சாவிகளும் பாவிகளும்

கொஞ்சம் பிசியாக இருப்பதால் எனக்குப் பிடித்த தமிழ்ப்பாடல்கள் சிலவற்றின் வரிகளை போஸ்ட் பண்ணலாமேயென்று தோன்றிற்று. இந்த மாதிரியே கொஞ்ச நாள் தொடர உத்தேசம்.

நவசித்தி பெற்றாலும் - நீலகண்ட சிவன்

நவசித்தி பெற்றாலும் சிவபக்தி இல்லாத நரர்கள் வெறும் சாவி
எவர் புத்தியும் தள்ளி சுயபுத்தியும் இல்லாதிருப்பவர் பெரும்பாவி

நாதன் அருள் மறந்து போதமில்லா கூற்று நடிப்பவர் வெறும் சாவி
சீத்தமதி யணியும் சிவனை நினையாமல் இருப்பவர் பெரும்பாவி

தாய் தந்தை மனம் நோகச்செய்கின்ற குருத்துரோகத் தலைவர்கள் வெறும் சாவி
நாய்ப்போல் எவரையும் சிறீச் சண்டைத் தொடரும் நலங்கெட்டோர் பெரும்பாவி

பாவமும் புண்ணியமும் கணியாமல் பணத்திற்கே பறப்பவர் வெறும் சாவி
கோபமும் லோபமும் கொண்டு நல்லகுணத்தைக் குலைப்பவர் பெரும்பாவி

கேட்டும் கண்டும் அநுபவித்தும் உண்மையுணரா கர்விகள் வெறும் சாவி
என்றும் வாட்டமில்லாத கதி கொடுக்கும் நீலகண்டனின் அன்பில்லார் பெரும்பாவி

0 Comments:

 

வார்ப்புரு | தமிழாக்கம்