tag:blogger.com,1999:blog-11511159.post113937332735844976..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: நண்பன் அவர்களுக்கு....rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-11511159.post-1140122837103893662006-02-16T23:47:00.000+03:002006-02-16T23:47:00.000+03:00நண்பன்,உங்கள் கேள்விகளுக்கு இந்த வாரயிறுதிக்குள் ப...நண்பன்,<BR/>உங்கள் கேள்விகளுக்கு இந்த வாரயிறுதிக்குள் பதிலளிக்கிறேன். என்னுடைய இன்னொரு பதிவில் கவனம் செலுத்துவதாலெயும், தனிப்பட்ட காரணங்காளையுலேயும்.<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>இராமநாதன்rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139871587076404712006-02-14T01:59:00.000+03:002006-02-14T01:59:00.000+03:00ராமநாதன்,உங்களுடைய சில வாதங்களை மேற்கோள் காட்டியும...ராமநாதன்,<BR/><BR/>உங்களுடைய சில வாதங்களை மேற்கோள் காட்டியும் - இது அதுவல்ல, உனக்குப் புரியவில்லை என்றெல்லாம் பேசுவது <BR/>சரிதானா என்று யோசியுங்கள். நானாக எந்த ஒரு வரிகளையும் கற்பனை செய்து மேற்கோள் காட்டவில்லை. <BR/><BR/>உங்களுடைய வார்த்தைகளை நீங்களே மறுப்பது உங்களுடைய விருப்பம். அது குறித்து விவாதிப்பது என் வேலையல்ல. <BR/><BR/>// தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.. நண்பனைக் கண்டால் ஓடு என்று சிலர் அறிவுறுத்தினர். அது உங்கள் வாதத்திறமையை நினைத்து என்று <BR/>நம்பியிருந்தேன். இப்போது புரிகிறது ஏனென்று. // <BR/><BR/>அடுத்தவர் மனம் புண்படாதவாறு விவாதிக்கிறீர்கள் என்று சொல்லியவரே நீங்கள் தான். <BR/><BR/>இப்பொழுது முன்னுக்குப் பின் முரணாக சொல்வதும் நீங்கள் தான். உங்களுடைய வரிகளைக் கொண்டு தான் உங்களிடம் பேசுகிறேன். நானாக <BR/>எதையும் எழுதிக் கொண்டு வரவில்லை. வாதத் திறமை என்று எதையும் நான் சொல்லவில்லை. அதைப் போல யார் வாசிக்கிறார்கள், யார் <BR/>ஓடுகிறார்கள் என்றும் நான் எவரையும் கேள்வி கேட்டதுமில்லை. அது அவரவர் விருப்பம். நான் சொல்லவிரும்பியதை மட்டும் எப்பொழுதும் <BR/>சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றேன். பிறர் மனம் புண்படுமே என்பதற்காக என் கருத்துகளை நான் கூறக்கூடாது என்று எதுவும் இல்லையே.? <BR/><BR/>//<BR/>//முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து, <BR/>ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா? //<BR/><BR/>இதையே நானும் கேட்டேனே என் பதிவில். போராட வைப்பது தலைவர்கள். ஒரு கார்டூனுக்கு (மற்ற மதத்தவரின் பார்வையில்) இவ்வளவு <BR/>கோபப்படும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் தலைவர்கள், ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று <BR/>சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.<BR/>//<BR/><BR/>முதலில் - போராட வைப்பது தலைவர்கள். தவறு. இங்கு அரசியல் கட்சிகள் கிடையாது. அமைப்புகள் கிடையாது. இமாம்களுக்கு <BR/>என்ன பேச வேண்டும் என்ற instructions உண்டு. அவர்களாக எதையும் பேசி விட முடியாது. இந்தப் போராட்டம் - வெறும் குறுஞ்செய்திகள் மூலம்,<BR/>மின்னஞ்சல் மூலம் ஒவ்வொரு தனிநபராக தொடர்பு கொள்ளப்பட்டு செய்யப்பட்டது. வெள்ளிக் கிழமை தொழுகை முடிந்ததும், திரண்ட ஜனத்திரள் <BR/>தான் ஊர்வலம் போனது. இது அரபு நாடுகளில். இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மட்டும் தான் அமைப்புகளால் <BR/>இயக்கப்பட்டது. அதுவும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் தான். <BR/><BR/>நிற்க, ஈரான் அதிபரை எந்த ஒரு அரபு நாட்டுத் தலைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவில்லை. இன்னும் சொல்லப்போனால், <BR/>இஸ்ரேல் மீது எத்தனை அவநம்பிக்கை உண்டோ, அத்தனை அவநம்பிக்கை - அல்லது அதைவிட அதிகமாக - ஈரான் மீது உண்டு. ஈரானியர்கள் <BR/>அரபிகளா, இல்லையா என்பதிலே உங்களுக்குக் குழப்பம் இருக்கும் பொழுது, அந்த நாடுகளின் அரசியல் பின்னணியைப் பற்றிய தெளிவு உங்களிடம் <BR/>இருக்க இயலாது. ஈரானிய அதிபரின் பேச்சிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் பேச்சையொட்டி, பத்திரிக்கைகள் வெளியிட்ட, <BR/>ஹோலோகாஸ்ட் செய்தியை மொழி பெயர்த்து இட்ட பொழுதே, இஸ்ரேல் பற்றிய அவரது பேச்சிற்கு யாருடைய ஆதரவும் கிடையாது என்பதால் <BR/>அவருடைய இஸ்ரேல் ஒழிப்பு பேச்சை நான் வெளியிடவில்லை. அதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால், ஹோலோகாஸ்ட் உண்மையா, பொய்யா<BR/>என விவாதிக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை. <BR/><BR/>மேலும், முஸ்லிம்கள் ஈரானிய அதிபரின் ஆளுகைக்குட்பட்டவர்கள் இல்லை. ஆகையால், ஈரானிய அதிபர் பேசினார் - அதனால் நாங்கள் பதிலுக்குக் <BR/>கார்ட்டூன் போட்டோம் என்று சொல்ல முடியாது. இந்த கார்ட்டூன் பிரச்சினை வந்த பின் தூதரக மட்டத்தில் புகைய ஆரம்பித்த பொழுது தான், ஈரானிய<BR/>அதிபர் பேசினார் - அப்பொழுதும், இந்த கேலிச்சித்திரங்களைக் குறிப்பிடாமல். இரண்டாவது ஹோலோகாஸ்ட், ஒரு அம்பது வருடத்திற்கு முந்தைய நிகழ்வு -<BR/>அதை சட்டத்தின் மூலம் விவாதிப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்? பிரிட்டீஷ் இளவரசன் தன் நண்பன் விருந்திற்கு ஒரு நாஜியைப் போல உடையணிந்து<BR/>சென்ற பொழுது - ஒரு வருடத்திற்கு முன் - எத்தனை எதிர்ப்பு கிளம்பியது ஏன்? ஹாரிக்கு எந்த சுதந்திரமும் கிடையாதா? இதை தான் எல்லோரும் கேட்கின்றனர்.<BR/><BR/>// ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா?<BR/>அதற்கு என்ன சொல்கிறாய்? என்று. <BR/>//<BR/><BR/>முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏன் முஸ்லீம்கள் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டது தாங்கள். <BR/>அதற்கான மறுமொழியாகவே, ஏனென்றால் மிதவாதிகள் மவுனம் காக்கிறார்கள் என்றேன்.// <BR/><BR/>நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் - மறுமொழியாக நீங்கள் சொல்கிறீர்கள் - ஏன் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள்? எதற்கு மறுமொழியாக? <BR/>சொல்லுங்கள் - எதற்கு மறுமொழியாக? <BR/><BR/>// நான் மவுனம் காக்கிறார்கள் என்று சொன்னது உங்களையோ என்னையோ போன்ற மக்களை அல்ல. தலைவர்களை! <BR/>அவர்களை விடுத்து, என் பக்கத்துவிட்டுக்காரரிடம் போய் பின் லாடன் குண்டு போட்டான், நீயேன் கேள்வி கேட்கவில்லை <BR/>என்று கேட்கிற அளவுக்கு இன்னும் "தெளிவு" பெறவில்லை நான். :)// <BR/><BR/>உங்கள் புன்னகைக்கு நன்றி. ஆனால், நீங்கள் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதாவது மிதவாத தலைவர்களை. அந்த தலைவர்களை<BR/>விடுத்து பக்கத்து வீட்டுக் காரனிடம் - அதாவது என் போன்ற சாமான்யர்களிடம் கேட்கக் கூடாது என்ற ஞானத்தைப் பெற்று விட்டீர்கள் புன்னகையுடன்.<BR/><BR/>நான் இப்பொழுது உங்களிடம் வைக்கும் கேள்வி - மிதவாத தலைவர்கள் ஏன் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்? தீவிரவாதிகள் மிதவாத தலைவர்கள்<BR/>தலைமையில் இயங்குகிறார்களா? இல்லையே? இந்த கேலிச்சித்திர எதிர்ப்புப் போராட்டத்தில், சில இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறது. <BR/>அதைப் பற்றி நீங்கள் மிதவாதிகளிடம் கேட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு மிதவாதியும் - அதில் பங்கு பெற்றான். ஒரு <BR/>கட்டத்தில், சிலர் அதீத உணர்ச்சி வயப்படுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டனர். அதனால் வன்முறை நிகழ்ந்தன. அது கண்டிக்கப்படத்தக்க செயல். கடும் <BR/>கண்டனம் எழுதிருக்கிறது. இது பற்றி தனியாக விரிவாக எழுதுகிறேன். நீங்கள் கல்ஃப் நியூஸ் செய்தித் தளத்திற்கு சென்று, வாசகர் கடிதம் பக்கம் <BR/>சென்றால், இந்த கண்டன கடிதங்களைக் காணமுடியும். <BR/><BR/>ஆனால், லேடன் குண்டு போட்டான் - மிதவாத தலைவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்பது எந்த விதத்தில் நியாயம், ராமநாதன்? (இதையும் <BR/>மறுத்துவிட்டு, நீங்கள் வேறு எதையோ பிடித்து தொங்குகிறீர்கள் என்று சொல்லாதீர்கள்) <BR/><BR/>நீங்கள் 