டாக்டர்..... நீங்க நல்லவரா? கெட்டவரா?

அரசு மருத்துவர்கள் பற்றி கொஞ்ச நாள் முன்னாடி எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக...


கோழியால் முட்டை வந்ததா என்பது மாதிரியான கேள்வி - இன்று மருத்துவர்களை services விற்கும் vendor-களாக மக்கள் பார்ப்பதனால் மருத்துவர்களும் business-ஆக தம் தொழிலை கருதுகிறார்களா இல்லை இதனால் அது வந்ததா?


இப்போதும் கிராமங்களிலிருந்து வரும் மக்கள், குடும்ப மருத்துவரை, தம் குடும்பத்தினராகவே கருதுவதை பார்க்கிறோம். ஆனால் அங்கேயும்சுகாதார மையங்கள் ஒழுங்காக இயங்குகின்றனவா என்பது பல இடங்களில் சந்தேகமென்று நினைக்கிறேன். இதைப்பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத்தால் தெரிந்தோர் கூறினால் நன்று. ஆனால் நமக்கு பழக்கப்பட்ட நகர்ப்புறங்களில், நான் பார்த்தவரையில். ஒரு டிவி வாங்கினோம். அதற்காக கடைக்காரனை என்ன கட்டிக்கொள்கிறோமா? அதே போல ஒரு மருத்துவ நிபுணர் நம்மை குணப்படுத்துகிறார் என்றால் சும்மா ஒன்னும் செய்யலியே. பணம் கொடுத்துத்தானே அவரோட service-ஐ வாங்குகிறோம் என்ற மனப்பான்மை பெருகிவருகிறது.


நமக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கெட்ட எண்ணம் தோன்றிவிட்டால். ஏன், அச்சமூகத்தைச் சேர்ந்த பத்துப்பேரைக் கூட நமக்கு தெரியாமல் இருக்கும். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை, wrong context-இல் எடுத்துக்கொண்டு சர்வசாதாரணமாக generalize பண்ணுவது நம் பழக்கமாகிவிட்டது. அரசியல் என்றாலே சாக்கடை. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள். இதெல்லாம் இந்த அறிவற்ற generalization வரும் inference-கள் என்று சொல்லலாம். இதுபோல் தனியார் மருத்துவர்கள் காசு புடுங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள் எல்லாம் பில்-ஏற்றி ஹார்ட் அட்டாக் கொடுக்கும் என்பதும். இவை நகைச்சுவைக்காக சொல்வதெனில் பரவாயில்லை. அல்லது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் நடப்பதை எடுத்துச் சொல்லலாம். ஆனால் generalize செய்வதால் பிரச்சனை.


ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ரத்த அழுத்தம் என்று வைத்துகொள்வோம். ரத்த அழுத்தத்திற்கு 2 ரூபாய்க்கும் மாத்திரை எழுதலாம். 100 ரூபாய்க்கும் எழுதலாம். இதில் மருத்துவருக்கும் dilemma இருக்கும். உங்களின் நிலையைப் (status) பொறுத்தே மருந்து கொடுக்க வேண்டும். அதேசமயம் அது நோய்க்கான தீர்வாகவும் இருக்க வேண்டும். 100Rs க்கு எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் சொன்ன 2 ரூபாய், 100 ரூபாய் மாத்திரைகள் இரண்டுமே ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துபவைதானே. இவர் ஏன் 100 Rs க்கு எழுதுகிறார் என்ற கேள்வி நியாயமாக எழக்கூடிய ஓன்று. அதற்கு பதில் - ரிசல்ட் ஒன்றானாலும், உங்களின் உடலிற்கேற்ப, conditions-களுக்கேற்ப எது தேவையோ அதைத்தான் எழுதமுடியும். ஆனால், யோசிக்காமல் மக்கள் உடனே கூறுவது, "doctor-க்கு மருந்து கடைலேர்ந்து கமிஷன் போது போல"-னு சர்வ சாதாரணமாக இகழ்வர். நீங்கள் போகும் மருத்துவர் தெரியாத்தனமாக சைடு பிஸினஸாக
மருந்துகடை வைத்திருந்தாரென்றால் இன்னும் மோசம். "கடை ஆரம்மிச்சாலும் ஆரம்மிச்சார், இப்டி எழுதி தள்ளிகினே போறாரே" என்று டயலாக் வரும். இதில் நல்லது செஞ்சாலும் கெட்ட பேர்தான்.

அதுக்காக மருத்துவர்கள் எல்லோரும் தேவையானவற்றையே எழுதுவார்கள் என்ற நம்பிக்கையும் வைக்காதீர்கள். நான் யாருக்கு சப்போர்ட்-னு உங்களுக்கு சந்தேகம் வந்தாலும் பரவாயில்ல. சொல்ல வந்தத சொல்லிடறேன். சும்மா கமிஷன் வாங்கிண்டு கன்னாபின்னானு எழுதும் டாக்டர்களும் பலர் உள்ளார்கள். உங்களுக்கு எழுதப்படும் ஒவ்வொரு மருந்தும் மாத்திரையும் என்னது, எதற்க்காக கொடுக்கப்படுகின்றது, இது இல்லையென்றால் வேறென்ன சாப்பிடலாம் என்பவற்றை எல்லாம் விவரமாக மருத்துவரைக் கேளுங்கள். படித்தவர்கள் கூட சிவப்பு கலர் capsule, மஞ்ச கலர் மாத்திரை என்ற நிலையிலேயே நம்மூரில் இருக்கிறார்கள். இப்பல்லாம் மருத்துவமனைகளிலேயே நோயாளிக்கென ஒரு folder போட்டு விடுகிறார்கள். அதிலேயே மருந்துசீட்டின் கூடவே இந்த விவரங்கள் பின் பண்ணி வைத்துகொள்ளுங்கள். தனியாக ஒரு பேப்பரில் எழுதி உங்க ப்ளட் க்ருப் கூடவே இந்த விவரங்களையும் எழுதி பர்ஸ்-ல வெச்சுக்கறதும் நல்லது. இத்துடன் இன்று ஒரு தகவல் முடிவடைகிறது.

இப்பல்லாம் ரத்த பரிசோதனைக்கூடம் , ஸ்கேன் சென்டர் ஏன் மருத்துவமனைகள் கூட ஒரு நோயாளிக்கு இவ்வளவு என்று
கொட்டிக்கொடுப்பதும் நடக்கிறது. இதைத்தவிர, மருந்து கம்பெனிகள் கொடுப்பது தனி. சும்மா ஏனோதானோனு எழுதினிங்கனால்லாம் வெறும் நோட்பாட், பென் ஸ்டாண்ட் காலெண்டர் தான். ஆனா, கிட்டத்தட்ட அவங்க சொன்ன டார்கெட் தொட்டுட்டீங்கன்னா ஏசி, பிரிட்ஜில் ஆரம்பிக்கும். எனக்கு தெரிஞ்சு ஒரு கம்பெனி எங்க ஊர்லேயே Honda City கொடுத்திருக்கிறது மூணு பேருக்கு. உனக்கு எப்படிடா தெரியும்னு நீங்க கேட்கலாம். இதெல்லாம் தெரிஞ்சுதானே மருத்துவம் படிக்கணும்னே முடிவு பண்ணேன்! :)


ரொம்ப பெரிய பதிவாப் போச்சு. மிச்சம் அடுத்த தடவை.

0 Comments:

 

வார்ப்புரு | தமிழாக்கம்