210. அம்மநாம் அஞ்சு மாறே

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
. 518

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக்
கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
. 523

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525

திருச்சிற்றம்பலம்

--------------------
இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு?

மாணிக்கவாசகர் மணிமணியாச் சொல்லிட்டு போயிருக்காரு. அம்புட்டுதேன்!

சென்ற பதிவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் போகலாம். இருக்குற மாதிரி தெரிஞ்சா இருக்கு. இல்லாத மாதிரி தெரிஞ்சா இல்ல. இருக்குற மாதிரி தெரியறவங்க இல்லாதவங்கள படுத்தாதீங்க. இல்லன்னு சாதிக்கிறவங்க இருக்குங்கறவங்களத் தொல்லப் பண்ணாதீங்க. இருக்கா இல்லியான்னு குழப்பமாவே இருந்துச்சுன்னா அந்தப் பக்கம் போய் ஓரமா உக்காந்துகினே யோசிச்சு இருக்கா இல்லியானு ஒரு முடிவெடுத்துட்டு வந்து அப்புறமா இருக்குங்குறீங்களா இல்லேன்னு நினைக்கிறீங்களானு பிட் நோட்டீஸ் வேணாம், பின்னூட்டமாவே சொன்னாப் போதும். எப்படியும் இருக்கா இல்லியான்னு நாம பேசி முடிவெடுத்து ஒண்ணும் ஆவப்போறதில்லேன்னு மட்டும் சொல்லிக்கிறேன். அதோட அப்புறம் இருக்குன்னு சொல்றவன் 'இல்லாதவன'ச் சுரண்டறான்னு இல்லனு சொல்றவங்க சொல்றதும், இல்லங்கறவன் வந்து தடியால போடுறான்னு இருக்குங்கறவங்க வந்து சொல்றதும் இப்ப எதுக்குண்ணேன்?

4 Comments:

  1. Geetha Sambasivam said...

    பர்ஷ்டு?
    "சிவாயநம" வென சிந்தித்திருப்போருக்கு
    அபாயம் ஒரு போதும் இல்லை! "
    :))))))))))


  2. rv said...

    கீதாக்கா,
    ஆம். பர்ஷ்டே தான்...

    சிவமயமே எங்கும் சிவமயமே! இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே!

    நன்றி.


  3. நாகை சிவா said...

    //சிவமயமே எங்கும் சிவமயமே! இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே!//

    நன்றி... நன்றி...


  4. rv said...

    புலி,
    நினப்புதான் பொழப்பக் கெடுக்குதுன்னு எங்கூர்ல சொல்வாங்க.. :)))))))

    நன்றிக்கு நன்னி!


 

வார்ப்புரு | தமிழாக்கம்