பள்ளி இறுதியாண்டுகள் மற்றும் கல்லூரி நாட்களை formative yearsனு சொல்றோமில்லியா... இந்த நாட்களில் தான் உலகத்தைப் புதிதாக பார்ப்பது தொடங்கி சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ நம் கருத்து என்று ஒன்றை அனைத்து விஷயங்களிலும் உருவாக்கிக்கறோம்.
பொதுவா பள்ளிநாட்களில் காலையில் அம்மா வந்து "கண்ணா எழுந்திருடா.. ஸ்கூலுக்கு போவேணாமா"னு கொஞ்சியபடியே எழுப்பிவிடுவதிலிருந்து "காபி வச்சு எத்தனமணியாச்சு.. சீக்கிரம் எழுந்திருடா"ன்னு அப்பா ஸ்க்ரினெல்லாத்தையும் தள்ள அதுவரையில் இருள்படர்ந்த அறையில் மிதந்துகொண்டிருந்த தூசிகளையெல்லாத்தையும் ஸ்டன்னாக்கியபடி ஜன்னலிலிருந்து கசியும் வெயிலிருந்தும் தப்பிக்க போர்வையை இழுத்துப்போர்த்திக்கொள்வதில் ஆரம்பிக்கும் இனிய பள்ளிக்காலைப் பொழுதுகள் அப்புறம் ட்யூஷனிலோனு ஓடி வந்து ஒரு அவசரகுளியல், நித்தியதர்மமாய் சாமிபடம் முன்னாடி நின்னு பாவ்லா பண்ணி அப்புறம் இருக்குற சுடச்சுட சூப்பர் இட்லியையோ மொறுமொறு தோசையோ அடுப்பிலிருந்து அப்படியே தட்டில்விழ அப்படியே டன் கணக்கில் உள்ளே தள்ளி ஸ்கூல் பஸ்ஸுக்கு ஓடுவதற்குள் டிபன் பாக்ஸையோ தண்ணீர் பாட்டிலையோ மறந்துவைத்திருப்போம். அதை எடுத்துக்கொண்டே பஸ்பின்னாடியே வண்டியை எடுத்துக்கொண்டு அப்பா வந்து அடுத்த ஸ்டாப்பிங்கில் கொடுக்க என்று சுகமாய் நகரும் காலைகள். சாயந்திரம் வந்து எதுனாச்சும் நாம கொறிக்கவென்று அம்மா கையில் வைத்துக்கொண்டு நம்பின்னால் சுத்த நாம மட்டையையும் ஷுவையும் தேடி அலைய அப்புறம் விளையாடிவந்த் பிள்ளை ரொம்ப டயர்டாக இருப்பானே என்று பூஸ்டும் கொஞ்சமே படியென்ற அறிவுரையுடன் அதையும் செய்துமுடித்தால் இரவுச்சாப்பாடு தாயார் தயாராக வைக்க அதையும் சாப்பிட்டு சுகமாய் டிவியுடன் தூக்கமென்று நகர்ந்துவந்த துயரில்லாப் பள்ளிப்பருவம்.
இப்படி நாம அனுபவிக்கறதெல்லாம் கண்டு பொறுக்காதவன் ஒருத்தன் வானத்துல உக்காந்து விதிய எழுதுறான்னு தோணுற மாதிரி திடீர்னு ஒருநாள் நீ பெரியவனாயிட்ட.. இனிமே தனியா போய் விடுதியில தங்கிப்படின்னு கொண்டுபோய் திடுதிப்புன்னு கல்லூரி விடுதியில்; பல இடங்களில் சொல்லவே முடியாத அளவு கேவலமாய் இருக்கும்: இடங்களில் முன்பின் தெரியாத நம்ம வயசுப்பசங்க ரெண்டு பேரோட கொண்டுவிட்டு போய்விடுவார்கள். இதுவே வெளிநாடு என்றால் கேட்கவே வேண்டாம். அவன் நம்ம நாட்டுக்கார பசங்களாக் கூட இருக்கமாட்டான். என்ன பேசுறதுன்னு திருதிருன்னு முழிக்கறதுல ஆரமிச்சு இந்தப்பயலுக முழியப்பார்த்தாலே பொறுக்கியாட்டம் இருக்கேன்னு பரஸ்பரம் கைகுலுக்குவதில் தொடங்கும் இந்த உறவு பெரும்பாலும் இந்த ரூம் மேட்ஸே நம் அத்யந்த தோழர்களாய் பெரும்பாலும் மாறுவது அழகுதான்.