'மதிப்பிற்குரிய பாக்கிஸ்தானிய உளவாளி' என்ற தலைப்பில், அபுமுஹை வெளியிட்ட ஒரு பதிவைப் படித்திருந்தால் நான் சொல்வதன் முழு <BR/>அர்த்தம் புரிந்திருக்கும். <BR/><BR/>பின்னர் - இந்துக்களைப் பற்றி குறிப்பிட்டீர்கள் - சதுர்வேதி, சங்கராச்சாரியார் என்று. சதுர்வேதியை பத்திரிக்கைகள் போலி சாமியார் என்று தான் <BR/>குறிப்பிட்டனவே தவிர, இந்து போலி சாமியார் என்று குறிப்பிடவில்லை. சங்கராச்சாரியாரை இன்றளவும் அவருடைய பல பட்டங்களையும் இணைத்து<BR/>மரியாதையுடனே அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன. இதை நான் கேள்வி கேட்கவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் - <BR/>அவர்கள் நிராபராதிகளே என்று நடத்தும் பத்திரிக்கைகள் ஏன் முஸ்லிம்களைப் பிடித்ததும் - தீவிர வாதி பிடிபட்டான் - என்று ஆரம்பித்து, ஊரில் <BR/>நடக்கும் அனைத்து குற்றங்களையும் அவன் தலையிலே கட்டி, திட்டித் தீர்க்கின்றன. அவனுடைய குற்றங்களும் நிரூபிக்கப்படட்டுமே? <BR/><BR/>பெங்களூர் சம்பவத்தில், எத்தனை பேரை கைது செய்து, மிகத் தீவிரமாக செய்திகள் போட்டு, பின்னர் அப்பாவிகள் என்று தெரிந்ததும் மௌனமாக <BR/>விட்டு விட்டார்களே அதைத் தான் ஏன் என்று கேட்கிறேன்.? இதை நீங்கள் மறுப்பதினால் தான் சொன்னேன் - நீங்கள் முடிவு கட்டி விட்டு வாதிக்கிறீர்கள் <BR/>என்று. அது நீங்களே சொன்னது போல கண்ணாடி அணிந்து பார்ப்பதாக இருக்கட்டும் அல்லது கண்ணே இல்லாது இருக்கட்டும் - ஆனால், அதை<BR/>மறுப்பதன் மூலம் - நீங்களே சொன்னது போல - உங்கள் பத்திரிக்கை வாசிப்பு மிகக் குறைவு தான். அதற்காக - என் மனதினுள் புகுந்து ஆராய்ச்சி<BR/>செய்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதினால் நீங்கள் என்ன ஆதாயம் அடைந்து விட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த சின்ன விஷயத்தைப் புரிந்து<BR/>கொள்ள ஹிப்னாட்டிஸம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தமிழகத்தில், தினமலர் தொடங்கி பல்வேறு நாளிதழ்கள் இதை <BR/>தினமும் செய்து வருகின்றன. இனி, ஆனந்த விகடன், ஜூவி, குமுதம் போன்றவை விட்டு விட்டு, தினசரிகளை தொடர்ந்து வாசித்து வாருங்கள் - <BR/>நான் சொல்வது விளங்கும்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139871183230578902006-02-14T01:53:00.000+03:002006-02-14T01:53:00.000+03:00//அப்படி சேகரித்த தகவல்களைக் குறித்து முஸ்லிம்கள் ...//அப்படி சேகரித்த தகவல்களைக் குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? //<BR/><BR/><BR/>// ஏன் திவிரவாதிகள் சொல்வதையோ அல்லது இரானிய அதிபர் உளறுவதையோ பிரசுரிக்கிறார்கள்? அவர்களுக்கு விற்பனை குறி. அவர்களைக் குற்றம் <BR/>ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் இந்த குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டும்? எல்லா உலக நடப்புகளையும், சுனாமி உட்பட எல்லாவற்றையும் காசு <BR/>கொடுத்து வாங்கி காசு பார்ப்பதே அவர்கள் தொழில். இதில் முஸ்லீம்களிடம் மட்டும் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பது <BR/>ஏற்றுக்கொள்ளமுடியாதது. புஷ்ஷின் உளறல்களை கிண்டலடிக்காத / பிரசுரிக்காத பத்திரிகைகளா? ஏன் இரானிய அதிபர் மற்றும் இன்னபிற <BR/>தலைவர்கள் சொல்வதை பிரசுரிக்கிறார்கள் என்ற கேள்விக்கே இடம் கிடையாது. தலைவர்கள் பேசினால் தான் நியுஸ். நாம் பேசினால் வெட்டி <BR/>அரட்டை. அவ்வளவு தான் வித்தியாசம். ஏன் மற்ற முஸ்லீம் தலைவர்களை கேட்கிறார்கள் என்ற கேள்வி எதற்கு? கேட்கத்தான் செய்வார்கள். <BR/>ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் கூட, கருத்து சொல்ல முப்பது பேர் வருவார்கள். அல்லது வரவழைக்கப்படுவார்கள். <BR/>கிரிக்கெட்டிற்கே இப்படியெனறால், "கடவுளின் பெயரால் தலையைக் கொய்வேன்" என்பது இன்னமும் சீரியஸ் மேட்டரல்லவா? அதான் தெளிவு <BR/>பெற மற்ற அறிஞர்களைக் கேட்கிறார்கள். இதிலென்ன தவறு கண்டுவிட்டீர்கள்? //<BR/><BR/>ஐயா,<BR/> <BR/>// தலைவர்கள் பேசினால் தான் நியுஸ். //<BR/>// முஸ்லீம் தலைவர்களை கேட்கிறார்கள் என்ற கேள்வி எதற்கு? கேட்கத்தான் செய்வார்கள். //<BR/>// அதான் தெளிவு பெற மற்ற அறிஞர்களைக் கேட்கிறார்கள். //<BR/><BR/>முதலில் தலைவர்கள் என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழி பேசுபவர்களாய், பரந்து கிடக்கும் <BR/>இஸ்லாமியர்களுக்கு பொதுவான தலைவர் என்று ஒருவர் கிடையாது. அந்தந்த நாட்டின் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் <BR/>மட்டுமே உள்ளனர். இதனால், ஒருவர் சொல்வது மற்ற இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்தாது. எங்கோ ஓரிடத்தில் டெல்லி இமாம் பற்றி <BR/>குறிப்பிட்டீர்கள். தமிழக முஸ்லிம்களிடம் கேட்டால், டெல்லி இமாமைப் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆக, ஒரு நாட்டிற்குள்ளேயே <BR/>இஸ்லாமியர்களுக்கென்று தனித்துவம் வாய்ந்த தலைவர்கள் இதுவரையிலும் இல்லை. (இந்தியாவில் விடுதலைப் போராட்ட காலத்திற்குப் பிறகு) <BR/>ஆக இப்பொழுது இருக்கும் தலைவர்களுக்கு தங்களுக்கு கட்டுப்பட்ட மக்களை வழி நடத்துவது மட்டும் தான் முடியுமே தவிர, பின் லேடன் போன்ற <BR/>தீவிர வாதிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்கள் கிடையாது. இந்த சமயத்தில், இஸ்லாமிய தலைவர்கள் பின்லேடனின் செயலுக்குப் <BR/>பொறுப்பு ஏற்கவேண்டுமென்றோ, அல்லது அவனுக்கு அறிவுரைகள் கூறியோ அவனைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றோ எதிர்ப்பார்ப்பது <BR/>தவறானது. இங்கு நீங்கள் ஏதோ expert commentator மாதிரி தானே கேட்கிறார்கள் என்கிறீர்கள் - அப்படி கேட்பதாக இருந்தால், அதற்கு முஸ்லிம் <BR/>தலைவர்கள் மட்டும் இல்லை எல்லோரும் பதில் சொல்லலாம் - சன் டீவியின் டாப் டென் மாதிரி. நீங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்கிறீர்களா <BR/>என்று தெரியாது. ஒரு முறை பிபிசியில் பாக்கிஸ்தானின் எதிர்கட்சி தலைவரிடம் ஒரு பிபிசி நிருபர் கேட்டார் - நீங்கள் தான் பின்லேடனை ஒளித்து <BR/>வைத்திருக்கிறீர்கள் என்று. <BR/><BR/>நீங்கள் எந்தெந்த முறையில் இஸ்லாமியர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகிறது ஊடகங்களால் என்பதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து <BR/>கொண்டு விடுங்கள் - பின்னர் நான் சொன்னதன் முழு பொருளும் விளங்கும். உங்களுக்கு இத்தகைய செய்திகளும், நிகழ்ச்சிகளும் எட்டவே இல்லை <BR/>என்பதனால், ஊடகங்கள் நியாயமாக நடந்து கொள்கின்றன என்றாகிவிடாது. இதே தான் பிற நாட்டு தலைவர்களுக்கும் - மலேஷியாவின் முன்னாள் <BR/>பிரதமர் முதல் - அரபியாவின் அனைத்து துண்டு துக்கடா நாடுகளுக்கும் இது பொருந்தும்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139871014726768702006-02-14T01:50:00.000+03:002006-02-14T01:50:00.000+03:00//எதைப்பற்றி பேசுகிறோமோ அதைவிடுத்து அடுத்ததற்கு தா...//<BR/><BR/>எதைப்பற்றி பேசுகிறோமோ அதைவிடுத்து அடுத்ததற்கு தாவி, மேலும் என்னையும் குற்றஞ்சொல்லி, நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாய் இதுவரை ஒரு நேர்மையான பதிலும் சொல்லாமல்... கிண்டல், அட்வைஸ் என்று ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>//<BR/><BR/>ஒரு பதிலும் இல்லாமலா, இத்தனை எதிர்கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? கிண்டல், அட்வைஸ்... முதலில் நான் கிண்டல் செய்வதில்லை யாரையும். அட்வைஸ் - நடுநிலைமை என்று சொல்லாதீர்கள் என்றேன். இது அட்வைஸ் அல்ல. விவாதத்தில் பாசாங்கு நிலை என்று ஒன்று உண்டு. அதை செய்யாதீர்கள் என்றேன். நேர்மையான பதிலும் சொல்லாமல் - ராமநாதன், நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் இல்லை - நீங்கள் விவாதத்தில் எதிர் அணியில் நிற்கும் பொழுது, இது ஒரு குற்றச்சாட்டு மட்டுமே - நானும் கூட அதைச் சொல்ல முடியும். <BR/><BR/>பதிவுகளை நீக்காதீர்கள் என்று சொன்னேன். அதற்குக் காரணம் - நான் அனுப்பிய ஒரு பின்னூட்டம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. அதை மட்டுறுத்தலில் நிறுத்தி விட்டீர்களா அல்லது திரிசங்கு சொர்க்கத்திற்குப் போய்விட்டதா என்று தெரியவில்லை. நான் எப்பொழுதும் பின்னூட்டப் பெட்டியில் நேரடியாக தட்டச்சு செய்பவன். பிரதிகள் எல்லாம் எடுத்து வைப்பது இல்லை. