உங்கள் வாழ்க்கை விற்பனைக்கு!

இன்று கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட இணையதளங்களில் காரசாரமாய் அவுட்சோர்சிங் பற்றி சண்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் பிரிட்டிஷ் tabloid பத்திரிகையான சன்-னில் வெளிவந்த இந்த செய்தியும் இன்னமும் சூட்டைக் கிளப்பிருக்கிறது.

டெல்லியை சேர்ந்த ஒரு ஐ.டி ஊழியர் தலைக்கு வெறும் 4.75 பவுண்டுகள் வாங்கிக்கொண்டு 1000-த்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களின் வங்கி கணக்குவழக்கு, கடவுச்சொற்கள், தனிப்பட்ட விவரங்கள் என்று விற்றுள்ளார். மாதத்திற்கு 2000-மாவது மேலும் சப்ளை செய்ய முடியுமென்று வேறு பிதற்றியுள்ளார்.

//
CROOKED call centre workers in India are flogging details of Britons’ bank accounts, a Sun probe has found. //

டெல்லியில் ஒருவரால் செய்யப்பட்ட விஷயம் இந்தியா முழுவதுமுள்ள எல்லா கால்செண்டர்களிலும் இத்தகைய வசூல்ராஜாக்களால் நடக்கிறது என்று பொருள்படும்படி, வேண்டுமென்றே திரிக்கப்பட்டிருப்பதாக எண்ணத்தோன்றுகிறது.

தவறு நிகழ்ந்தது உண்மைதான். சம்பந்தப் பட்டவர் மேல் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது. அதை இந்தியா செய்யவேண்டும்.

மற்றபடி இந்த சன்-னும் இன்னும் பல இணையங்களும் வேண்டுமென்றே குறிப்பிட மறுப்பது: இது ஒன்றும் முதல்முறையாக நடக்கும் விஷயமில்லை. அவர்கள் நாடுகளிலும் இது போன்று fraud நடந்து வந்தேதான் உள்ளது. இதில் என்னமோ, பல போரம்களிலும் தளங்களிலும், இந்தியாவில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதனால் இந்திய கால் செண்டர் ஊழியர்கள் எதையும் செய்யத்தயங்க மாட்டார்கள் என்று கொஞ்சம் racist-ஆகவே விமர்சிக்கின்றனர். குறைந்த சம்பளம், நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அது மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும்போது தான். இந்திய நிலையில் பார்த்தால் மிகவும் நல்ல சம்பளமாகவே தெரிகிறது. என்ன டெல்லியில் 250Rs கொடுத்தால் ஒரு ஆளின் பெயர் கிடைக்கும். 500Rs ஆகக்கொடுத்தால் லண்டனிலும் நியு யார்க்கிலும் இதே தகவல்களை வாங்கலாம்.இல்லையா? சீப்பாக கிடைப்பது தான் பிரச்சனையா? இல்லை கிடைப்பதுவே பிரச்சனையா?

இந்தியாவையும் சீனாவையும் போட்டு மெல்லாமல் இருக்கு முடியாது என்று நினைக்கிறேன். இந்த வேலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துதல் என்ற வாதமே எனக்கு புரியவில்லை. இப்படி செய்வது யார்? அமுதா பேன்ஸி ஸ்டோரா? இல்லை உங்கள் தெரு டீக்கடையா? மைக்ரோசாப்ட், ஓராக்கிள், டெல் எல்லாம் சர்வதேச நிறுவனங்கள். அவர்களுக்கு எங்கு சவுகரியமோ அங்கே ஆட்களை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். மனித உரிமை பாதிப்பு பிரச்சனை அல்லவே இது. லாபத்தைக் குறித்த பிரச்சனை மட்டுமே.

மெக்டானல்ட்ஸ் அமெரிக்காவில் உதித்ததென்பதற்காக உலகம் முழுவதும் வேறெங்கும் கிளைகள் வைக்கக்கூடாது என்றோ இல்லை எல்லா வெளிநாட்டுக் கிளைகளிலும் அமெரிக்கர்களையே வேலைக்கு வை என்றோ கூறுவது போல் அபத்தமாகவே எனக்கு தோன்றுகிறது.

பிகு: நான் கணினித்துறையை சாராதவன் ஆதலால் ஊடகங்கள் மூலம் வெளியாவதையும், என் நண்பர்களையும் வைத்தே இந்த என் கருத்து. இதில் பரிச்சயமுள்ளோர் கூறினால் நன்றாக இருக்கும்.

3 Comments:

  1. பரணீ said...

    ராமனாதன், நீங்கள் கூருவது உண்மைதான்.
    அனைத்து ஊடகங்களும் இதனை ஊதி ஊதி பெருதாக காமிக்க முயல்கின்றன.
    ஒவ்வொரு பிரித்தானிய பத்திரிக்கையிலும் முக்கிய செய்தி இதுதான்.

    பரணீ
    http://blog.baranee.net


  2. பரணீ said...

    இங்கு கொஞ்சம் வேறு மாதிரியான தகவல்

    http://www.theinquirer.net/?article=24172


  3. rv said...

    பரணீ அவர்களே
    பின்னூட்டத்திற்கும் சுட்டிக்கும் நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்