கவல்லன இவை. இவ்வளவு சின்ன சமாச்சாரம் என்று புறந்தள்ள முடியாது. ஏனெனில் இவற்றால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பல்வேறு விதமான பிரச்சனைகள் கண்டிப்பாய் ஏற்படும். பெரும்பாலான சமயங்களில் உங்களின் social interaction குறைந்துபோக இவைகளில் ஒன்றே காரணியாக இருக்கும். இன்னும் தீவிரமான சூழ்நிலைகளில் வேலைவாய்ப்புக்கே கூட வேட்டு வைக்கும் சக்தி பெற்றன இவை. மிகவும் முற்றிப்போனால் கண்டிப்பாய் நிபுணரிடம் ஆலோசனைக்கு செல்ல வேண்டும். ஜோக்காக எடுத்துக் கொண்டுவிடாதீர்கள்.

கீழேயுள்ள சுட்டியிலுள்ள பத்தியின் முதல் சிலவரிகளின் மொழிபெயர்ப்பைத் தந்துள்ளேன்.

மேலதிக விபரங்களுக்கு
சுட்டி

தத்து(பி)த்துவம் - 3: Extinction - R

முதல்ல ஒரு புது பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்கு பத்தி. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இந்தோனேசியாவில் இருக்கும் போர்னியோ பகுதில பூனை சைஸுக்கு இருக்கும் இந்த புதுவகை மிருகம் காமிராவில மாட்டியிருக்கு. இருக்கறது ரெண்டே ரெண்டு போட்டோதான். லீமர் (Lemur) என்று அழைக்கப்படும் வகை தான் இது என்றும் இல்லை கீரிப்பிள்ளைப் போன்றது என்றும் சொல்வோர் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இது புது வகை மிருகம் தான் நம்பறாங்க. இதுவரைக்கும் உயிரோட பிடிக்க முடியவில்லை. அதுக்கப்புறந்தான் சந்தேகம் நிரந்தரமாத் தீரும். முழுசா பிடிக்கணும்னு கூட இல்லை. அதோட முடியோ, கழிவுகளோ கிடைச்சா கூட போதும். டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் என்ன வகைன்னு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இப்ப வரைக்கும் இது மாமிசபட்சினியாக இருக்கும்னும், prehensile tail இருப்பதால் arboreal ஆக இருக்கலாம்னும் யூகிக்கறாங்க. Stephan Wulffraat கறவர் தான் WWF சார்பா இந்த குழுவை வழிநடத்துகிறார். எதுக்கு இவ்வளவு முக்கியமா இதுபத்தி பதிவுன்னு கேக்கறீங்களா? கடைசியா இவ்வளவு பெரிய புது விலங்கினம் கண்டுபிடிச்சு நூறு வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது!
Al-Jazeera

உலகிலேயே மொத்தமா 5000 பாலூட்டி ஸ்பிஸீஸ்கள் தான் இருக்கின்றன. ஆனா, இதப் பத்தி உண்மை தெரியாமலேயே கூட போய்விடலாம். ஏன்னா, இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட காடுகளை அழித்து உலகின் மிகப் பெரிய பனை எண்ணெய் தோப்பை உருவாக்க இந்தோனேஷிய அரசு முயன்று வருகிறது. 1.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் (தமிழ்நாட்டின் பரப்பளவில் 15%!). தவிரவும் வருடாவருடம் முறையற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் மட்டுமே 2.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் காடுகள் அழிக்கப்படுகின்றன (தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் 20% வருடாவருடம்!). இவற்றை எதிர்த்து WWF ம் மற்றும் பல தன்னார்வ நிறுவனங்களும் போராடி வருகின்றன. இதுவரை விடியலில்லை. இதுவெறும் இந்தோனேஷியாவில் மட்டுமல்ல தென்னமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டம், இந்தியத்துணைக்கண்டம்னு எல்லா பகுதிகளிலும் 15million ஹெக்டேர்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் கேடு மற்றும் ஆயிரக்கணக்கான வகை உயிரினங்களை விரைவில் ஜூக்களில் மட்டுமே நம் பிள்ளைகள் பார்க்கமுடியுமென்ற நிலைக்கு அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.

