விநாயக சதுர்த்திக்கு

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குளிக்காமல் கொள்ளாமல் சந்துபொந்துகளுக்குள் நுழைந்தால் அழகான பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றுள் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து, கூடவே காட்டுப்பூக்கள், அருகம்புற்கட்டு, எறுக்கம்பூ மாலை, வாழைக்கன்று, தோரணங்கள் எல்லாம் வாங்கி வீட்டிற்குவந்து குளித்து பூஜை செய்து அவருக்கு வெறுமனே காட்டிவிட்டு அப்பம், தேங்காய் எள் மற்றும் உப்பு கொழுக்கட்டைகள், சுண்டல் எல்லாவற்றையும் உள்ளே தள்ளிவிட்டு இதோ இப்ப எடுத்த பிரெஷ் படங்கள் இரண்டு.



  

  

164. கோபுர தரிசனம்..


1. செந்திலாண்டவர் திருக்கோயில், திருச்செந்தூர்

  



2. பெருவுடையார் திருக்கோயில், தஞ்சாவூர் - அவ்வளவு சரியாக வரவில்லை

  



3. கூடலழகர் திருக்கோயில், மதுரை

  




4. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை

  




5. வாலீசுவரர் திருக்கோயில், வாலிகண்டபுரம்

  



6. ஜெயம்கொண்ட சோளீசுவரர் திருக்கோயில், நேமம் (காரைக்குடி)

  


7. வடபத்ரசாயி திருக்கோயில், திருவில்லிபுத்தூர்

  

ரஷ்யா-அமீரகம் கூட்டுச்சதி!

லெபனான் - இஸ்ரேல் பிரச்சனை, பிரிட்டன் விமான நிலையப் பீதி, சுதந்திர தின தடபுடல்கள் எனப்பல்வேறு விஷயங்கள் மக்களின் மனதை திசைத் திருப்பிக்கொண்டிருந்த பதினான்காம் தேதி பின்மாலை நேரம் மர்மமான முறையில் முற்றிலும் ரகசியமாக கும்மிருட்டில் ரஷ்ய மற்றும் அமீரகத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தனியே சதித்திட்டம் தீட்டப்போவதாக ஊகங்கள் சில நாட்களாக வந்தவண்ணம் இருந்தன. அவற்றை பொய்யென மறுத்துவந்த இருதரப்பினரும் சந்தித்து பேசியேவிட்டனர் என்று இப்போது கிட்டத்தட்ட ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. சரி, போதும் பில்டப்.

தன் குடும்பத்துடன் எங்க ஏரியா கோவில்களை ரவுண்ட் வந்துகொண்டிருந்த அரசியல் மற்றும் இணைய உலக வி.ஐ.பி ஒருவரை ஒருமணி நேரம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டேட் கேட்டிருந்தபோது, ஆடிட் வரப்போகும் மேலதிகாரி மாதிரி 12,13,14 தேதிகளில் ஏதோ ஒருநாள் தஞ்சை வருவேன் - சந்திக்கலாம் என்று முன்னரே தொலைபேசியிருந்தார். சொன்னவரைக் காணவில்லையே என்று நான் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு போன் செய்து இன்னும் அரைமணியில் கெஸ்ட் ஹவுஸிற்கு வரவும் என்று சொன்னார். இந்தியனாச்சே, பதினைந்து நிமிடம் லேட்டாக சென்று ஐந்துநிமிடம் காத்திருந்தேன். அதற்குள் அவரின் உறவினர் ஒருவர் வந்து ஐயா இப்போது வந்துவிடுவார் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஐயா ஏதோ முக்கியமான வேலையில் மூழ்கியிருக்கிறார் என்று எண்ணி நின்றிருந்தேன். அந்த ஏரியாவில் அப்போதுதான் புதிதாய்த் திறந்திருந்த ஒரு ரெஸ்டாரண்டை ஒரு வழிசெய்துவிட்டு வெற்றிச் சிரிப்புடன் வீறுநடை போட்டு வந்தார் எனதருமை அண்ணன், உலகத் தனிப்பெரும் கட்சியான ப.ம.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் பெனாத்தலார் சுரேஷ்.

வேட்டி, டி-ஷர்ட் என்று படு காஷுவலாக இருந்தவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, என்னைப்பார்த்து சிறிது நேரம் போட்டோவில் இருக்கிற மாதிரியே அச்சு அசலாய் இருக்கீறீர்களே என்று ஷாக்காகி நின்று விட்டார். தெளிவடைந்த பின் கெஸ்ட் ஹவுஸ் வாசலிலேயே பேச ஆரம்பித்தாகிவிட்டது. வழக்கமான வெட்டி சங்கதிகளோடு ஆரம்பித்த பேச்சு சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், லா.ச.ரா, சுரதா மறைவு என்றெல்லாம் திசைதிரும்பாமல் வெட்டியாகவே தொடர்ந்தது.