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். இப்பொழுது மீண்டும் தவறிப் போன ஒரு பின்னூட்டத்தை நினைவில் வைத்துக் கொண்டு தட்டச்சு செய்வது இயலாது. அந்த வருத்தம் உங்களுக்குப் புரியாது. :-(.<BR/><BR/><BR/>/// அமெரிக்காவிற்கும், இஸ்லாம் மேல் ஊடக வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கும் புரியும்படி எளிய தமிழில் விளக்கினால் <BR/>தன்யனாவேன்.//<BR/><BR/>இஸ்லாம் மேல் ஊடக வன்முறை என்று தமிழகத்தில் நடக்கும் வன்முறையைப் பற்றி - இந்து மதம் சங்கராச்சாரியர் என்றெல்லாம் நீங்கள்<BR/>சொன்னதை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அமெரிக்காவையும் ஊடகங்களையும் முடிச்சுப் போட்டுக்கொண்டது நீங்கள் தானே தவிர, நானல்ல. <BR/>பின் ஏன் தன்யனாவேன் என்ற பதுங்குதல் எல்லாம். <BR/><BR/>//தன்யனாவேன்// எனக்கு இந்த மாதிரி எளிய தமிழ்லாம் தெரியாது ராமநாதன் :-) <BR/><BR/><BR/>//ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். //<BR/><BR/> <BR/>//தீவிரவாத வித்து, விதை என்றெல்லாம் பினாத்தாமல், நேரடியாக பேசப்படும் விஷயத்துக்கு வந்தால் நலம்.// <BR/><BR/>பினாத்துவது ? ராமநாதன் ஒருபுறம் நீங்களே எல்லாவற்றையும் ஒப்புக் கொள்வதும், சற்று நேரங்கழித்து மீண்டும் புலம்புவதும்.....<BR/><BR/>ராமநாதன்,<BR/><BR/>ஒவ்வொரு வரியையும் கோட் பண்ணி, அதிலுள்ள முரண்களைச்சுட்டிக்காட்ட வேண்டெமென்பது என் நோக்கமல்ல. அதனால் தான், முதல் பதிவை <BR/>மேற்கோள் இல்லாமல் ஆரம்பித்தேன். ஏனென்றால், வாசிப்பவர்களுக்கும், எழுதுபவனுக்கும் மிக இடைஞ்சலாக இருக்கிறது என்பதனால். ஆனால், <BR/>நீங்கள் ஒவ்வொன்றையும் மறுக்கிறீர்கள் என்பதினால், இனி, மேற்கோள்களையும் கொடுத்து விடுகிறேன். மேலும் திருப்பிப் படியுங்கள் - அப்பொழுது <BR/>தான் நான் சொல்ல வருவது சரியாக விளங்கும் என்கிறீர்கள்.. அதனால், சில இடங்களில், நீங்கள் சொன்னவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ள விளக்கம் <BR/>கேட்டிருக்கிறேன். நான் விவாதத்தை இன்னும் ஆரம்பிக்க வில்லை. அந்த வரிகளின் மீது. விளக்கம் மட்டும் தான் கேட்டிருக்க்கிறேன். குறிப்பாக <BR/>வறுமையை எதிர்த்து கடவுளின் பேரால் லேடன் போராடுகிறான் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தமிழை நன்றாகப் புரிந்து கொண்டு தான் கேட்கிறான். அல்லது <BR/>மறந்து போய் ஹீப்ரு மொழியில் எழுதி விட்டீர்கள் என்றால், மாற்றி எழுதுங்கள் - லேடன் வறுமை, அடக்குமுறை, இவற்றை எதிர்த்து விடுதலைப் போர்<BR/>புரிகிறான் என்பது எனக்குப் புதுத்தகவல். <BR/><BR/>// ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே <BR/>போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய <BR/>மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக <BR/>முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே <BR/>கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? <BR/>அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில். //<BR/><BR/>ராமநாதன் - இது நீங்கள் எழுதியது தானே? சந்தேகமில்லையே? பினாத்தல் இல்லையே? எங்கு தான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? <BR/>இது நீங்கள் எழுதியது தானே? இது வரையிலும் இது எங்குமே விவாதிக்கப்படாமல், இப்பொழுது எங்கிருந்து வந்தது இது? இதைப் பற்றி <BR/>விவாதிக்கலாமா? அல்லது நான் வேறு எதையாவது பிடித்துத் தொங்குகிறேன் :-) என்று சொல்வீர்களா? இந்தத் தீவிரவாதிகள், வறுமையினாலும், <BR/>சாவினாலும், அடக்குமுறையினாலும் தான் போராடுகிறார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்? முதலில் அதை சொல்லுங்கள். <BR/>இது தான் உங்கள் வாதம் என்றால், உங்கள் தீவிரவாதப் பார்வை முற்றிலும் தவறானதாக இருக்கிறது. <BR/><BR/>பிறகு மீண்டும் நாம் ஆதியிலிருந்து விவாதிக்க வேண்டும் - தீவிரவாதம் என்றால் என்னவென்று. என்ன செய்வது? <BR/><BR/>But no comments on the poor igonorant souls:-) பின்லேடன் வறுமையை எதிர்த்து ஆயுதம் ஏந்துகிறான் என்று சொல்லிய முதல் ஆள் <BR/>நீங்கள் தான் ராமநாதன். சொல்லுங்கள் - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று? <BR/><BR/>நீங்கள் சொன்னதை விளக்குங்கள். லேடன் வறுமையை எதிர்த்துத் தான் போராடுகிறான் என்றால்,அது குறித்து எனக்கு எந்த விவாதமும் இல்லை. <BR/>மற்றவற்றிகுப் போய்ய்விடுகிறேன். ஏனென்றால், அது குறித்து எந்த ஒரு தகவலும் என்னிடத்தில் இல்லை. அல்லது மறுசிந்தனைக்குப் பின் உங்கள் <BR/>வாதத்தையோ, விளக்கத்தையோ மாற்றி அமைக்க வேண்டுமென்றால், நல்லது, செய்யுங்கள்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139864313666871032006-02-13T23:58:00.000+03:002006-02-13T23:58:00.000+03:00முத்து, நன்றி,உங்கள் அறிவுரைகளுக்கு. விவாதிப்பேன்....முத்து, <BR/><BR/>நன்றி,<BR/><BR/>உங்கள் அறிவுரைகளுக்கு. <BR/><BR/>விவாதிப்பேன். <BR/><BR/>ஆனால், அதே சமயம்ம்- விவாதம் முன்னோக்கி சென்றால் தான் அழகே தவிர, தான் சொன்னவற்றை மறுத்துக் கொண்டு இருப்பது அல்ல. <BR/><BR/>என்றாலும், அவருடைய நண்பர்கள் மிகக் கவலைப்படுகிறார்கள் - இவருக்கும் அதில் ஏதோ புரிந்து விட்டது ஏன் நண்பனுடன் விவாதிக்கக் கூடாது என்று. <BR/><BR/>என்ன செய்வது?<BR/><BR/>என்றாலும், அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிடுகிறேன் - தன்னையுமறியாமலே - நடுநடுவேஎ அவர் திசை தடுமாறினாலும்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139863792956532612006-02-13T23:49:00.000+03:002006-02-13T23:49:00.000+03:00ராமநாதன்,உங்களுடைய சில வாதங்களை மேற்கோள் காட்டியும...ராமநாதன்,<BR/><BR/>உங்களுடைய சில வாதங்களை மேற்கோள் காட்டியும் - இது அதுவல்ல, உனக்குப் புரியவில்லை என்றெல்லாம் பேசுவது <BR/>சரிதானா என்று யோசியுங்கள். நானாக எந்த ஒரு வரிகளையும் கற்பனை செய்து மேற்கோள் காட்டவில்லை. <BR/><BR/>உங்களுடைய வார்த்தைகளை நீங்களே மறுப்பது உங்களுடைய விருப்பம். அது குறித்து விவாதிப்பது என் வேலையல்ல. <BR/><BR/>// தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.. நண்பனைக் கண்டால் ஓடு என்று சிலர் அறிவுறுத்தினர். அது உங்கள் வாதத்திறமையை நினைத்து என்று <BR/>நம்பியிருந்தேன். இப்போது புரிகிறது ஏனென்று. // <BR/><BR/>அடுத்தவர் மனம் புண்படாதவாறு விவாதிக்கிறீர்கள் என்று சொல்லியவரே நீங்கள் தான். <BR/><BR/>இப்பொழுது முன்னுக்குப் பின் முரணாக சொல்வதும் நீங்கள் தான். உங்களுடைய வரிகளைக் கொண்டு தான் உங்களிடம் பேசுகிறேன். நானாக <BR/>எதையும் எழுதிக் கொண்டு வரவில்லை. வாதத் திறமை என்று எதையும் நான் சொல்லவில்லை. அதைப் போல யார் வாசிக்கிறார்கள், யார் <BR/>ஓடுகிறார்கள் என்றும் நான் எவரையும் கேள்வி கேட்டதுமில்லை. அது அவரவர் விருப்பம். நான் சொல்லவிரும்பியதை மட்டும் எப்பொழுதும் <BR/>சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றேன். பிறர் மனம் புண்படுமே என்பதற்காக என் கருத்துகளை நான் கூறக்கூடாது என்று எதுவும் இல்லையே.? <BR/><BR/>//<BR/>//முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து, <BR/>ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா? //<BR/><BR/>இதையே நானும் கேட்டேனே என் பதிவில். போராட வைப்பது தலைவர்கள். ஒரு கார்டூனுக்கு (மற்ற மதத்தவரின் பார்வையில்) இவ்வளவு <BR/>கோபப்படும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் தலைவர்கள், ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று <BR/>சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.