ரஷ்யா-அமீரகம் கூட்டுச்சதி!

லெபனான் - இஸ்ரேல் பிரச்சனை, பிரிட்டன் விமான நிலையப் பீதி, சுதந்திர தின தடபுடல்கள் எனப்பல்வேறு விஷயங்கள் மக்களின் மனதை திசைத் திருப்பிக்கொண்டிருந்த பதினான்காம் தேதி பின்மாலை நேரம் மர்மமான முறையில் முற்றிலும் ரகசியமாக கும்மிருட்டில் ரஷ்ய மற்றும் அமீரகத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தனியே சதித்திட்டம் தீட்டப்போவதாக ஊகங்கள் சில நாட்களாக வந்தவண்ணம் இருந்தன. அவற்றை பொய்யென மறுத்துவந்த இருதரப்பினரும் சந்தித்து பேசியேவிட்டனர் என்று இப்போது கிட்டத்தட்ட ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. சரி, போதும் பில்டப்.

தன் குடும்பத்துடன் எங்க ஏரியா கோவில்களை ரவுண்ட் வந்துகொண்டிருந்த அரசியல் மற்றும் இணைய உலக வி.ஐ.பி ஒருவரை ஒருமணி நேரம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டேட் கேட்டிருந்தபோது, ஆடிட் வரப்போகும் மேலதிகாரி மாதிரி 12,13,14 தேதிகளில் ஏதோ ஒருநாள் தஞ்சை வருவேன் - சந்திக்கலாம் என்று முன்னரே தொலைபேசியிருந்தார். சொன்னவரைக் காணவில்லையே என்று நான் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு போன் செய்து இன்னும் அரைமணியில் கெஸ்ட் ஹவுஸிற்கு வரவும் என்று சொன்னார். இந்தியனாச்சே, பதினைந்து நிமிடம் லேட்டாக சென்று ஐந்துநிமிடம் காத்திருந்தேன். அதற்குள் அவரின் உறவினர் ஒருவர் வந்து ஐயா இப்போது வந்துவிடுவார் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஐயா ஏதோ முக்கியமான வேலையில் மூழ்கியிருக்கிறார் என்று எண்ணி நின்றிருந்தேன். அந்த ஏரியாவில் அப்போதுதான் புதிதாய்த் திறந்திருந்த ஒரு ரெஸ்டாரண்டை ஒரு வழிசெய்துவிட்டு வெற்றிச் சிரிப்புடன் வீறுநடை போட்டு வந்தார் எனதருமை அண்ணன், உலகத் தனிப்பெரும் கட்சியான ப.ம.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் பெனாத்தலார் சுரேஷ்.

வேட்டி, டி-ஷர்ட் என்று படு காஷுவலாக இருந்தவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, என்னைப்பார்த்து சிறிது நேரம் போட்டோவில் இருக்கிற மாதிரியே அச்சு அசலாய் இருக்கீறீர்களே என்று ஷாக்காகி நின்று விட்டார். தெளிவடைந்த பின் கெஸ்ட் ஹவுஸ் வாசலிலேயே பேச ஆரம்பித்தாகிவிட்டது. வழக்கமான வெட்டி சங்கதிகளோடு ஆரம்பித்த பேச்சு சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், லா.ச.ரா, சுரதா மறைவு என்றெல்லாம் திசைதிரும்பாமல் வெட்டியாகவே தொடர்ந்தது.

மாலையே பெரியகோவில் பார்க்கவருவதாய் வைத்திருந்த திட்டம் நிறைவேறாமல் தாமதமாகிப்போனதைப் பற்றியும், வரும் வழியெல்லாம் கர்நாடகா தராத காவேரியில் அடையாளப் போராட்டமாக சில பலமணி நேரம், இறங்கிக்குளித்ததையும் சொன்னார். வெட்டிப்பேச்சு வலைப்பதிவுகள் பற்றித் திரும்பாமல் போகுமா? முன்னர் மாதிரி பதிவுகள் இடமுடிவதில்லையென்றும் பின்னூட்டங்கள் போட முடிவதில்லையென்றும் பரஸ்பர ஆதங்கத்திற்கு பிறகு கணினியிலேயே உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிறேன் என்று கட்டுபவர்கள்தான் நிரந்தரமாக வலைப்பதிய முடியும் என்ற கசப்பான உண்மை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பின்னூட்ட மட்டுறுத்தல் இருக்கும் காலத்திலேயும் வேலை வெட்டியில்லாமல் சுகமாய் அமர்ந்து கொத்தனார் அறுநூறு எழுநூறு என்று புகுந்து விளையாடுவதே மேற்கூறிய தீர்மானத்திற்கு ஆதாரம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அஞ்சுக்கும் பத்துக்கும் நாம் அலைகையில் இது எப்படி சாத்தியம் என்பது குறித்தும் விசாரிக்க தனி கமிட்டி அமைக்கப்படும் என்றும் முடிவு செய்துள்ளோம். பேச்சு இப்படிப்போய் கொண்டிருக்கையில் பெனாத்தலாரை பின்னிருந்து இயக்கும் தங்கமணி(இவர் அவரில்லை! -தருமியின் சந்தேகம் தீர்க்க இந்த குறிப்பு) வரவே, அதுவரை ரகளை செய்துவந்த கொ.ப.சே பவ்யமாக எழுந்து நின்று என்னை அறிமுகப்படுத்தினார். மூன்றெழுத்தில் இவரோட மூச்சிருக்கும் என்றவுடன் அவர்களுக்கும் என்னை நினைவிற்கு வந்தது. மிகவும் லேட்டாகிவிட்டதால் பெனாத்தலாரின் அரசியல் வாரிசுகளைக் கவனிக்க சில நிமிடங்களில் உள்ளே சென்றுவிட்டார். 'அண்ணி' உள்ளே சென்றவுடன் மறுபடியும் புதுப்பொலிவு பெற்று துள்ளியெழுந்த பெனாத்தலார் சிறிது 'வாக்'கலாமே என்றார்.

நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று நான் தான் ஆனந்த் (எ) சின்னவனாய் இருக்கலாமோ என்று புதிதாய் ஒன்றை பற்றவைத்தார் பெனாத்தலார். அந்தக் கோணத்தில் யோசித்தால் சில கணக்குகள் சரியாகவும் வந்தது. இந்த சந்தேகமே சில அன்பான அர்ச்சனைகளுக்கு காரணமாய் இருக்கலாமோ என்றும் கேள்வி தோன்றியது. ஆனந்த் மன்னிக்க.

அடுத்த பார்டில் - அமெரிக்கா, மத்தியகிழக்கு, தென்கிழக்காசிய மற்றும் இந்திய பதிவர்/பதிவுகள்/தமிழ்மண ரவுண்டப்.

டிஸ்கி போடுவதில்லையென்ற புதிய கொள்கையினால் எதற்கு இது ஒரு தொடர்கதை என்று கேட்பவர்கள் அவர்களுக்குள்ளாகவே கேட்டு திருப்தியடைந்து கொள்ளலாம்.

17 Comments:

  1. G.Ragavan said...

    ஆகா தொடங்கீட்டாருய்யா வைத்தியரு. காவிரி தராத கலைச்செல்வர்கள்னு பட்டம் குடுத்துருவோமா!

    அடுத்த பதிவுல என்னென்ன பேசுனீகன்னு ஆருவமா இருக்கோம்யா!


  2. தருமி said...

    தஞ்சாலூரு வந்தாச்சா ...சொல்லவேயில்லை


  3. rv said...

    ஜிரா,
    காவிரி தராம வோட்கா தந்தா என்னன்னு பட்டம் தருவீங்க? பெனாத்தலார் வந்து எனக்கு டின்னு கட்டிடுவாரு, உங்க ஆர்வத்துக்கெல்லாம் தீனி போட்டா. :))


  4. rv said...

    பெரீய்ப்பா,
    வந்தாச்சு. சொல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க.

    நம்பர தனி மடல்ல அனுப்புங்க. காலரேன். :)


  5. rv said...

    மோகன்தாஸ்,
    தனிமடல் பாருங்க.


  6. குமரன் (Kumaran) said...

    :=)))


  7. rv said...

    கும்ஸ்,
    இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்? உள்குத்து மேட் ஈஸியில ஏதாவது டெபனிஷன் இருக்கா? இல்லை சாதாரணமா சிரிச்சு வப்போமேன்னு சிரிச்சி வச்சீங்களா?


  8. சின்னவன் said...

    பெனாத்தலாரே
    கூட்டுக் குடும்பத்தில் குழப்பம் வரலாமா ?

    இரேசு,
    அர்ச்சனை ஏதோ இட ஒதுக்கீடு பற்றி போல இருக்கிறது. நமக்கு தெரிந்தது எல்லாம் இடை ஓதுக்கீடு மட்டும்தேன்.

    எல்லாம் அந்த இராம இராம னுக்கே வெளிச்சம் !


  9. இலவசக்கொத்தனார் said...

    என்னடா விஷயமுன்னு யோசிச்சேன். அங்க புகைஞ்சதுதான் இங்க வரை ஒரு தீய்ஞ்ச வாசனை அடிச்சுதா? உங்களால முடியலைன்னா அடுத்தவனை ஏன்யா இப்படி பண்ணறீங்க? சரி விடுஙக. நான் மன்னிப்போம் மறப்போம் கொள்கைப்படி விடறேன். நீங்களும் இந்த மாதிரி உட்கட்சிப் பூசல் எல்லாம் இல்லாம பாத்துக்குங்க.


  10. rv said...

    பார்டு,
    இடை ஒதுக்கீடு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தான். அதுல ஒதுக்கீடோ பங்கீடோ கொடுத்தாக்க எனக்கும் சொல்லிடுங்க. :))

    பெனாத்தலார் பணி பெனாத்துவதேன்னு சொல்லிருப்பாரோ?


