கந்தர் அனுபூதி: audio

நம்ம ராகவன் சைலண்டா கந்தர் அலங்காரம் பத்தி ஒரு அருமையான பதிவு ஆரம்பித்துள்ளார்.

எதோ என்னாலானது. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியிலிருந்து விஜய் சிவா சில பாடல்களை அருமையாகப் பாடியுள்ளார். எல்லாருக்கும் புரியற மாதிரி எளிமையான தமிழில் தான் பல பாடல்களும் இருக்கு. அதை வலையில் ஏற்றியுள்ளேன்.

சுட்டி இங்கே.

கேட்டுப்பாருங்க.
___________________________
குறிப்பு:
--
Чтобы скачать запрашиваемый вами файл, нажмите на ссылку:

http://ramblog.narod.ru/KandarAn.rm

Компания "Яндекс", владелец Народ.Ру, никак не связана с авторами и содержанием этого файла (см. Пользовательское Соглашение ). Оценка возможного риска , связанного с безопасностью загрузки данного файла, ложится на вас. Будьте внимательны!
---
மேலேயுள்ள பாட்டுக்கான லின்க்க க்ளிக் பண்ணா இப்படி வருதுன்னு சில பேர் சொன்னாங்க. தீர்வு: நடுவுல highlight-ஆன http://ramblog.narod.ru/KandarAn.rm லின்க்-க க்ளிக் பண்ணா ரியல் ப்ளேயர்ல பாடும். இல்ல லின்க்-க right click பண்ணி 'save target as' கொடுத்து உங்க வன் தகட்டிலும் இறக்கிக்கொள்ளலாம்.
__________________________


வரிகள் இங்கே




அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி

காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.



நூல்
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. 1

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே. 2

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே. 6

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7

அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. 8

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே. 11

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 15

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49

மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51

திருச்சிற்றம்பலம்
---------
(courtesy: project madurai)

4 Comments:

  1. J.p. said...
    This comment has been removed by a blog administrator.

  2. G.Ragavan said...

    நான் சந்தோஷக் கடலில் திக்குமுக்காடிக்கிட்டு இருக்கேன் ராமநாதன். நன்றி. நன்றி.

    இப்பத்தான் லேசா பயம் வருது. சிறப்பாச் செய்யனுமே.

    கந்தரலங்காரம் முடிஞ்சதும் கந்தரநுபூதிதான்.


  3. rv said...

    நன்றி ராகவன்,
    தொடர்ந்து பதியுங்கள்..


  4. rv said...

    நன்றி மஞ்சுளா


 

வார்ப்புரு | தமிழாக்கம்