கடந்த நானூறு ஆண்டுகளில் மட்டும் 89 பாலூட்டி விலங்கினங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 169 பாலூட்டி இனங்களை Critically Endangered என்று வகைப்படுத்தி அவற்றையும் சீக்கிரமே பரமபதம் அனுப்பவும் முயன்றுகொண்டிருக்கிறோம். எல்லாவகை உயிரினங்கள் என்று கணக்கிலெடுத்தால் (நுண்கிருமிகள், காளான்கள் முதல் திமிங்கிலங்கள் வரை) ஆண்டுதோறும் 27,000 வகை உயிரினங்கள் அழிந்துவருவதாய் பயமுறுத்துகிறார்கள். 27,000. ஓவ்வொரு ஆண்டும்! அதாவது சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு விலங்கு வகை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. கடைசி வரியை திரும்ப படித்துப்பாருங்கள். பார்த்துவிட்டு படிப்பதை நிறுத்தி ஒரு நிமிடம் யோசியுங்கள். பிரச்சனையின் தீவிரம் எளிதாகப் புரியும். இதே விகிதத்தில் சென்றால் இன்னும் நூறே ஆண்டுகளில் இப்போதுள்ள உயிரினங்களில் சரிபாதி அழிந்திருக்குமென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

extinct ஆவது ஒன்றும் இயற்கைக்கு மாறானதல்ல. உலகம் தோன்றியதிலிருந்து 99.9% உயிரினங்கள் அழிந்து மீண்டும் புதிய இனங்களாக உருவெடுத்துத்தான் வந்திருக்கின்றன. ஆனால் விகிதமே பிரச்சனை. ஒரு இனம் அழிந்து அதற்கு ஈடாக புதிய இனம் மூலம் replenish ஆவதற்கு 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் வரை பிடிக்கும். 200,000 மனித தலைமுறைகள்! இதுதான் பிரச்சனையே. பொருளாதார, அறிவியல், மருத்துவ வளர்ச்சியால் குறைந்தபட்ச ஆயுள் நீடிக்கிறது. இதனால் ஒரு vicious cycle ஆக மக்கட்தொகை விண்ணை நோக்கி பாய்கிறது.

பெருகப்பெருக நகரங்களில் இடமின்றி, resources காகவும், இருக்க இடத்திற்காகவு சகட்டுமேனிக்கு காடுகள் அழிப்பது அதிவேகமாய் நடந்துவருகிறது. இந்த 5,700 கோடி மக்கள்தொகைக்கே இவ்வளவு என்றால், இன்னும் நாற்பத்திமூன்றே ஆண்டுகளில் 10,000 கோடியாகிவிடும் என்கிறது ஒரு கணிப்பு. அதுவரை எத்தனை இனங்கள் தாக்குப்பிடிக்குமோ என்று தெரியவில்லை.

நம் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இயற்கை சூழலான சுந்தர்பன்களில் பெங்கால் புலிகளின் மொத்த எண்ணிக்கை 800-ஐ தாண்டாது என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த பேரழிவை சீக்கிரம் தடுத்து நிறுத்தாவிட்டால் காடுகளும், அதனோடு கூடவே பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் கூண்டோடு கைலாசம் போகவேண்டியதுதான். அடுத்த செய்தியில் உள்ள உயிரினம் இதற்கு ஒரு எச்சரிக்கை மணி. மனிதனின் அழிக்கும் சக்திக்கு ஒரு அருமையான உதாரணம்.

மோரீஷியஸின் டோடோ (போர்த்துகீஸ் மொழியில் முட்டாள் என்று அர்த்தம்) (Raphus cucullatus) பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சுமார் 20 கிலோ வரை எடையும், மனிதர்களை கண்டால் பயப்படாத தன்மையும், பறக்கமுடியாதவையாகவும் இருந்தன. பறக்கமுடியாததால் எளிதில் உணவாகின. மனிதர்களுக்கல்ல. காலனியாளர்கள் கொண்டு வந்த மற்ற மிருகங்களினாலும், தமது காடுகள் அழிக்கப் பட்டதாலும். மோரிஷியஸில் பல மில்லியன் ஆண்டுகள் எந்த இன்னலுமின்றி வாழ்ந்து வந்த டோடோக்கள் (natural predators இல்லாததால்; மோரிஷியஸ் காலனியாளர்களுக்கு முன் uninhabited ஆக இருந்தது) 1600 -களில் முதல் டச்சுக்கள் வந்து எண்பதே ஆண்டுகளில் மொத்த டோடோ இனத்திற்கும் பரலோக டிக்கெட் கொடுத்துவிட்டனர். வெறும் 80 ஆண்டுகள்.