  11. rv said...

    கொத்ஸு,
    தீய்ஞ்ச வாசனைல்லாம் இல்லிய்யா.. முழு நேரமும் கமெண்ட் மாடரேஷன் செஞ்சாலே ஒழிய இது சாத்தியமில்லேன்னு மட்டும் தெரியும். அந்த மாதிரி மேனேஜர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமில்லியா..


  12. இலவசக்கொத்தனார் said...

    //முழு நேரமும் கமெண்ட் மாடரேஷன் செஞ்சாலே ஒழிய இது சாத்தியமில்லேன்னு மட்டும் தெரியும். //

    ஆஹா என்ன சொல்ல வறீங்கன்னு நல்லா புரியுது. அதாவது இ.கொ. என்பவர் ஒரு ஆளில்லை. சிங்கையில் ஒருவர், இந்தியாவில் ஒருவர், லண்டனில் ஒருவர், அமெரிக்காவில் ஒருவர் என நான்கு பேர் கொண்ட குழு இது. அப்படி இப்படின்னு நம்மளைப் பத்தி கிசுகிசு எழுதணும். அதுதானே உம்ம ஆசை?!

    நல்லா இருங்கடா சாமிகளா!


  13. பொன்ஸ்~~Poorna said...

    //முழு நேரமும் கமெண்ட் மாடரேஷன் செஞ்சாலே ஒழிய இது சாத்தியமில்லேன்னு மட்டும் தெரியும். //
    //அதாவது இ.கொ. என்பவர் ஒரு ஆளில்லை. சிங்கையில் ஒருவர், இந்தியாவில் ஒருவர், லண்டனில் ஒருவர், அமெரிக்காவில் ஒருவர் என நான்கு பேர் கொண்ட குழு இது. //

    எனக்குக் கூட அதே சந்தேகம் தான்.. முடிஞ்சா இது பத்தி விசாரிங்களேன் ராம்ஸ்..
    புதரகம் போயும் மனுஷனைப் பார்க்கவே முடியலை, இருபத்தி நாலு மணி நேரமும் ஆன்லைனில் தெரியறார்.. குறைஞ்ச பட்சம் இரண்டு பேராவது இருக்கணும்.. ஆப்ஷோர், ஆன்சைட், இப்படி 24 ஹவர் கவரேஜ்


  14. rv said...

    கொத்ஸு,
    //நான்கு பேர் கொண்ட குழு இது//
    ஹி ஹி.. அதான் தெரிஞ்ச விஷயமாச்சேய்யா..

    இலவசம் மட்டும்தானா.. இல்ல இதே டைப்ல வேற எங்கயாச்சும் கடை நடத்துறீரா??


  15. rv said...

    பொன்ஸ்,
    //இருபத்தி நாலு மணி நேரமும் ஆன்லைனில் தெரியறார்.. குறைஞ்ச பட்சம் இரண்டு பேராவது இருக்கணும்.. ஆப்ஷோர், ஆன்சைட், இப்படி 24 ஹவர் கவரேஜ் //
    உண்மை உண்மை. இதப்பத்தி விசாரிக்கணும்.

    வேலையே செய்ய வேண்டாத ஒரு ஆபீஸா... அது எங்க இருக்குன்னு தெரியல. இருந்தா நாமளும் சேந்துகிட்டு கொஞ்சம் விளையாடலாம் பாருங்க. அதுல ஓசியில இண்டர்நெட்டும் கொடுத்து, இருக்க இடமும் கொடுத்து வச்சுருக்காங்க.

    விடியோ கேம் டெஸ்டர்லாம் இருப்பாங்களே.. அந்த மாதிரி எழுநூறு ஆயிரம் பின்னூட்டம்லாம் வாங்கி, இருக்கற ஒரு கோடி பதிவுகளிலும் ஒரே அக்கவுண்டிலிருந்து பின்னூட்டம் போட்டு - இப்டியெல்லாம் செஞ்சா ஸிஸ்டம் ஸ்டேபிளா இருக்கான்னு சோதிச்சு பார்க்க பிளாக்ஸ்பாட்டே இந்தாள வேலைக்கு வச்சுருப்பாங்களோ?


  16. இலவசக்கொத்தனார் said...

    நடத்துங்க. ஐயாம் தி வெயிட்டிங்.


  17. rv said...

    வெயிட்டிங்கா???

    அதான் ஒரு படைய கூட்டி வச்சுருக்கீரே? கட்சி பேரச் சொல்லி சேர்த்ததுதானே?

    தேவ் கிட்டதான் நல்லா விசாரிக்கணும். அவர்தான கொத்தவரங்கா சங்க அமைப்பாளரு? ஒரு பத்துபேரு சேர்ந்து, ஒரு டைம் ஜோன் விவஸ்தையில்லாம, உங்களுக்குள்ளேயே பின்னூட்டமா போட்டு தாக்கிக்கறீங்களா?


 

வார்ப்புரு | தமிழாக்கம்