<BR/>//<BR/><BR/>முதலில் - போராட வைப்பது தலைவர்கள். தவறு. இங்கு அரசியல் கட்சிகள் கிடையாது. அமைப்புகள் கிடையாது. இமாம்களுக்கு <BR/>என்ன பேச வேண்டும் என்ற instructions உண்டு. அவர்களாக எதையும் பேசி விட முடியாது. இந்தப் போராட்டம் - வெறும் குறுஞ்செய்திகள் மூலம்,<BR/>மின்னஞ்சல் மூலம் ஒவ்வொரு தனிநபராக தொடர்பு கொள்ளப்பட்டு செய்யப்பட்டது. வெள்ளிக் கிழமை தொழுகை முடிந்ததும், திரண்ட ஜனத்திரள் <BR/>தான் ஊர்வலம் போனது. இது அரபு நாடுகளில். இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மட்டும் தான் அமைப்புகளால் <BR/>இயக்கப்பட்டது. அதுவும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் தான். <BR/><BR/>நிற்க, ஈரான் அதிபரை எந்த ஒரு அரபு நாட்டுத் தலைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவில்லை. இன்னும் சொல்லப்போனால், <BR/>இஸ்ரேல் மீது எத்தனை அவநம்பிக்கை உண்டோ, அத்தனை அவநம்பிக்கை - அல்லது அதைவிட அதிகமாக - ஈரான் மீது உண்டு. ஈரானியர்கள் <BR/>அரபிகளா, இல்லையா என்பதிலே உங்களுக்குக் குழப்பம் இருக்கும் பொழுது, அந்த நாடுகளின் அரசியல் பின்னணியைப் பற்றிய தெளிவு உங்களிடம் <BR/>இருக்க இயலாது. ஈரானிய அதிபரின் பேச்சிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் பேச்சையொட்டி, பத்திரிக்கைகள் வெளியிட்ட, <BR/>ஹோலோகாஸ்ட் செய்தியை மொழி பெயர்த்து இட்ட பொழுதே, இஸ்ரேல் பற்றிய அவரது பேச்சிற்கு யாருடைய ஆதரவும் கிடையாது என்பதால் <BR/>அவருடைய இஸ்ரேல் ஒழிப்பு பேச்சை நான் வெளியிடவில்லை. அதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால், ஹோலோகாஸ்ட் உண்மையா, பொய்யா<BR/>என விவாதிக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை. <BR/><BR/>மேலும், முஸ்லிம்கள் ஈரானிய அதிபரின் ஆளுகைக்குட்பட்டவர்கள் இல்லை. ஆகையால், ஈரானிய அதிபர் பேசினார் - அதனால் நாங்கள் பதிலுக்குக் <BR/>கார்ட்டூன் போட்டோம் என்று சொல்ல முடியாது. இந்த கார்ட்டூன் பிரச்சினை வந்த பின் தூதரக மட்டத்தில் புகைய ஆரம்பித்த பொழுது தான், ஈரானிய<BR/>அதிபர் பேசினார் - அப்பொழுதும், இந்த கேலிச்சித்திரங்களைக் குறிப்பிடாமல். இரண்டாவது ஹோலோகாஸ்ட், ஒரு அம்பது வருடத்திற்கு முந்தைய நிகழ்வு -<BR/>அதை சட்டத்தின் மூலம் விவாதிப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்? பிரிட்டீஷ் இளவரசன் தன் நண்பன் விருந்திற்கு ஒரு நாஜியைப் போல உடையணிந்து<BR/>சென்ற பொழுது - ஒரு வருடத்திற்கு முன் - எத்தனை எதிர்ப்பு கிளம்பியது ஏன்? ஹாரிக்கு எந்த சுதந்திரமும் கிடையாதா? இதை தான் எல்லோரும் கேட்கின்றனர்.<BR/><BR/>// ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா?<BR/>அதற்கு என்ன சொல்கிறாய்? என்று. <BR/>//<BR/><BR/>முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏன் முஸ்லீம்கள் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டது தாங்கள். <BR/>அதற்கான மறுமொழியாகவே, ஏனென்றால் மிதவாதிகள் மவுனம் காக்கிறார்கள் என்றேன்.// <BR/><BR/>நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் - மறுமொழியாக நீங்கள் சொல்கிறீர்கள் - ஏன் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள்? எதற்கு மறுமொழியாக? <BR/>சொல்லுங்கள் - எதற்கு மறுமொழியாக? <BR/><BR/>// நான் மவுனம் காக்கிறார்கள் என்று சொன்னது உங்களையோ என்னையோ போன்ற மக்களை அல்ல. தலைவர்களை! <BR/>அவர்களை விடுத்து, என் பக்கத்துவிட்டுக்காரரிடம் போய் பின் லாடன் குண்டு போட்டான், நீயேன் கேள்வி கேட்கவில்லை <BR/>என்று கேட்கிற அளவுக்கு இன்னும் "தெளிவு" பெறவில்லை நான். :)// <BR/><BR/>உங்கள் புன்னகைக்கு நன்றி. ஆனால், நீங்கள் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதாவது மிதவாத தலைவர்களை. அந்த தலைவர்களை<BR/>விடுத்து பக்கத்து வீட்டுக் காரனிடம் - அதாவது என் போன்ற சாமான்யர்களிடம் கேட்கக் கூடாது என்ற ஞானத்தைப் பெற்று விட்டீர்கள் புன்னகையுடன்.<BR/><BR/>நான் இப்பொழுது உங்களிடம் வைக்கும் கேள்வி - மிதவாத தலைவர்கள் ஏன் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்? தீவிரவாதிகள் மிதவாத தலைவர்கள்<BR/>தலைமையில் இயங்குகிறார்களா? இல்லையே? இந்த கேலிச்சித்திர எதிர்ப்புப் போராட்டத்தில், சில இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறது. <BR/>அதைப் பற்றி நீங்கள் மிதவாதிகளிடம் கேட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு மிதவாதியும் - அதில் பங்கு பெற்றான். ஒரு <BR/>கட்டத்தில், சிலர் அதீத உணர்ச்சி வயப்படுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டனர். அதனால் வன்முறை நிகழ்ந்தன. அது கண்டிக்கப்படத்தக்க செயல். கடும் <BR/>கண்டனம் எழுதிருக்கிறது. இது பற்றி தனியாக விரிவாக எழுதுகிறேன். நீங்கள் கல்ஃப் நியூஸ் செய்தித் தளத்திற்கு சென்று, வாசகர் கடிதம் பக்கம் <BR/>சென்றால், இந்த கண்டன கடிதங்களைக் காணமுடியும். <BR/><BR/>ஆனால், லேடன் குண்டு போட்டான் - மிதவாத தலைவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்பது எந்த விதத்தில் நியாயம், ராமநாதன்? (இதையும் <BR/>மறுத்துவிட்டு, நீங்கள் வேறு எதையோ பிடித்து தொங்குகிறீர்கள் என்று சொல்லாதீர்கள்) <BR/><BR/>நீங்கள் 'மதிப்பிற்குரிய பாக்கிஸ்தானிய உளவாளி' என்ற தலைப்பில், அபுமுஹை வெளியிட்ட ஒரு பதிவைப் படித்திருந்தால் நான் சொல்வதன் முழு <BR/>அர்த்தம் புரிந்திருக்கும். <BR/><BR/>பின்னர் - இந்துக்களைப் பற்றி குறிப்பிட்டீர்கள் - சதுர்வேதி, சங்கராச்சாரியார் என்று. சதுர்வேதியை பத்திரிக்கைகள் போலி சாமியார் என்று தான் <BR/>குறிப்பிட்டனவே தவிர, இந்து போலி சாமியார் என்று குறிப்பிடவில்லை. சங்கராச்சாரியாரை இன்றளவும் அவருடைய பல பட்டங்களையும் இணைத்து<BR/>மரியாதையுடனே அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன. இதை நான் கேள்வி கேட்கவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் - <BR/>அவர்கள் நிராபராதிகளே என்று நடத்தும் பத்திரிக்கைகள் ஏன் முஸ்லிம்களைப் பிடித்ததும் - தீவிர வாதி பிடிபட்டான் - என்று ஆரம்பித்து, ஊரில் <BR/>நடக்கும் அனைத்து குற்றங்களையும் அவன் தலையிலே கட்டி, திட்டித் தீர்க்கின்றன. அவனுடைய குற்றங்களும் நிரூபிக்கப்படட்டுமே? <BR/><BR/>பெங்களூர் சம்பவத்தில், எத்தனை பேரை கைது செய்து, மிகத் தீவிரமாக செய்திகள் போட்டு, பின்னர் அப்பாவிகள் என்று தெரிந்ததும் மௌனமாக <BR/>விட்டு விட்டார்களே அதைத் தான் ஏன் என்று கேட்கிறேன்.? இதை நீங்கள் மறுப்பதினால் தான் சொன்னேன் - நீங்கள் முடிவு கட்டி விட்டு வாதிக்கிறீர்கள் <BR/>என்று. அது நீங்களே சொன்னது போல கண்ணாடி அணிந்து பார்ப்பதாக இருக்கட்டும் அல்லது கண்ணே இல்லாது இருக்கட்டும் - ஆனால், அதை<BR/>மறுப்பதன் மூலம் - நீங்களே சொன்னது போல - உங்கள் பத்திரிக்கை வாசிப்பு மிகக் குறைவு தான். அதற்காக - என் மனதினுள் புகுந்து ஆராய்ச்சி<BR/>செய்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதினால் நீங்கள் என்ன ஆதாயம் அடைந்து விட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த சின்ன விஷயத்தைப் புரிந்து<BR/>கொள்ள ஹிப்னாட்டிஸம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தமிழகத்தில், தினமலர் தொடங்கி பல்வேறு நாளிதழ்கள் இதை <BR/>தினமும் செய்து வருகின்றன. இனி, ஆனந்த விகடன், ஜூவி, குமுதம் போன்றவை விட்டு விட்டு, தினசரிகளை தொடர்ந்து வாசித்து வாருங்கள் - <BR/>நான் சொல்வது விளங்கும். <BR/><BR/><BR/>// ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே <BR/>போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய <BR/>மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக <BR/>முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே <BR/>கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? <BR/>அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில். //<BR/><BR/>ராமநாதன் - இது நீங்கள் எழுதியது தானே? சந்தேகமில்லையே? எங்கு தான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? இது நீங்கள் எழுதியது தானே? <BR/>இது வரையிலும் இது எங்குமே விவாதிக்கப்படாமல், இப்பொழுது எங்கிருந்து வந்தது இது? இதைப் பற்றி விவாதிக்கலாமா? அல்லது நான் வேறு எதையாவது <BR/>பிடித்துத் தொங்குகிறேன் :-) என்று சொல்வீர்களா? இந்தத் தீவிரவாதிகள், வறுமையினாலும், சாவினாலும், அடக்குமுறையினாலும் தான் போராடுகிறார்கள்<BR/>என்றா சொல்ல வருகிறீர்கள்? முதலில் அதை சொல்லுங்கள். இது தான் உங்கள் வாதம் என்றால், உங்கள் தீவிரவாதப் பார்வை முற்றிலும் தவறானதாக<BR/>இருக்கிறது. <BR/><BR/>பிறகு மீண்டும் நாம் ஆதியிலிருந்து விவாதிக்க வேண்டும் - தீவிரவாதம் என்றால் என்னவென்று. என்ன செய்வது? <BR/>But no comments on the poor igonorant souls:-) பின்லேடன் வறுமையை எதிர்த்து ஆயுதம் ஏந்துகிறான் என்று சொல்லிய முதல் ஆள் <BR/>நீங்கள் தான் ராமநாதன். சொல்லுங்கள் - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று?நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139863463635935632006-02-13T23:44:00.000+03:002006-02-13T23:44:00.000+03:00திரு இராமநாதன்,எனக்குள் இருக்கும் ஒரே கேள்வி இதுதா...திரு இராமநாதன்,<BR/><BR/>எனக்குள் இருக்கும் ஒரே கேள்வி இதுதான்<BR/><BR/>அமெரிக்க என்ற ஒரு நாடு அரேபிய எண்ணையை வாங்காவிட்டால் அவ் அரேபிய நாடுகளின் அட்ரஸ் இருக்குமா?<BR/><BR/>அமெரிக்காவின் தொழில் நுட்பம் இன்றி அரேபிய நாடுகளால் எண்ணையை எடுக்கத்தான் முடியுமா?<BR/><BR/><BR/>அமெரிக்கர்களுக்கு அரேபியர் தேவை, அரேபியர்களுக்கு அமெரிக்கர் தேவை.<BR/><BR/>கூடி வாழ்ந்தால் கோடி ந்ன்மை<BR/><BR/><BR/>Calgary Sivaகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139825113165765272006-02-13T13:05:00.000+03:002006-02-13T13:05:00.000+03:00தனிப்பட்ட தாக்குதலை தவிர்த்து ஒரு விவாதம் ஆரோக்கி...தனிப்பட்ட தாக்குதலை தவிர்த்து ஒரு விவாதம் ஆரோக்கியமாக நடைபெற்று கொண்டு உள்ளது என்று சந்தோசப்பட்டுக்கொண்டபோதே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது.<BR/><BR/>நண்பன்,<BR/><BR/>நான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த(உங்களுடைய ஒரு பதிவில் பின்னூட்டத்திலும் சொல்லியிருந்தேன்) கேள்விகளில் ஒன்று இது.இன்னொரு கேள்வியும் என்னிடம் உள்ளது.பிறகொரு நாள் நான் கேட்கிறேன். மற்றபடி உங்கள் இருவரின் விவாதமும் நன்றாக இருக்கிறது.<BR/><BR/>ராமநாதன்,<BR/><BR/>மனதில் பட்ட கேள்விகளை நியாயமாக கேட்பதற்கு நீங்கள் ஃபீல் பண்ண தேவையில்லை. நீங்களும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.என் மனதில் இருந்த முக்கிய கேள்வி இது.அதை நீங்கள் அழகாக கேட்டுள்ளீர்கள்.<BR/><BR/>இருவருக்கும்:<BR/><BR/>இந்த விவாதங்களினால் யாருக்கும் பயன் இல்லை என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நாலு பேருக்கு விஷயம் புரியுமே....ஆகவே தேவையில்லாத மன சஞ்சலங்களை வி்ட்டுவிட்டு விவாதத்தை தொடருங்கள் நண்பர்களே.....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139812974702017972006-02-13T09:42:00.000+03:002006-02-13T09:42:00.000+03:00எதைப்பற்றி பேசுகிறோமோ அதைவிடுத்து அடுத்ததற்கு தாவி...எதைப்பற்றி பேசுகிறோமோ அதைவிடுத்து அடுத்ததற்கு தாவி, மேலும் என்னையும் குற்றஞ்சொல்லி, நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாய் இதுவரை ஒரு நேர்மையான பதிலும் சொல்லாமல்... கிண்டல், அட்வைஸ் என்று ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.. நண்பனைக் கண்டால் ஓடு என்று சிலர் அறிவுறுத்தினர். அது உங்கள் வாதத்திறமையை நினைத்து என்று நம்பியிருந்தேன். இப்போது புரிகிறது ஏனென்று.<BR/><BR/><BR/>//உங்களுடன் உரையாடுவதில் எந்த அளவுக்கு பயன் இருக்கும் என்பது சந்தேகமே//<BR/><BR/>இதுவே எனக்கும் தோன்றுகிறது. ஏனோ தெரியவில்லை. உங்களுக்கு எப்படி சவுகரியமோ அப்படியே எனக்கும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139812712922168192006-02-13T09:38:00.000+03:002006-02-13T09:38:00.000+03:00//எட்டு போட்டால் தான், அனுமதியே கிடைக்கும் என்ற அட...//எட்டு போட்டால் தான், அனுமதியே கிடைக்கும் என்ற அடிப்படையையும் கொஞ்சம் எத்ரிந்து வைத்துக் கொள்ளுங்கள்//<BR/>என்ன சொல்கிறேன் என்று புரியாமலேயே கருத்துகள் உதிர்ப்பதற்கு மற்றுமொரு சாட்சி. எட்டு போடவேண்டும். ஆனால் எட்டு மட்டுமே அல்ல. :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139812615293422802006-02-13T09:36:00.000+03:002006-02-13T09:36:00.000+03:00//அமெரிக்காவைப் பற்றி அல்ல என்று எங்கப்பன் குதிருக...//அமெரிக்காவைப் பற்றி அல்ல என்று எங்கப்பன் குதிருக்குளில்லை கதையாக வாக்குமுலம் கொடுக்கிறீர்கள். அதுவும் ரோஸா வசந்த் பெயரை எல்லாம் வைத்துக் கொண்டு. அவர் எத்தகைய நேர்மையாளார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். <BR/> //<BR/><BR/>முதலில் ரோஸா வசந்த் பற்றி உங்களுக்கு எவ்வகையான அபிப்பிராயங்களோ. அவரைப் பற்றி நீங்கள் "உண்மையை" அறிந்து கொண்டதாலேயே நாங்களும் புரிந்துகொண்டோம் என்றில்லையே. என்னைப் பொருத்தவரை ஒரு மதிக்கத்தக்க பதிவர். அவ்வளவே.<BR/><BR/>அமெரிக்காவிற்கும், இஸ்லாம் மேல் ஊடக வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கும் புரியும்படி எளிய தமிழில் விளக்கினால் தன்யனாவேன். தீவிரவாத வித்து, விதை என்றெல்லாம் பினாத்தாமல், நேரடியாக பேசப்படும் விஷயத்துக்கு வந்தால் நலம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139812376708646222006-02-13T09:32:00.000+03:002006-02-13T09:32:00.000+03:00//வாதாடும் பொழுது தான் முன்னர் என்ன சொன்னோம் என்பத...//வாதாடும் பொழுது தான் முன்னர் என்ன சொன்னோம் என்பதை மறந்து விட்டு, அடுத்தவர் வாதத்தை நேர்மையற்றதாக்க முயலவேண்டாம்.<BR/><BR/>கருத்து சுதந்திரம் பற்றி, நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டதனாலயே, என் பதிவிலும் குறிப்பிட்டேன். பலவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.<BR/>//<BR/>கருத்துச் சுதந்திரம் என்று நான் சொன்னதற்கும் நீங்கள் பிடித்துத் தொங்குவதற்கும் வித்தியாசம் புரியவில்லையா? அல்லது "புரியவில்லையா"? Please for one moment, go through it again, and am sure any sane mind will get what am stressing on.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139812311980583502006-02-13T09:31:00.000+03:002006-02-13T09:31:00.000+03:00//உங்கள் நோக்கமே - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற...//உங்கள் நோக்கமே - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லவருவது தானே?//<BR/>என் மண்டைக்குள் புகுந்து என் மூளை என்ன யோசிக்கிறது என்று 100% சரியாக சொன்ன நண்பருக்கே ஜாக்பாட்!<BR/>என்ன கற்பனை வளம். ஒரு நிமிடம் திகைத்துப்போய்விட்டேன். இதச் சொல்லும்போது என்ன நினைத்தீர்கள். ஜால்ரா கோஷ்டி வந்து மொத்தமாக எனக்கும் மங்களம் பாடுவார்கள் என்றுதானே. இல்லையென்றால் இப்படி கேவலமாக சொல்லத் தேவைதான் என்ன? நான் பதிவில் குறிப்பிட்ட 1. இதுவந்தாலும், இதற்கு பதிலளிக்க காரணம், நீங்கள் எழுதியதால் மட்டுமே!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139811810871985952006-02-13T09:23:00.000+03:002006-02-13T09:23:00.000+03:00// கூடவே, ஒரு முறை பிரசுரம் செய்தவற்றை எடிட் செய்த...// கூடவே, ஒரு முறை பிரசுரம் செய்தவற்றை எடிட் செய்து நீக்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.<BR/>//<BR/><B>முதலில் தெளிவாக ஒன்று. நான் எடிட் செய்த பின்னூட்டங்கள் எது எதுவென்று என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அவை இல்லாத இடத்தில் நான் எடிட் செய்திருந்தாலோ, இல்லை தங்களின் அபரிமிதமான வாதங்களை கண்டு நடுங்கி என் பதிவில் மாற்றங்கள் செய்திருந்தாலோ.. இவையிரண்டில் எதுவாகயிருப்பினும், ஆதாரத்துடன் குறிப்பிட்டால், நான் பொதுவில் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், ஆதாரமில்லாத பட்சத்தில், நீங்கள் இவ்வாறு என் மீது இத்தகைய அவதூறு செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். </B> I am serious coz u question my integrity. Agreed?