மணியடிச்சா சோறு ரேஞ்சுக்கு ஹாஸ்டல் மெஸ் பிரச்சனைகள். இந்த மாதிரி காய்கறிகள இவ்ளோ மட்டமா சமைக்கவும் முடியும்னு ஒருவித ரிசர்ச் பெஸிலிடி மாதிரி இந்தப்பசங்க எவ்ளோதான் தாங்குவாங்கன்னு பார்ப்போம்னே மெஸ்காரங்க செய்றா மாதிரி இருக்கும். அப்புறமா வழக்கமான தண்ணி வராது. விளக்கு எரியாது. நமக்கு முன்னாடி இருந்தவனெல்லாம் இந்த ரூம்ல அப்படி என்னதாண்டா பண்ணிருப்பானுங்கன்னு யோசிக்கவைக்கிற அளவுக்கு சுவரில் மேஜையில் என ஆபாச +/- கிறுக்கல்கள், நொடிப்பொழுதுகளில் வைரமுத்து ஆனவர்கள் விட்டுப்போன draft-கள் என சைட் ட்ராக்கில் ஓடுவது; இதனூடே சீனியர்கள் அலம்பல், பாடங்களின் சுமை என இன்னொரு ட்ராக்கில் அது.
இந்த விடுதிகள் இருக்கே அது ஒரு பாரதவிலாஸ் மாதிரி. முழுக்கிறுக்கனும் இருப்பான். அரைக்கிறுக்கனும் இருப்பான். நம்மளை கிறுக்கன்னு சும்மா சொல்றவனும் இருப்பான் (இதுல என்ன விசேஷம்னா நாம அடுத்தவங்கள கிறுக்கன்னு சொல்லலாம்.. ஆனா அடுத்தவங்க நம்மள சொல்லிடப்படாதுங்கறது பாலபாடம்) இப்படி பலதரப்பட்ட மனிதர்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கப்போகின்ற பலமுகங்களின் ஒரு digest. பள்ளிக்கும் இங்கேயும் என்ன வித்தியாசமென்றால் நம் பிரச்சனையை நாம்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இரு இரு எங்கப்பாவை கூட்டிகிட்டுவரேன்னு மிரட்டறதெல்லாம் இனிநடக்காது. 'காலேஜ் முடியட்டும் வெளியில வாடா'ன்னு பஞ்ச் டயலாக்தான் அங்கே செல்லுபடியாகும். கிளிகளும் நம்மை லுக் விடும். கூடவே பட்டாளத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நிஜமாவே காதல், கத்திரிக்காய், போதை, பழக்கமென பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும்.
சரி, இப்பதிவின் இல்ல சொல்லப்போனா கொத்ஸ்-ஸ்டைல் விவாதமேடையின் நோக்கமே 'விடுதியா வீடா? எது சிறந்ததுன்னு நினைக்கிறீங்க?' வீட்ல படிச்சா அம்மாப்புள்ளையாவே இருப்பாங்க. விடுதியில் படிச்சா ஜகதலப்பிரதாபனா ஆயிடுவாங்கங்கறது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை. இதுல எந்தளவுக்கு உண்மையிருக்கு? worldwiseனு ஆகறதுக்கு வீடு நல்லதா விடுதி நல்லதான்னும் நாளைக்கே இரண்டுமே சாத்தியமென்றால் உங்க பசங்களை எங்க விடுவீங்கன்னும் நாலுபேரு சொல்லுங்க. அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்.
அப்புறமா சுவாரசியமான கல்லூரி விடுதி /வீட்டில்(அப்படி எதுனாச்சும் இருந்தா... :) எந்த சைடுலயும் நான் இல்லை) அனுபவங்களையும் சொன்னா நல்லா பொழுதுபோகும்.
விடுதியா வீடா... தமிழா?
195. முகமூடிக்கு ஒரு பெயர்பெற்ற பாடல்
அட, முகமூடி என்ற பதிவர் *னவீணத்துவ பதிவு ஒண்ணுபோட்டு அதுல யாருமே மீஸிக் சரியா சுட்டுறதில்லன்னு வருத்தப்பட்டுருக்காரு. நான் உக்காந்து யோசிச்சு ஒண்ணு ரெண்டு மூணுன்னு வரிசைப்படுத்தி பாடலீங்க. ரொம்ப பிரபலமான பாடல் இது..
உன்னப்பார்த்த நேரம்..
படம்: அதிசயப்பிறவி
பாடியது: மலேசியா வாசுதேவன், சித்ரா
இசை: இளையராசா
நேத்திக்கு கேட்டுகிட்டிருந்தப்போ இதோட லிரிக்ஸ் கிடச்சா நல்லாருக்குமேனு நினச்சேன். கேட்கக்கூட கிடைக்கவேயில்ல எங்க தேடியும், மீஸிகிந்தியான்லைன் உட்பட. அதான் வேல மெனக்கெட்டு பாஸ், ரீவைண்ட், பாஸ் செஞ்சு பாட்டோட வரியெல்லாம் எழுதிகிட்டேன். இவ்ளோ நல்ல பாட்டு, இதோட வரிகளத் தேடி எத்தன பேரு அலை அலைனு அலைஞ்சுருப்பாங்கன்னு சொல்லி நம்ம பதிவுலயே போட்டுறலாம்னு.. எதுனாச்சும் மிஷ்டேக் இருந்தா தாராளமா சொல்லுங்க திருத்திருவோம்.