மேலும் விவரங்களுக்கு,
Red List
Bagheera

---
சரி நம்ம தத்து(பி)த்துவத்துக்கு வருவோமா? என்னுதில்ல. எங்க படிச்சதுன்னு நினைவில் இல்லை.

மனிதனே இவ்வுலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகளிலும் most adaptible, most sentient, most intellectual இனமா? அதாவது நாமே மற்ற்அ ஜீவராசிகளைவிட முதன்மையானவர்களா?

ஒரு பாக்டீரியாவை எடுத்துக்கொள்ளுவோம். ஒரே செல் உயிரினம். எல்லா இனங்களும் இருப்பது இனப்பெருக்கத்திற்காகத்தானே உயிரியல் படி பார்த்தால். தங்களின் ஜீன்கள் அடுத்த தலைமுறைக்கு அளித்துவிட்டால் பயலாஜிக்கலாக நம் கடமை முடிந்துவிடுகிறது. அடுத்த தலைமுறைக்கு வாழ்வில் ஒரு headstart கொடுக்கலாம். அதுவும் எல்லா உயிரினங்களும் செய்வதில்லை. 'இருப்பது (live)' 'இனப்பெருக்கம்' இந்த ரெண்டுத்தையும் ஒரு ஒரே செல் உயிரினம் நம்மைவிட பலமடங்கு அருமையாக செய்து கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்து எங்கும் வியாபித்திருக்கின்றன. நமக்குள்ளும் வெளியும் என பாக்டிரியாக்கள் இல்லாத இடத்தை இந்த உலகில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமான வேலை. ஆனால், இதே பயாலாஜிக்கல் கடமைக்கு நமக்கு பில்லியன்கள் கணக்கில் செல்கள் தேவைப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பொருட்களின் எவல்யுஷ்னைப் பார்த்தால் உண்மை எளிதில் விளங்கும். ஒரு அறை சைஸில் இருந்த கணினிகள் இன்று கையடக்கமாகிவிட்டன. ஆக, போகப்போக பொருட்களின் அளவு குறைகின்றது. ஆனால் திறன் அதிகரிக்கிறது. ஆகவே, பாக்டிரியாக்கள் மனித இனத்தை விட மேன்மையானவை.

இது எப்டி இருக்கு?

Merry Christmas!

தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி

பிஸியாலஜி என்பது என்னன்னு உங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நம் உடலிலுள்ள உறுப்புகளின் செயற்பாடுகளை பற்றிய படிப்பாகும். (science of the normal functions of the body, its organs, systems : physios - nature; logos - study). ரொம்ப ரொம்ப சுருக்கமா கண்/பார்வை பற்றி. கொஞ்சம் ஆங்கிலத்திற்கு தாவலாமா? தங்கிலீஷுல எழுதறத விட இது மேல்னு நினைக்கிறேன். புரியறதுக்கு கஷ்டமா இருந்தா ரொம்ப வருத்தப்படாதீங்க. எவ்வளவு சிக்கலானது, எத்தனை நிலைகளுக்கு பின்னர் நாம் 'பார்க்கிறோம்' என்பதை காட்டவே பின்வருவது.