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139806726488766522006-02-13T07:58:00.000+03:002006-02-13T07:58:00.000+03:00// கடைசியாக: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ...// கடைசியாக: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ஊடகங்களில் முஸ்லீம்கள் மட்டும் குறிவைக்கப்படுவதைப் பற்றி. நான் அதற்கு மட்டுந்தான் உங்கள் பதிவில் பதிலளித்திருந்தேன். இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கிறேன். அவ்வளவே. ஆனால், நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது அமெரிக்க அராஜகத்தை பற்றி. அது இதற்கு சம்பந்தமில்லாதது. ஆனால் வசதியாக மிதவாதிகளை அமெரிக்கா கட்டிப்போடுகிறது என்ற ஒற்றை வரியை போகிற போக்கில் தூவிவிட்டு இப்பதிவின் கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் புல் ஸ்பீடில் எட்டு போட்டு புல்லட் ஓட்டுகீறீர்கள். (நன்றி: ரோஸாவசந்த்)//<BR/>தீவிரவாதத்தைக் குறித்து பேசும் பொழுது, அமெரிக்காவைக் குறிப்பிடாமல் எந்த வாதமும் செய்ய இயலாது. உங்கள் நோக்கமே - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லவருவது தானே? அமெரிக்க எதிர்ப்பைப் பற்றிப் பேசும் பொழுது, அங்கு தேவையில்லாமல், ஈழம், காஷ்மீரம், பாலஸ்தீனம் என்று முரண்பாடுகளை எல்லாம் - இழுத்துக் கொண்டு வந்து விட்டு, பின்னர் அதன் தொடர்ச்சியாக இங்கும் ஒரு பதிவு போட்டும் விட்டு, இப்பொழுது நான் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் பேசுகிறேன் - அமெரிக்காவைப் பற்றி அல்ல என்று எங்கப்பன் குதிருக்குளில்லை கதையாக வாக்குமுலம் கொடுக்கிறீர்கள். அதுவும் ரோஸா வசந்த் பெயரை எல்லாம் வைத்துக் கொண்டு. அவர் எத்தகைய நேர்மையாளார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். <BR/><BR/>எட்டு போட்டால் தான், பொது இடங்களில் வண்டி ஓட்ட அனுமதியே கிடைக்கும் என்ற அடிப்படையையும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கூடவே, ஒரு முறை பிரசுரம் செய்தவற்றை எடிட் செய்து நீக்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139806570323697232006-02-13T07:56:00.000+03:002006-02-13T07:56:00.000+03:00// கடைசியாக: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ...// கடைசியாக: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ஊடகங்களில் முஸ்லீம்கள் மட்டும் குறிவைக்கப்படுவதைப் பற்றி. நான் அதற்கு மட்டுந்தான் உங்கள் பதிவில் பதிலளித்திருந்தேன். இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கிறேன். அவ்வளவே. ஆனால், நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது அமெரிக்க அராஜகத்தை பற்றி. அது இதற்கு சம்பந்தமில்லாதது. ஆனால் வசதியாக மிதவாதிகளை அமெரிக்கா கட்டிப்போடுகிறது என்ற ஒற்றை வரியை போகிற போக்கில் தூவிவிட்டு இப்பதிவின் கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் புல் ஸ்பீடில் எட்டு போட்டு புல்லட் ஓட்டுகீறீர்கள். (நன்றி: ரோஸாவசந்த்)//<BR/>தீவிரவாதத்தைக் குறித்து பேசும் பொழுது, அமெரிக்காவைக் குறிப்பிடாமல் எந்த வாதமும் செய்ய இயலாது. உங்கள் நோக்கமே - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லவருவது தானே? அமெரிக்க எதிர்ப்பைப் பற்றிப் பேசும் பொழுது, அங்கு தேவையில்லாமல், ஈழம், காஷ்மீரம், பாலஸ்தீனம் என்று முரண்பாடுகளை எல்லாம் - இழுத்துக் கொண்டு வந்து விட்டு, பின்னர் அதன் தொடர்ச்சியாக இங்கும் ஒரு பதிவு போட்டும் விட்டு, இப்பொழுது நான் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் பேசுகிறேன் - அமெரிக்காவைப் பற்றி அல்ல என்று எங்கப்பன் குதிருக்குளில்லை கதையாக வாக்குமுலம் கொடுக்கிறீர்கள். அதுவும் ரோஸா வசந்த் பெயரை எல்லாம் வைத்துக் கொண்டு. அவர் எத்தகைய நேர்மையாளார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். <BR/><BR/>எட்டு போட்டால் தான், அனுமதியே கிடைக்கும் என்ற அடிப்படையையும் கொஞ்சம் எத்ரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கூடவே, ஒரு முறை பிரசுரம் செய்தவற்றை எடிட் செய்து நீக்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139782383491105972006-02-13T01:13:00.000+03:002006-02-13T01:13:00.000+03:00// இரானிய அதிபர் சொன்னது கருத்துச் சுதந்திரம்னா, க...// இரானிய அதிபர் சொன்னது கருத்துச் சுதந்திரம்னா, கார்ட்டூன் போட்டதும் கருத்துச் சுதந்திரம் தானே? இதுக்கு புரட்சி, அதுக்கு மவுனம். ஏனோ? எங்கேயோ ஒரு கோடியில் நடந்ததற்கு பாகிஸ்தானில் கொடியெரிப்பு, இந்தோனேஷியாவில் தூதரக எரிப்பு. இதுக்கெல்லாம் வலுவா மறுப்புகளும் கண்டனங்களும் வந்திருக்கிறதா. இல்லை.//<BR/><BR/>//அவமதிக்கவேண்டும், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் தேவையில்லாமல் எதற்கு இங்கு?//<BR/><BR/>ராமநாதன்,<BR/><BR/>வாதாடும் பொழுது தான் முன்னர் என்ன சொன்னோம் என்பதை மறந்து விட்டு, அடுத்தவர் வாதத்தை நேர்மையற்றதாக்க முயலவேண்டாம்.<BR/><BR/>கருத்து சுதந்திரம் பற்றி, நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டதனாலயே, என் பதிவிலும் குறிப்பிட்டேன். பலவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.<BR/><BR/>முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதினால் எந்த பலனும் இருக்காது. தேவையற்று பேசுபவன் அல்ல நான். <BR/><BR/>உங்களுடன் உரையாடுவதில் எந்த அளவுக்கு பயன் இருக்கும் என்பது சந்தேகமே. <BR/><BR/>என்றாலும் மீதுக்கும் பதில் சொல்கிறேன்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139692059748883742006-02-12T00:07:00.000+03:002006-02-12T00:07:00.000+03:00//சன்னாசி சார் இங்கே எங்கே வந்தாரென்று தெரியவில்லை...//சன்னாசி சார் இங்கே எங்கே வந்தாரென்று தெரியவில்லை...//<BR/><BR/>ஒரே IPயிலிருந்து பல பெயர்களில் பின்னூட்டங்களை இடுவதுபோல, உலகின் பல இடங்களிலிருந்து பல IPகளிலிருந்து ஒரே பின்னூட்டத்தையும் வெவ்வேறு பெயர்களில் இடமுடியும் என்று எனக்கு அறிவியல் விளக்கப்பாடம் கொடுத்து எதையோ விளங்கவைக்க முயற்சித்தோ என்னவோ, மஞ்சமாக்கான், வெங்காயம் என்ற பெயர்களில் என் பதிவிலும் இதே பின்னூட்டம் ஒன்றுக்கு நான்கு முறையாக பல்வேறு IPகளிலிருந்து இடப்பட்டுள்ளது. ஏற்கனவே முடக்கப்பட்ட பின்னூட்டங்களில் ஏதோவொன்று இதிலும் இருப்பதால், எரிதத் தடுப்பு இந்த நாலையும் முடக்கி வைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்த விளக்கம் இவ்வளவுதான். சரிப்பட்டு வருகிறதா?சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139636274799816122006-02-11T08:37:00.000+03:002006-02-11T08:37:00.000+03:00//ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்...//ஒரு மிகப்பெரிய <B>அரபு நாட்டின்</B> தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.//<BR/><BR/>இராமநாதன்,<BR/><BR/>Iranians are Persians not Arabians.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139584323382882632006-02-10T18:12:00.000+03:002006-02-10T18:12:00.000+03:00// ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிட...<B>// ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா? <BR/><BR/>அதற்கு என்ன சொல்கிறாய்? என்று. <BR/>//</B><BR/><BR/>முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏன் முஸ்லீம்கள் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டது தாங்கள். அதற்கான மறுமொழியாகவே, ஏனென்றால் மிதவாதிகள் மவுனம் காக்கிறார்கள் என்றேன். நான் மவுனம் காக்கிறார்கள் என்று சொன்னது உங்களையோ என்னையோ போன்ற மக்களை அல்ல. தலைவர்களை! அவர்களை விடுத்து, என் பக்கத்துவிட்டுக்காரரிடம் போய் பின் லாடன் குண்டு போட்டான், நீயேன் கேள்வி கேட்கவில்லை என்று கேட்கிற அளவுக்கு இன்னும் "தெளிவு" பெறவில்லை நான். :)<BR/><BR/><B>//அப்படி சேகரித்த தகவல்களைக் குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? //</B><BR/>ஏன் திவிரவாதிகள் சொல்வதையோ அல்லது இரானிய அதிபர் உளறுவதையோ பிரசுரிக்கிறார்கள்? அவர்களுக்கு விற்பனை குறி. அவர்களைக் குற்றம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் இந்த குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டும்? எல்லா உலக நடப்புகளையும், சுனாமி உட்பட எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கி காசு பார்ப்பதே அவர்கள் தொழில். இதில் முஸ்லீம்களிடம் மட்டும் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. புஷ்ஷின் உளறல்களை கிண்டலடிக்காத / பிரசுரிக்காத பத்திரிகைகளா? ஏன் இரானிய அதிபர் மற்றும் இன்னபிற தலைவர்கள் சொல்வதை பிரசுரிக்கிறார்கள் என்ற கேள்விக்கே இடம் கிடையாது. தலைவர்கள் பேசினால் தான் நியுஸ். நாம் பேசினால் வெட்டி அரட்டை. அவ்வளவு தான் வித்தியாசம். ஏன் மற்ற முஸ்லீம் தலைவர்களை கேட்கிறார்கள் என்ற கேள்வி எதற்கு? கேட்கத்தான் செய்வார்கள். ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் கூட, கருத்து சொல்ல முப்பது பேர் வருவார்கள். அல்லது வரவழைக்கப்படுவார்கள். கிரிக்கெட்டிற்கே இப்படியெனறால், "கடவுளின் பெயரால் தலையைக் கொய்வேன்" என்பது இன்னமும் சீரியஸ் மேட்டரல்லவா? அதான் தெளிவு பெற மற்ற அறிஞர்களைக் கேட்கிறார்கள். இதிலென்ன தவறு கண்டுவிட்டீர்கள்?<BR/><BR/>பின் லாடனின் விடியோ காஸெட்டை வெளியிட வேண்டிய அவசியமென்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் சொல்கிறேன், பின் லாடன் மீது அபிமானம் வைத்திருக்கும் இன்னும் ஒருவராவது அவனை வெறுக்கத் தொடங்கினால் அதுவே போதும். மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும் இதனால் எளிதில் ஏற்படுத்தமுடியும். இளைஞர்களுக்கு, வீட்டு பெரியோர்கள் மதத்தின் பெயரால் பகை வளர்ப்பதின் ஆபத்தை <BR/>புரியவைக்கலாம். கடவுளின் பெயரால் கொடுமைகள் செய்வதென்பது எத்தனை முட்டாள்தனமானது என்றும் புரிந்துகொள்ளலாமே.<BR/><BR/>தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர் முஸ்லீம்கள் என்பதையெல்லாம் நான் மறுக்கப்போவதில்லை. ஏனென்றால் நான் கேட்கிற கேள்விகளுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் அமெரிக்க அராஜகத்தை குறித்து மிகப் பெரிய 'அவன நிறுத்தச் சொல்லு' விளக்கவுரை அளித்திருக்கிறீர்கள். அதுவும் நான் பதிவிலேயே குறிப்பிட்ட மூன்று வகை மறுப்புகளையும் சரியாகக் கலந்து. <BR/><BR/><B>//பிரச்சினையின் ஆணி வேர் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நோயின் மூலம் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நாங்கள் தாந்தோன்றித்தனமாகக் காரியங்கள் செய்வோம் ஆனால், அதற்கான பொறுப்பை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேலை நாட்டினர் சொன்னால், அது எந்த வகை தர்மம், ராமநாதன்? <BR/>//</B><BR/>ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில்.<BR/><BR/><B>//முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து, ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா? <BR/>//</B><BR/>இதையே நானும் கேட்டேனே என் பதிவில். போராட வைப்பது தலைவர்கள். ஒரு கார்டூனுக்கு (மற்ற மதத்தவரின் பார்வையில்) இவ்வளவு கோபப்படும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் தலைவர்கள், ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.<BR/><BR/>அவமதிக்கவேண்டும், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் தேவையில்லாமல் எதற்கு இங்கு? இப்படி கடவுளின் பெயரால் செய்யப்படும் உளறல்களையும், செயல்களையும் ஏன் பலரும் எதிர்க்கேள்வி கேட்பதில்லை, சர்வதேச ஊடகங்கள் எதுவும் பிரசுரிப்பதில்லையா, பெரும்தலைவர்கள் இப்படி உளறிக்கொட்டுகிறார்கள், டென்மார்க்கிற்கு கிடைத்தது போல் வலுவான எதிர்ப்பு இல்லையே? இதுவே நான் கேட்டதன் சாரம். இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், நூத்திமுப்பது கோடி முஸ்லீம்களும் இவற்றை எதிர்த்து அறிக்கைவிட வேண்டும் என்று நான் சொல்லவேயில்லை. உதாரணத்திற்கு நம் நாட்டில் பிரபலமான டெல்லி ஜம்மா மஸ்ஜித் இமாம் இருக்கிறார். அவரைப் போன்ற influential தலைவர்களைப் பற்றித்தான் சொன்னேன்.<BR/><BR/>இஸ்ரேலுக்கு உரிமையிருக்கிறது என்று நான் சொன்னதும், இஸ்ரேல் ஏன் அணு ஆயுத பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவில்லை என்பதும் நீங்கள் உங்கள் பதிலில் குறிப்பிட்டதானாலேயே தவிர அதை இப்பதிவோடு இணைக்க வேண்டுமென்பதற்காக இல்லை. அமெரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈராக் என்று பேசிக்கொண்டே போனால் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.<BR/><BR/><B>கடைசியாக</B>: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ஊடகங்களில் முஸ்லீம்கள் மட்டும் குறிவைக்கப்படுவதைப் பற்றி. நான் அதற்கு மட்டுந்தான் உங்கள் பதிவில் பதிலளித்திருந்தேன். இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கிறேன். அவ்வளவே. ஆனால், நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது அமெரிக்க அராஜகத்தை பற்றி. அது இதற்கு சம்பந்தமில்லாதது. ஆனால் வசதியாக மிதவாதிகளை அமெரிக்கா கட்டிப்போடுகிறது என்ற ஒற்றை வரியை போகிற போக்கில் தூவிவிட்டு இப்பதிவின் கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் புல் ஸ்பீடில் எட்டு போட்டு புல்லட் ஓட்டுகீறீர்கள். (நன்றி: ரோஸாவசந்த்)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139582176231354102006-02-10T17:36:00.000+03:002006-02-10T17:36:00.000+03:00நண்பன்,விவாதம் செய்வோர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்க...நண்பன்,<BR/>விவாதம் செய்வோர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் இல்லை. சிலருக்கு விவாதங்கள் செய்வது பிடிக்கும். சிலர் ஈகோவிற்காக செய்வார்கள். சிலர் புதிதாய் கற்கலாமே என்ற ஆசையில். பொதுவாக நான் எந்தவித விவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. உங்கள் பதிவில் தான் முதல்முறையாக இது சம்பந்தமான என் கருத்துகளை கூறினேன். நண்பர்கள் என் மேலுள்ள அக்கறையிலும், இதுபோன்ற பெரும்பாலான விவாதங்கள் முடிவில் பதிவிற்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வந்து திட்டி சண்டையில் முடிவது தெரிந்ததாலும் அப்படிக் கூறுகின்றனர். அவர்கள் மேல் தவறு இல்லை. ஆனால், மட்டுறுத்தல் வந்தபின் அந்த மாதிரி flamers இங்கே வர சாத்தியங்கள் குறைவு என்பதாலும் இதை எழுதினேன்.<BR/><BR/>ஹோலோகாஸ்ட் பற்றி இப்பதிவில் சம்பந்தமில்லையென்பதாலேயே நீக்கினேன். அதற்கு ஒருவர் பதிலளிக்க மற்றவர் மறுத்தளிக்க என்று இப்படியே போகும். தமிழ்மணம் பற்றித் தாங்கள் அறியாததல்ல.<BR/><BR/>தமிழகப் பத்திரிகைகள் என்று நீங்கள் குறிப்பிட்டதிலிருந்து நான் புரிந்து கொண்டது ஹிந்து, எக்ஸ்பிரஸ், தினமலர், தினத்தந்தி போன்ற நாளேடுகளும், விகடன், குமுதம் போன்றவையும் அவற்றைச் சார்ந்தவையும். இவைத் தவிர சில வலைத்தளங்கள் அவ்வப்போது படிப்பதுண்டு. விரயம் என்பதனைவிட, தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று ஓரளவிற்கேனும் புரிந்துகொள்ள உதவுகின்றன இவை. இவை தவிர வெகுஜன பத்திரிகைகள் என்று வேறெதுவும் எனக்குத் தெரிந்து இல்லை. இதில் வெகுஜன என்பதையே முக்கியமான வார்த்தையாக கொள்ள வேண்டும். influential என்பதால். இவற்றைவிட இன்னும் அதிக அளவில் பொதுமக்களை influence செய்யும் பத்திரிகைகள் இருந்தால் சுட்டி கொடுக்கவும். உதவியாய் இருக்கும்.<BR/><BR/>பின்னூட்டங்கள் விளையாட்டுக்கு. உங்களுக்கும் விளையாட ஆசையிருந்தால் தாராளமாக விளையாடலாம். :)<BR/><BR/>ஆனால், ஒரே பதிலாய் அளித்தால் பதிவு போன்று நீண்டு விடும். படிப்பவருக்கும் சிரமம். தனித்தனியாக கேள்விக்கு பதிலளிப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.<BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139576055179661352006-02-10T15:54:00.000+03:002006-02-10T15:54:00.000+03:00// இரானிய அதிபரில் ஆரம்பித்து பச்சா தீவிரவாத கூட்ட...