பாட்ட கேட்டுக்கலாம்:இங்க
இல்ல இறக்கிக்கலாம்: இங்க
-------------------------------------
உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
உன்ன பாத்தா போதும் பாட்டு தானா வந்துசேரும்
சேத்து மேல நாத்துபோல
நாத்து மேல ஒரு வாத்துபோல
(உன்னப் பார்த்த நேரம்)
பித்த வாந்தியாப் பேசுற
ஒண்ணுரெண்டு பானம் ஏத்துனா
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்லவராம ஏங்குற
ஏனய்யா இந்தா மாதிரி? ஏங்கணும் நடுராத்திரி?
தேவையா இந்த மூத்திரம் ஆத்திரம்? போமய்யா தூங்கு சீக்கிரம்!
மொத்தமா என்னமோ எழுதற.. குத்தமா விளங்காம வந்துட்டா
அட விட்டுத்தள்ளு! நல்ல பாட்டக்கேளு!
(உன்னப்பார்த்த நேரம்)
"தென்னமரக்கீத்து ஆடுது! நரியொண்ணு என்மேல ஓடுது!
நாய்வேற வீணாப்பாயுது!" அட இதானே வாணான்றது?
ஆசையா பாடிக்காட்டுறன்! வேறென்னா எதிர்பார்க்குற?
என்னவோ அள்ளிவீசுற! பேய்னு திட்டித்தீக்குற?
ஒரு மாசமாச்சா? பல சிக்கல்போச்சா?
உன்னப்பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்!
வாதது ஒண்ணு பாடவந்தா, உரிச்சுவெளாடத்தான் வேணும்!
அட.. சேத்துமேல வாத்துபோல!
வாத்துக்குத்தான் கோவம்போல!
(உன்னப்பாத்த நேரம்)
----------------------
நீங்களே நல்லா பாத்துக்கங்க மக்களே! கலர்கோடிங் இல்ல. அடைப்புக்குறி இல்ல. சாய்வெழுத்து இல்ல. போல்டிங் இல்ல. அவ்ளோதான்.
The Blogger Hacking Project ver 1.0
<&!-Start of Comment Project-Blogger Hacking ver 1.0--&amp;amp;>
<&html&>
<&head&>
<&title&>
<&response.write("கும்மிக்கு டைட்டில் அவசியமா"+date(now))<&/title&>
<&style anony='1'; otheroption='1'; spamfilter="0"; decencyfilter='1'&>
<&/head&>
<&body&>
<&script&>
<& dim user
user=person.reading.this
<&!--think to yourself="yes, users are dim.. he he he" &>
&>
<& response.write("அரிசி உப்புமா" OR "ரவா உப்புமா" OR "புளிரவா உப்புமா" OR "அவல் உப்புமா" OR "சுட்ட உப்புமா") &>
<&/body&>
<& open.comments &>
<& script language="உப்புமா" response.auto("வேலையற்றவன்/bencher என்பதில் பெருமிதம் கொள்வோம். Keep in mind uppuma is allowed but no kindifying"+select.blogger(user[hates])+". Thanks. கும்மிக்கு மேட்டர் அவசியமில்லை என்று உணர்த்துவதற்கு நன்றி!")
dim i, j, k, l, m
var i=comment
var J=blogicidal comment
IF comment=0 THEN
J="You bunch of suckers. உங்களைப் போன்ற மூடர்கள் படிக்க அறிவார்ந்த பதிவு எழுதுன நான் என்னையே செருப்பால் அடித்துக்கொள்ளவேண்டும். பதிவு படிக்கறத விட்டுட்டு போய் விவசாயம் பாருங்கடா"
response.write(J)
<&!--- pause2reflect---&>
STOP.response
delete.J(b4sum1Cs)
&>
<&PLAN B&>
<& logout.blogger()
select.self(anony)
response.write("இந்தப்பதிவுக்கு நன்றி" OR "பல புதியவிடயங்களைத் தெரிந்துகொண்டேன்" OR "இந்தப்பதிவை படித்தபின் என் பார்வை விசாலமானது" OR "சூப்பர் தல" OR "இப்பதிவு வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு...")&>
<&!--- NOW i MUST BE 1---&>
<&
ELSE IF comment=1 i=comment+1 &>
<&loop&>
<& for each i response.write("hi"+ user+","+relevant.question(user) OR vambu.valarthufy(user))
NEXT
LOOP
NOENDIF
NOEND &>
<& loopforeternity&>
<&
NEXT IF i=()()
var i=date(time[newpost])
&>
<& response.unwrittenbutunderstood("அன்புள்ள"+user+"உங்கள் பின்னூட்டம் எங்களுக்கும் ரொம்ப முக்கியமானது. எங்களின் பின்னுட்ட கயமைத்தனம் செய்யும் ஏஜெண்ட்கள் விரைவில் உங்கள் பதிவில் வந்து பதில் மரியாதை செய்வார்கள்")
response.unwrittenbutunderstood("Hope you had a safe commenting Experience. Remember we truly respect your privacy and you can give a piece of your mind hopefully without fear of reprisals. We also wish you select our blog for your next comment") &>
<&/noendcomments&>
<&!-A word or a paragraph of text can go in the comments box here---&>
<&/html&>