மாலையே பெரியகோவில் பார்க்கவருவதாய் வைத்திருந்த திட்டம் நிறைவேறாமல் தாமதமாகிப்போனதைப் பற்றியும், வரும் வழியெல்லாம் கர்நாடகா தராத காவேரியில் அடையாளப் போராட்டமாக சில பலமணி நேரம், இறங்கிக்குளித்ததையும் சொன்னார். வெட்டிப்பேச்சு வலைப்பதிவுகள் பற்றித் திரும்பாமல் போகுமா? முன்னர் மாதிரி பதிவுகள் இடமுடிவதில்லையென்றும் பின்னூட்டங்கள் போட முடிவதில்லையென்றும் பரஸ்பர ஆதங்கத்திற்கு பிறகு கணினியிலேயே உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிறேன் என்று கட்டுபவர்கள்தான் நிரந்தரமாக வலைப்பதிய முடியும் என்ற கசப்பான உண்மை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பின்னூட்ட மட்டுறுத்தல் இருக்கும் காலத்திலேயும் வேலை வெட்டியில்லாமல் சுகமாய் அமர்ந்து கொத்தனார் அறுநூறு எழுநூறு என்று புகுந்து விளையாடுவதே மேற்கூறிய தீர்மானத்திற்கு ஆதாரம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அஞ்சுக்கும் பத்துக்கும் நாம் அலைகையில் இது எப்படி சாத்தியம் என்பது குறித்தும் விசாரிக்க தனி கமிட்டி அமைக்கப்படும் என்றும் முடிவு செய்துள்ளோம். பேச்சு இப்படிப்போய் கொண்டிருக்கையில் பெனாத்தலாரை பின்னிருந்து இயக்கும் தங்கமணி(இவர் அவரில்லை! -தருமியின் சந்தேகம் தீர்க்க இந்த குறிப்பு) வரவே, அதுவரை ரகளை செய்துவந்த கொ.ப.சே பவ்யமாக எழுந்து நின்று என்னை அறிமுகப்படுத்தினார். மூன்றெழுத்தில் இவரோட மூச்சிருக்கும் என்றவுடன் அவர்களுக்கும் என்னை நினைவிற்கு வந்தது. மிகவும் லேட்டாகிவிட்டதால் பெனாத்தலாரின் அரசியல் வாரிசுகளைக் கவனிக்க சில நிமிடங்களில் உள்ளே சென்றுவிட்டார். 'அண்ணி' உள்ளே சென்றவுடன் மறுபடியும் புதுப்பொலிவு பெற்று துள்ளியெழுந்த பெனாத்தலார் சிறிது 'வாக்'கலாமே என்றார்.

நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று நான் தான் ஆனந்த் (எ) சின்னவனாய் இருக்கலாமோ என்று புதிதாய் ஒன்றை பற்றவைத்தார் பெனாத்தலார். அந்தக் கோணத்தில் யோசித்தால் சில கணக்குகள் சரியாகவும் வந்தது. இந்த சந்தேகமே சில அன்பான அர்ச்சனைகளுக்கு காரணமாய் இருக்கலாமோ என்றும் கேள்வி தோன்றியது. ஆனந்த் மன்னிக்க.

அடுத்த பார்டில் - அமெரிக்கா, மத்தியகிழக்கு, தென்கிழக்காசிய மற்றும் இந்திய பதிவர்/பதிவுகள்/தமிழ்மண ரவுண்டப்.

டிஸ்கி போடுவதில்லையென்ற புதிய கொள்கையினால் எதற்கு இது ஒரு தொடர்கதை என்று கேட்பவர்கள் அவர்களுக்குள்ளாகவே கேட்டு திருப்தியடைந்து கொள்ளலாம்.

161. படம் காட்டுகிறேன்

படம் காட்டி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், சில படங்கள்.









தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரம் - நம்மூரு வண்டி டிவிஎஸ் XL லேயும் சைக்கிள்களிலும் எடுத்துச் செல்லப்படும் பொருட்களே ஒரு தனி கேட்டகரி. தனியா ஒரு பதிவு போடணும். :)




திங்களூர் சந்திரன் கோயில் போகும் வழியில் கிராமத்து குளமும் ஆலமரமும்.


  

  


இந்த வயலும் அதே திங்களூர் ரோடுதான். திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ளது.

திங்களூர் தாண்டி வயிரவன்கோயில் போகும் சாலை.


  
பள்ளி அக்ரகாரம்.



  
தென்பெரம்பூர் ஷட்டர்ஸ். வெண்ணாறு, வெட்டாறு, புதாறு பிரியும் இடம்.

  





  
பழைய குற்றாலம் செல்லும் சாலையில் எடுத்தது.

 

வார்ப்புரு | தமிழாக்கம்