// இரானிய அதிபரில் ஆரம்பித்து பச்சா தீவிரவாத கூட்டத்து ஆட்களெல்லாம் பேசும் பேச்சுகளை கேட்டிருக்கீறீர்களா? பிபிசி, இண்டிபெண்டண்டில் ஆரம்பித்து ஆஸ்திரேலியன் ஏஜ் வரை உலக பத்திரிகைகள் அனைத்தும் அவர்கள் பேசும் அமைதி ததும்பும் பேச்சுகளை வேண்டுமென்றே ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து islamophobia விற்கு தீனி போடுகிறார்கள் என்கிற மாதிரி இருக்கிறது மதம் அதில் சம்பந்தப்படவில்லையென்கிற உங்கள் கருத்து. இது உண்மையா?//<BR/><BR/>முதலில், ஒரு பின்லேடனோ, அல்லது ஜாவ்ரியோ ஏதாவது ஒரு உரையில் உளறிக் கொட்டினால், அதை தங்கள் வியாபாரத்திற்காக காசு கொடுத்து வாங்கி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று திகட்ட திகட்ட செய்தி அளிக்கும் அந்த நிறுவனங்களிடம் நீங்கள் கேள்விகள் எதுவும் வைப்பதில்லை. ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா? அதற்கு என்ன சொல்கிறாய்? என்று. <BR/><BR/>நான் உங்களிடம் கேட்கிறேன் - ஏன்? <BR/><BR/>ஏன் உலகில் நடக்கும் போராட்டங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதைத் தான் - 'இதெல்லாம் தற்செயலான சிந்தனை தானா' என்று கேட்டேன்? சொல்லுங்கள் - இந்தத் தீவிரவாதி என்ன செய்கிறான், அந்தத் தீவிரவாதி என்ன செய்கிறான் என்று செய்தி சேகரிக்கும் போர்வையில் அலைவது யார்? அப்படி சேகரித்த தகவல்களைக் குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? தீவிரவாதம் குறித்து நீங்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்களோ அதையே தான் நானும் கொண்டிருக்கிறேன். இதை இதற்கு முன்னரும் நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன் - தீவிரவாதத்தை எதிர்ப்போம் - அனைத்து தீவிரவாதத்தையும் தான். ஆனால், அந்த அறைகூவலை ஏற்றுக் கொள்ள முடியாமல் விலகிக் கொண்டவர்கள் தான் இருக்கிறார்கள்.<BR/><BR/>இன்று உலகில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட்டு மரணமடைபவர்களில் அதிகம் பேர் - இஸ்லாமியர்கள் தான். இராக் ஆகட்டும், ஆஃப்கானிஸ்தான் அல்லது பாக்கிஸ்தான் ஆகட்டும் - தீவிரவாதத்தை எதிர்த்து அதிக அளவில் மாண்டு போவது இஸ்லாமியர் தான். இந்தத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் மிதவாதிகளின் கைகளை பலவீனப்படுத்துபவர்கள் யார் தெரியுமா?<BR/><BR/>அமெரிக்கர்களும் அவர்களைச் சார்ந்து நிற்கும் மேலை நாட்டினரும். <BR/><BR/>பாக்கிஸ்தானில், ஒரு விருந்து கொண்டாட்டத்தில், அல்கொய்தாவின் நம்பர் 2 ஜாவ்ரி இருக்கிறார் என்ற தப்பான உளவுத்துறையின் தகவலால் - பதினெட்டு பேர் - பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். பாக்கிஸ்தானில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது - முஷ்ரப்பிற்கு எதிராக. அவரே நொந்து கொண்டார் - தங்களுக்குத் தெரியாமல், தவறு நிகழ்ந்து விட்டது என்று. <BR/><BR/>மக்களின் நன் மதிப்பைப் பெறாமல், எந்த ஒரு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையும் வெற்றி பெறாது என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாத அமெரிக்கர்களின் வெளியுறவு கொள்கை தான் அவர்களது முதல் எதிரி. <BR/><BR/>முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து, ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா? <BR/><BR/>பிரச்சினையின் ஆணி வேர் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நோயின் மூலம் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நாங்கள் தாந்தோன்றித்தனமாகக் காரியங்கள் செய்வோம் ஆனால், அதற்கான பொறுப்பை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேலை நாட்டினர் சொன்னால், அது எந்த வகை தர்மம், ராமநாதன்? <BR/><BR/>நடுநிலையாளார் என்ற போர்வைக்குள் புக முயற்சிக்காதீர்கள். சரியா, தவறா என முடிவெடுக்கத் தெரியாத, பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் பெரிய மனிதராக இல்லாமல், (நன்றி:: அப்படிப்போடு) மனசாட்சியை பதில் சொல்ல வையுங்கள் - ஆள் தோட்ட பூபதி மாதிரி.<BR/><BR/>மற்றவை தொடரும்....நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139573748322059162006-02-10T15:15:00.000+03:002006-02-10T15:15:00.000+03:00// இப்பதிவை எழுதி என் மேல் இருக்கும் பிம்பத்தையும்...// இப்பதிவை எழுதி என் மேல் இருக்கும் பிம்பத்தையும் உடைத்துக் கொள்ள வேண்டுமா என்று நிறைய யோசித்தேன். ஆனால், நண்பனிடம் பதில் எழுதுவதாக சொல்லிவிட்டு அதைச் செய்யாவிட்டால் அவமரியாதையாக இருக்குமென்பதாலும், அநாதிநாதர் போன்றவர்கள் நான் பதில் போடாடதற்கு புது கற்பிதம் செய்ததைப் போல் எத்தனை பேர்கள் செய்திருப்பார்கள் என்பதையும் நினைத்தே இப்பதிவு. //<BR/><BR/>நண்பனுக்கு மரியாதை கொடுக்க நினைத்ததற்கு மிக்க நன்றி. <BR/><BR/>ஆனால், அதே சமயம் விவாதம் செய்பவர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்களா என்ன? பிம்பத்தை உடைத்துக் கொள்ள வேண்டுமா என்று எழுதி இருக்கிறீர்கள்? அதே போல, உங்கள் நண்பர்களின் அறிவுரைகளைப் படித்ததும் ஞாபகம் வருவது படித்தவர்களே விவாதத்திற்கு அஞ்சினால், பின்னர் எப்படி தான் தெளிவு கிடைப்பது? <BR/><BR/>மேலும் உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. இவ்வளவு தானா? ஹோலோகாஸ்ட் நடந்ததா, இல்லையா என்ற பிரச்சினை இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களை அவமரியாதை செய்து விட்டு, ஓடி ஒளிந்து கொள்ளும் போலி ஜனநாயகவாதிகளை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி அது. இப்பொழுது தெளிவாயிருக்கும். அதைத் தான் நான் எடுத்து மொழி பெயர்த்தேன். <BR/><BR/>அவ்வளவு தான். <BR/><BR/>எழுதுபவரின் பெயரைக் கொண்டு தான் அவருடைய பதிவுகளும் எடை போடப்படும் என்ற கொள்கை வைத்திருக்கும் சில குறுகிய எண்ணம் கொண்ட அக்கரை நண்பர்களுக்கிடையில், சமுத்ராவின் கருத்து ஒன்றும் அத்தனை மோசமானதல்ல. மேலும், நான் சொல்ல நினைத்தது - மட்டுறுத்துவதாக இருந்தால், ஒன்று முழுமையாக நீக்கி விடுங்கள் அல்லது அப்படியே பிரசுரியுங்கள். அதாவது, நீங்கள் கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு வெட்ட ஆரம்பிக்காதீர்கள் என்று தான். <BR/><BR/>பின், உங்கள் பொது அறிவை நான் கேள்வி கேட்கவில்லை. <BR/><BR/>உங்களுக்கு தமிழகப் பத்திரிக்கைகள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்று தான் கேட்டேன். ஏனென்றால் - நீங்கள் ரஷ்யாவில் இருந்து எழுதுகிறீர்கள். அங்கே இந்தப் பத்திரிக்கைகள் கிடைக்குமா என்று தான் கேட்டேன். இணையத்தில் கிடைக்கிறது என்கிறீர்கள். காசு பணத்தை விரயம் செய்து, பொய் பரப்பும் பத்திரிக்கைகளா படிக்கிறீர்கள் இணையத்தில்? ஆச்சரியம் தான். படிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கையிலே.!!!<BR/><BR/>(அப்புறம் - நீங்கள் நிறைய பின்னூட்டம் விரும்புவீர்கள் என்பதால், குட்டி குட்டியாய், ஆனால் நிறைய பின்னூட்டங்கள் இடுகிறேன். சரியா? )நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139464842681174792006-02-09T09:00:00.000+03:002006-02-09T09:00:00.000+03:00//நம்ம பதிவுகள் வழக்கம் போல தொடரும்.//சிங்கம் ஒன்ற...//நம்ம பதிவுகள் வழக்கம் போல தொடரும்.//<BR/><BR/>சிங்கம் ஒன்று புறபட்டதே :-)<BR/><BR/>I would be more happy to read articles on Life / study (how to) Doctor their career prospects and general life of ppl in russia. raise and fall of russian economy. i know it wouldnt fetch more comments but would have regular readers.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1139450706303861072006-02-09T05:05:00.000+03:002006-02-09T05:05:00.000+03:00திருப்பாச்சி,உம்ம பின்னூட்டத்த பதிச்சதுக்கு ஸ்பெஷல...திருப்பாச்சி,<BR/>உம்ம பின்னூட்டத்த பதிச்சதுக்கு ஸ்பெஷல் காரணமிருக்கு அப்பா. <BR/><BR/>'Lighter Side of Sports' கேள்விப்பட்டிருக்கீறீரா? அதேதான். நீங்க சொல்ற காமெடிய reject பண்ண மனசு வரல. :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com