1. Retinal Photoreceptor layer

a. rods
i. absorb light
ii. do not differentiate color (only shades of greys)
iii. sensitive to low light levels
iv. more present in peripheral areas of retina (outside central fovea)

b. cones
i. absorb light of particular wavelengths (red, green, or blue)
ii. less sensitive in low light levels
iii. concentrated in central fovea

2. "Dark current" in photoreceptors

a. Na+ (sodium) stay open in photoreceptor when NO LIGHT is being absorbed
b. constant current of Na+ into cell keeps photoreceptor MOST ACTIVE IN DARKNESS
c. active photoreceptor (in dark) continually releases inhibitory neurotransmitters onto neuronal cells in retina

3. Light reactions

a. light photon absorbed by retinal
b. opsin releases "energetic" retinal ("bleaching")
c. opsin then activates transducin molecule
d. active transducin activates phosphodiesterase enzymes
e. active phosphodiesterase enzymes cause Na+ CLOSURE
f. Na+ channel closure reduces "dark current"
g. photoreceptor releases less of the inhibitory neurotransmitters onto neuronal retinal cells
h. neuronal retinal cells fire action potentials, carried by optic nerve to brain...

இது தான் 'பார்ப்பது'



இனி என்னென்ன பாகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்று பார்ப்போமா..
After passing through cornea, lens and finally Retina, the information is transmitted to the optic disc and onto the optic nerve. The Optic Nerves from both eyes are then criss-crossed and straightened out at a point called Optic Chiasma. From there, passes on to a part of brain called Thalamus. The thalamus then passes the information to visual cortex (occipital lobe: rear brain). Then midbrain also receives information from where reflexes are regulated.

என்ன, போரடிச்சுடுச்சா? இது ஒரு பெரிய கடலில் ஒரு சாம்பிள். இந்த மாதிரி உணர்வுகள், உணவு, மூச்சு, இதயம், ரத்தஓட்டம், வளர்ச்சி என்று ஏகப்பட்டவை இருக்கின்றன. இதெல்லாம் எதுக்கு இப்போ? தம்பட்டமா? இல்லை. இல்லை.. நம்ம தத்து(பி)த்துவத்துக்கு அடிப்படையே இதுதான். இத வச்சு பிஸியாலஜி பேராசிரியரை கலாய்ச்சதுண்டு.

அதாவது, பரிட்சையில் கேள்வி வருதுன்னு வச்சுக்குங்க. நாம எப்படி பார்க்கிறோம்-கறதுன்னு? அப்ப பதில் சொல்லத் தெரியலேன்னு வச்சுக்குங்க. ஆனாலும் அவங்க ஒங்களுக்கு 100/100 போட்டுத்தான் ஆகணும். எப்படின்னு யோசிச்சா அதுல தத்துவமே இருக்குது. மேலே சொன்ன பார்வை விஷயத்த பத்தி உங்களின் அறிவு 0. ரெட்டினான்னா என்ன ரொட்டியோட கஸினா, தாலமாஸ்னா பொடிமாஸ் மாதிரியா அப்படின்னு கேக்கற அளவு நம்ம அறிவுன்னு வச்சுக்குங்க. இருந்தாலும், 'பார்க்கிறோமா' இல்லியா? மேலே சொன்ன ஒரு விஷயமும் உங்களுக்கு சொல்லத்தெரியாட்டியும், உங்க மூளைக்கு என்ன செய்தா பாக்க முடியும்னு தெரியுமா தெரியாதா?

இன்னொரு உதாரணத்திற்கு இரத்த அழுத்தம் அதிகமாச்சுன்னு வச்சுக்கோங்க. அத எந்த பேரோமீட்டர் வச்சு அளக்கனும், எது நார்மல் அளவு, இவ்வளவுக்கு மேலே போனா எந்தெந்த ஸ்விட்ச தட்டிவிடனும், அதனால எப்படியெல்லாம் திரும்பவும் நார்மலுக்கு கொண்டுவரணும் எல்லாம் மூளைக்கு தெரியும்தானே?

படிக்கிறது எதுக்கு? மண்டையில ஏறறதுக்கு? ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்த திரும்ப படிக்க வேண்டிய அவசியமில்லேல்லியா? தெரிஞ்சிருக்கிற விஷயத்த வெளியில் எப்படி சொல்லணும்னு தெரியல அவ்ளோதான். அதுதானே பிரச்சனை? வெறும் communication gap மட்டுந்தானே? அதனால பிஸியாலஜி படிக்க தேவையில்ல. என்ன, லாடுலபக்கு சாயல் வருதா? :))

 

வார்ப்புரு | தமிழாக்கம்