171. எப்படி எப்படி எப்படி?

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?

இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்! - ஏய்
இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்!

நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது
ஒன்று பட்டது வென்று விட்டது

கிறுகிறுங்குது குறுகுறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்!
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?





இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது.


குறிப்பு:

இப்பதிவிற்கு கண்டிப்பாக பின்னூட்டம் இடக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவீர்!

170. தீபாவளி நல்வாழ்த்துகள்!

வீரதீரத்துடன், அஞ்சாநெஞ்சத்துடன் சரவெடி வெடி வெடி!


விடுமுறை நாளிலும் ராக்கெட் ரிசர்ச்!


ராக்கெட்டின் பேர் ரோஹினி! PSLV என்று சைடில் வேறு எழுதியிருந்தது. அடாது மழைபெய்தாலும் விடாது டெஸ்ட் செய்தாகிவிட்டது.

அனைவருக்கும் இனிய தீபாளி நல்வாழ்த்துகள்!

169. சில புகைப்படங்கள்

மறுபடியும்...

சிலர் இது என்ன கோயில் என்பது போலக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக: இது தஞ்சாவூரில் உள்ள இராஜ இராஜேச்சுரம் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில்.

இறைவன்: பெரிய நாயகி (எ) பிரஹன்நாயகி உடனுறை பெருவுடையார் (எ) பிரகதீஸ்வரர்



1. நடராஜர் சந்நிதிக்கு அருகிலிருந்து. நந்தி மண்டபம் foregroundஇல்.



2. நாட்டிய அரங்கேற்றத்துகென்று இருக்கிற மேடையிலிருந்து - பிரசாதக் கடைப் பக்கத்தில் என்று சொன்னால் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.



3. ஆஞ்சநேய சுவாமி சந்நிதியிலிருந்து - பிக்காஸாவில் நிறைய பிஸ்கோத்துவேலை செய்து கலரே மாறிவிட்டது.



4. நுழைந்தவுடன் இடதுபுறத்தில் இருக்கிற இராகு சந்நிதி அருகிலிருந்து (a)


5. கால்நடை மருத்துவமனை அருகிலிருந்து (b)



6. மேம்பாலத்திலிருந்து (c)




----------------
(a) இவ்வளவு பெரிய கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால் பிரம்மாண்ட இராகு பகவான் மட்டும் உண்டு, இரண்டாவது கோபுரத்தைத் தாண்டிய உடனே அக்கோபுரத்திலேயே பெருவுடையாரைப் பார்த்தபடி இருக்கிறார் இராகு. இராஜ இராஜனுக்கு சதய நட்சத்திரம் என்பதால் அதன் அதிபதியான இராகுவை மட்டும் ஸ்தாபிதம் செய்திருக்கிறான் என்று ஐதீகம்.

(b) இவ்வழி வெளியூர்க்காரர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. சிவகங்கை பூங்கா நுழைவுவாயிலின் வழிவே நுழைந்தால், இடதுபுறம் செல்லும் சாலை ஏ.எஸ்.ஐ ஆபீஸ் தாண்டி நேரே இரண்டாவது கோபுரத்தின் அருகில் சென்று முடியும். இங்கே வண்டிகள் கூட்டமிருக்காது. செருப்பை காரிலேயே விட்டுவிட்டு செல்லலாம். பார்க்கிங் டோக்கனும் கிடையாது. :))

(c) இந்த viewவை மறைத்துத்தான் ராட்சத விளம்பரப் பலகைகள் வைக்கப்போய் சமீபத்தில் சர்ச்சையானது. பலகைக்கான எலும்புக்கூடுகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

 

வார்ப்புரு | தமிழாக்கம்